Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா:-

26 பெப்ரவரி 2016
 
 

 

வெள்ளிக்கிழமை+ சேலை+ தாடி+ பறை+ நாய்= தமிழர் பண்பாடு: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா:-

 

கடந்த 17 ம் திகதி யாழ்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க கூட்டமொன்று நிகழ்ந்தது. கூட்டத்தின் முடிவிற் கலைப்பீடாதிபதி தமிழ் மக்களின் பண்பாட்டினைப் பேணும் நோக்கத்துடன் சில விதிகளை அறிமுகப்படுத்தி அவற்றை மாணவர்கள் பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறு கோரும் ஆவணம் (அ4 அளவு கொண்டது) ஒன்றிற் கையொப்பமிட்டார்.

மூச்சை நன்கு உள்ளிழுத்துத் தலையை நிமிர்த்தி கூடியிருந்தவர்களை ஒரு முறை பார்த்து விட்டே அவர் அவ்வாணத்திற் கையொப்பமிட்டதாகவும் ஏனையவர்களும் மெய் சிலிர்த்துக் கண்ணீர் மல்க அதனைப்பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தற்பொழுது கதைகள் உலாவரத் தொடங்கியிருக்கின்றன.

குறித்த ஆவணம் ஊடகங்களில் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.

வெள்ளிக்கிழமைகளில் சேலை அணியாத பெண்களாலும்  விரிவுரைகளின் போது ஜீன்சும் ரீ சேட்டும் அணியும் மாணவர்களாலும், தாடி வளர்த்திருக்கும் ஆண் மாணவர்களாலும்  கடந்த ஒரு தசாப்பதமாக தமிழர்களின் பண்பாடு சிதைவுற்று வந்ததாகப் பலரும் குறை கூறிவந்த நிலையிலேயே தாங்கள் இம் முடிவை எடுக்க நேர்ந்ததாகக்  கலைப்பீடத்தின் சார்பிற்  குரல் தரவல்ல ஒருவர் கூறியுள்ளார்.  

இந்நடவடிக்கையை  இந்திய ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  தூண்டுதலால் தாம் மேற்கொள்ளவில்லை எனவும் இலங்கையில் நிலவும் இன நல்லிணக்கச் சூழலில் இத்தகைய உடைக்கட்டுப்பாட்டு ஒழுக்கக் கோவையைத்  தமிழ்மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தி இப்பண்பாட்டுப்புரட்சியினுள் முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களை உள்வாங்காமல் விட்டமை  இனப் பாரபட்டசமாகவும் விளங்கப்பட்டுள்ளதால் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லீம் மற்றும் சிங்கள மாணவர்களுக்கும் உடை ஒழுக்கக் கோவை ஒன்றைத்  தயாரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஞானசாரதேரர் பிணையில் வெளிவந்து விட்டபடியால் சிங்கள மாணவர்களுக்கான ஒழுக்கக்கோவையை இனி விரைவில் தயாரித்து விடலாம் என்று குறிப்பிட்ட அவர் முஸ்லீம் மாணவர்களுக்கான உடை மற்றும் தோற்ற ஒழுக்கக்கோவையைத் தயாரிப்பதற்காக மத்திய கிழக்கில் உள்ள ஐ .எஸ். எஸ் இயக்கத்தைத் தொடர்பு கொள்ள முயற்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். துருக்கி, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐ.எஸ்.எஸ் உடன் நடக்கும் வருடாந்தச் சந்திப்பின் போது இது பற்றிப் பேசுவதாக வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பாரிய பண்பாட்டுப் பேணுகையின் தார்ப்பரியம் புரியாமல் தென் இந்திய எழுத்தாளரும்  தலித் செயற்பாட்டாளருமான ரவிக்குமார் அவர்கள்   இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம் “ என மேற்குறித்த  ஆவணத்தின் மீது தனது கண்டனத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். குறித்த பதிவை வாசித்த தமிழ் பண்பாட்டுப் பாதுகாவலர்களில் ஒருவரான  ராமசாமி துரைரத்தினம் என்பவர் மனமுடைந்து திரு முத்துக்குமார் அவர்கள் போற் தற்கொலை செய்யாமல் திரு ரவிகுமார் அவர்களைத் திட்டுவதாக நினைத்துக் கொண்டு “பற நாயே” எனக் கூறியுள்ளார். தூ!ரை (மன்னிக்கவேண்டும் எழுத்துப்பிழை)    பற நாயே” எனத் திட்டியதா? அல்லது  பறை நாயே”  எனத் திட்டியதா? (திணை வழு  அமைதிகொள்ளும்). என்பதை இன்னும் உறுதி செய்துகொள்ள முடியவில்லை. நாய்கள் பறப்பதில்லை என்பதால் அது பறை என்பதாகத்தான்  இருக்க வேண்டும் என்கிறார்கள் மொழியிலாளர்கள். பண்டைக்காலத்தில் பறை தமிழர்களின் வாழ்வின் இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருந்த வாத்தியம். நாய்கள் மனிதர்க்கு வரும் ஆபத்தை முன்னறிவிப்பவர்கள். (திணை வழு  அமைதிகொள்ளும்). தனிமையிலும் வயோதிபத்திலும் ஊனத்திலும் உறுதுணையாய் இருப்பவர்களும்  நாய்கள்தான்.  எனவே ரத்தினம் திட்டுவதாக நினைத்துக்கொண்டு வாழ்த்தியிருக்கிறது என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.

பண்பாடு கலாசாரம் போன்ற பதங்கள்  ஒரு சமூகத்தின் எல்லாவிதமான  அறிவுகளையும் அறிவீனங்களையும் அழுக்குத் தனங்களையும் தூய்மைகளையும் உள்ளடக்கிக் குறிக்கப் பயன்படுபவை.  அவைதனியே ஒரு சமூகத்தின் உயர்ந்த விழுமியங்களை மட்டும் குறிக்கப்பயன்படுபவை அல்ல. உலகின் எல்லாப்பண்பாடுகளும் தாய்வழிச் சமூகத்தின் அழிவின் பின்னர் ஆண்மையவாத அல்லது மத மையவாத அல்லது இவை இரண்டும் இணைந்து கோலோச்சுகிற  போக்கையே கொண்டுள்ளன. பண்பாட்டை யாராவது பாதுகாக்க விரும்பினால் முதலில் அவர்கள் தமது பண்பாடு மற்றும் கலாசாரம் பற்றிய கேள்விகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

எந்தப்பண்பாட்டிலும் குறித்தவொரு அம்சம் முற்போக்கானதா? பாலொடுக்குமுறையை ஊக்குவிக்கிறதா?  சூழலியல் மற்றும் தனிமனிதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறதா? சனநாயக விழுமியங்களை உயர்த்துகிறதா?  என்பது போன்ற கேள்விகள் இங்கு முக்கியமானவை.

தனது  விழுமியங்களைக்  கேள்விக்குள்ளாக்காத கேள்விக்குள்ளாக்க விரும்பாத ஒரு சமூகம் விதிக்கும் விதிகளோ ஒழுக்கக் கோவையோ எப்படி இருக்கும்?

பருவ வயதைக் கடந்து முதிர்ச்சி அடைந்த மாணவர்கள்  கற்கிற கல்விற்சாலையில்,  மாணவர்கள் என்ன உடையை அணிய வேண்டும் என்பதைப் பல்கலைக்கழகம் தீர்மானிப்பதை என்ன வென்று சொல்ல?

சேலை அணிந்த மாணவிகளைப் படுக்கைக்கு அழைத்த விரிவுரி- யாளர்களை ( எழுதுப்பிழை என நினைக்க வேண்டாம்) யாழ்ப்பல்கலைக்கழகம் அறிய மாட்டாதா?

பெண்ணின் உடலை முழுமையாகவோ பகுதியாகவோ காணும் போது முறையற்று நடந்து கொள்ள ஒரு ஆண் துணிவதற்கு, ஆண்களுக்கு  சமூகம் அளித்திருக்கும் பாதுகாப்பும் அங்கீகாரமுமே காரணம்.

பல்கலைக்கழகங்கள் சனநாயகத்தின் பிறப்பிடங்களாக இருக்க வேண்டும். பண்பாடின் பிற்போக்கான அம்சங்களை கேள்விக்குட்படுத்திப் புதிய பண்பாட்டுப்பிறப்பிற்கு அடித்தளம் அமைப்பனவாக இருக்க வேண்டும்.

மத்திய தரைக்கோட்டுக்கு அண்மையில் வாழும் மக்களிற் பெரும்பாலானவர்கள் தங்களின் சீதோஷண நிலைக்கேற்ப உடை அணிவதில்லை.  தமிழ்ச் சமூகமும் தனது பாரம்பரியங்களில் உள்ள நல்ல விடையங்களை எடுத்துக் கொண்டு மாறிவரும் உலக நிலைமைகளுக்கு ஏற்பவும் கால நிலைக்கேற்பவும் பாதுகாப்பானதும் இயல்பான இயக்கத்திற்குத்  தடையாக அமையாததுமான புதிய ஆடை வடிவமைப்புகளைச் செய்ய முனையலாம் . அதற்கான உந்துதலைக் கொடுப்பதாக பல்கலைக் கழகங்கள் அமையலாம்.

தேவஅபிரா

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129379/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

எப்படா ஒருத்தன் சாதி பற்றி பேசுவான் என்றிருக்கிறவை போல.

உடன கட்டுரைகள் கதைகள் என்று நீட்டி முழக்கி..  எங்கோ ஒரு மூலைக்குள் ஓரிருவருக்குள் பதுங்கிக் கிடக்கும் அசிங்கங்களை சமூகத்தில் பரப்பி விடுவதில் எம்மில் சில ஊடகங்களும் சில இணைய வழிப்போக்கர் எழுத்தாளர்கள் என்று சுயநாமம் இட்டோரும் அற்ப விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக் மார்க்.. சொன்னது போல.. முகநூலை சமூகச் சீரழிவு வேலைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இன்றேல்.. அசிங்கமே உலகை ஆளும் நிலை வரும். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூகவலைத் தளங்களில் எதையும் எழுதலாம் என்று நினைத்த இரா. துரைரத்தினத்தார் யாழில் இணைந்து கருத்தாடல் செய்திருந்தால் ஒரு பக்குவமும் முதிர்ச்சியும் வந்திருக்கும்.

நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

கட்டுப்பாடில்லாத நாக்கு ஒருவனுக்கு ஏற்படுத்தும் துன்பங்களும், பிரச்னைகளும் கணக்கில் அடங்காதவை. எனவே வேறெதைக் கட்டுப்படுத்த முடியா விட்டாலும் நாக்கையாவது கட்டுப்படுத்தச் சொல்கிறார் வள்ளுவர். இன்றைய சமூகவலை உலகில் கைவிரல்களைக் கட்டுப்படுத்தினால் குறைந்தபட்சம் நாகரீகமுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ளலாம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொருக்கால் ஆறுமுகத்தை பற தெமிழோ என்று சொல்லி விட்டு பிறகு "பெற" என்றே அதாவது வெளியில் இருந்து வந்த தமிழன் என்றேதான் கூறியதாய் பசில் சமாளித்தார்.

அப்படி ஏதும் சொல்லி தப்பிக்க பாருங்க தூ! ரை ரட்ணம் ஸார்.

அல்லது மலையாளத்தில் பற (சொல்லு) என்று கூறியதாய் சொல்லியும் தப்பிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தவறு செய்தவனை.. மன்னிக்கலாம்!

ஆயினும் அந்தத் தவறை நியாயப்படுத்துபவனை ஒரு நாளும் மன்னிக்க முடியாது!

கறந்த பால்...முலைக்கேறும் என்பது அதீதமான கற்பனையாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை,

நான் மேலே எழுதியிருப்பது sarcasm, அங்கதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.