Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணவக்கொலை: எமனாக வந்த போன் கால்... கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் தப்பிய இவர் போன்ற மூர்க்கரிடம் ஞாயம் கேட்பது, தடுத்து நிறுத்துவது நினைத்தும் கூட பார்க்க முடியவில்லை. ஒட்டு மொத்தமாக வேடிக்கை பார்த்தவர்கள் நாற்பது பெரும் சேர்ந்து போய் ஒன்றாக  தடுதிருந்தாலோ அல்லது ஒரு வேலை துப்பாக்கி இருந்திருந்தாலோ சாத்தியமாகலாம்.tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

ஒரு அழகிய பூமாலையொன்று ஆரியக் குரங்குகளின் சிக்கி விட்டதனால்...வந்த விளைவே இந்து மதம் என்பது....!

புத்தர் காலத்தில் .. ஓம குண்டங்களில் மிருகங்களைத் தீயிட்டு எரித்து அதனை ஆரியர்கள் உண்டார்கள்! அதனை இந்து மதம் நியாயப் படுத்தியது!

புத்தன் ஏன் அந்த மிருகங்களை ..அநியாயமாக நெருப்பில் எரிக்கின்றீர்கள் என்று கேட்டார்!

அதற்கு.. ஆரியர்கள்.. அந்த மிருகங்கள் மோட்சத்துக்குப் போகின்றன ..அவற்றிற்கு நான் உதவுகின்றோம் என்றார்கள்!

ஓகோ.. அப்படியானால்..நீங்கள் ஏன் பூஜை, புனஸ்காரம் எண்டு மினக்கடுகின்றீர்கள்? நீங்களும் அந்த ஓம குண்டத்தில் பாயலாமே என்று கேட்க ஆரியர்கள் என்ன செய்தார்கள்?

புத்தரைக் கிருஷ்ணனது பத்தாவது அவதாரமாகப் பிரகடனப் படுத்தினார்கள்!

இதே போல காலத்துக்காலம் எல்லா முரண்பாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து உருவானதே இந்து மதம்!  

சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், காபாலம், சௌரம் என்று அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு உருவானதே இந்து மதம்!

இதில் காபாலம் என்பது மண்டையோட்டு வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது!

சைவம் ..சாத்வீகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது!

வைணவம்.. தர்மம் அழியும் போது... நான் வந்து உலகை ஆட்கொள்வேன் என்பதை அடிப்படையாகக் கொண்டது! அதைத் தான் கிறீஸ்தவ மதமும் சொல்கின்றது!

சாக்தம்.. துர்க்கை வடிவில் ... இரத்தம் வழிய நிற்கின்றது!

சைவத்தில் சக்தி... சாந்த வடிவமாக, அன்னை வடிவாக நிற்கின்றது!

இந்த மதங்களுக்கு... யாராவது... ஒரு பொதுச்சினை  ( Common Factor)  எடுத்துத் தாருங்களேன்!

10736_576176895873919_839982040098332747

  • தொடங்கியவர்

'படிப்பைத் தொடர உதவுங்கள்': கவுசல்யா வேண்டுகோள்

 
 
கவுசல்யா
கவுசல்யா

உடுமலையில், கலப்பு திருமணம் செய்துகொண்டதால் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கவுசல்யாவிடம், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய ஆய்வாளர் சந்திரபிரபா, கள ஆய்வாளர் லிஸ்டர் ஆகியோர் சுமார் 45 நிமிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்திர பிரபா கூறும்போது, ‘தாக்குதலுக்கு உள்ளான கவுசல்யா நலமுடன் உள்ளார். மேற்கொண்டு படிப்பைத் தொடர உதவுமாறு எங்களிடம் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை இரு தினங்களில் புதுடெல்லியில் உள்ள தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம்’ என்றார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எட்வின்ஜோ தெரிவித்ததாவது: கவுசல்யாவின் உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து ள்ளது. தாக்குதலால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர், அதில் இருந்து மீண்டு வருவதற்காக தகுந்த மருத்துவர்களால் தொடர்ந்து மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது’ என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article8364015.ece?homepage=true

  • தொடங்கியவர்

'ரூ. 10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் கேக்கலை!'- கவுசல்யாவின் தந்தை வாக்குமூலம்!

shankar+300.jpgகோவை: "சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு செஞ்சேன்," என போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கெளசல்யாவின் தந்தை சின்னசாமி.

உடுமலையில் காதலித்து கலப்பு திருமணம் திருமணம் செய்து கொண்ட சங்கர் - கெளசல்யா தம்பதியினர், கடந்த 13-ம் தேதியன்று பஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதில் கணவர் சங்கர் பரிதாபமாக இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது தந்தை, தாய், மாமாதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கவுசல்யா போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து  14-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த கெளசல்யாவின் தந்தை சின்னசாமியை கைது செய்தனர் போலீசார்.

7 நாட்களுக்கு பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சின்னசாமியை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தான்தான் இந்த கொலையை செய்ய சொன்னதாக சின்னசாமி ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

"எனது மகள் கீழ் ஜாதியைச் சேர்ந்த பையனை கல்யாணம் பண்ணிகிட்டது எனக்கு ரொம்ப அவமானமா போச்சு. என் பொண்ணு மேல எனக்கு ரொம்ப பாசம் ஜாஸ்தி. எப்படியாவது வந்துடுனு கெஞ்சி பாத்தேன். மிரட்டியும் பாத்தேன். கவுசல்யாவோட அம்மாவ விட்டு கூட மிரட்டி பார்த்தேன். எதுவும் நடக்கலை. அந்த பையனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறேன். நீ வாங்கிட்டு போயிடு என் பொண்ணை என்கிட்ட விட்டுடுனு சொன்னேன். அவனும் கேக்கலை. ரெண்டு பேரும் பிடிவாதமா இருந்தாங்க.

இன்னொரு பக்கம் எனக்கு என் சொந்த பந்தங்க கிட்ட ரொம்ப கேவலமா போச்சு. எங்கே போனாலும் என்னை அவமானப்படுத்துனாங்க. அதனாலதான் இந்த முடிவுக்கு வந்தேன். ஜெகதீசன்கிட்ட இதைப்பத்தி சொன்னேன். என் பொண்ணை கூப்பிட்டு வா. வரலைனு சொன்னா அவளையும் கொன்னுடுனு சொன்னேன்." என சின்னசாமி கூறியதாக விவரிக்கின்றனர் போலீசார்.

chinnasamy+600+1.jpg

இதற்கிடையே பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜரான கவுசல்யா, நடந்தவை குறித்து ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளதால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் கெளசல்யாவின் தாயார், மாமா உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்கூறிய திருமணங்களை நாடக காதல் என்றும், பணம் பறிக்கும் முயற்சி என்றும் சில சாதி அமைப்புகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், பல லட்சம் பணம் கொடுப்பதாக சொல்லியும், சங்கர் மறுத்ததாக கெளசல்யாவின் தந்தை அளித்துள்ள வாக்குமூலம் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/61042-kousalyas-father-confession-on-dishonour-killing.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.