Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி ; மட்டக்களப்பின் மனதை உருக்கும் கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,நீங்கள் சொல்லுகின்ற இணையங்கள் பரபரப்புக்காக செய்திகள் போடுவது உண்மை தான்.ஆனால் வாகாரையில் நடக்கின்ற இந்த சம்பவங்கள் அத்தனையும் உண்மை.அவை அதிகமாகிக் கொண்டு போவது எம்மினத்திற்கு ஆபத்தாகவே முடியும்.

  • Replies 54
  • Views 21.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் இவ்விடயத்தை பரபரப்பிற்காக ஊடகம் வெளிப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் இதை என்னால் நியத்தின் தரிசனமாகத்தான் உணர முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2016 at 11:00 PM, கலைஞன் said:

விசுகு ஓர் கோணத்தில் உங்கள் ஆதங்கம் நியாயமானது. ஆனால், வேறோர் கோணத்தில் இதை விளங்க உங்களிடம் ஓர் கேள்வி.

போர் காரணமாக உங்கள் கைகளோ கால்களோ கண்களோபோய்விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் ஓர் நிரந்த உடலியல் உபாதைக்கு உள்ளாகிய ஒருவராகிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் சுயமாக இயங்கமுடியாது. இப்படியான நிலையில்...

நீங்கள் வசதிகள் குறைவு என்றாலும் உங்கள் ஊரில் அல்லது உங்களுக்கு பிடித்தமான இடத்தில் சுதந்திரமாக இருப்பதை விரும்புவீர்களா அல்லது உங்கள் பாசையில் 'வலது குறைந்தவர்கள் இல்லம்' ஒன்றில் உங்களைப்போல் வெவ்வேறு பாதிப்புக்கு உள்ளாகி சுயமாக இயங்க முடியாதவர்களுடன் சேர்ந்து வாழ விரும்புவீர்களா? 

எனக்கு இப்படியோர் நிலமை ஏற்பட்டால் நானும் நிச்சயம் சுதந்திரமான ஓர் இடத்தில் வாழ விரும்புவனேயொழிய பராமரிப்பு இல்லம் ஒன்றில் தங்கி வாழ விரும்பமாட்டேன். எனவே, "உங்க வந்தால் சாப்பாடு மட்டும்தான் போடுவீர்கள், வெளியில் இருந்தால் பல பக்கத்தாலும் பணம் வரும்" என்பது யதார்த்தபூர்வமானது மட்டுமல்ல நியாயமான எதிர்பார்ப்புமாகும்.

நிரந்த உடல் உபாதைகளிற்கு உள்ளாகியவர்கள், சுயமாக இயங்க முடியாதர்வர்களுக்கு ஆசை, விருப்பங்கள் வாழ்வில் கூடாதா? இவர்கள் உங்களுக்கு இலகு என்பதற்காக பராமரிப்பு இல்லத்தில் வாழவேண்டும் என்று விரும்புவது எவ்வகையில் நியாயம்? 

கலைஞன்

உங்கள் கேள்வி எந்தவகையில் என்று தான் பார்க்கவேண்டியுள்ளது

நான் உதவும் மனமுடையோர் சார்ந்து தான் எழுதினேன்

நீங்கள் மறு புறம் சார்ந்து சிந்திக்கிறீர்கள்

இந்த இருபகுதியையும் எடுத்துக்கொண்டால்...

ஒருபகுதி

அவயங்களை இழந்து 

மருந்து மற்றும் சாப்பாட்டுக்கு இயலாமை காரணமாக தற்கொலைகள் நடைபெறுவதை தடுப்பதற்கான முயற்ச்சி

அல்லது அந்த கருணையால் வந்தது எனலாம்

அப்படி ஒருவர் முயலும் போது

அது தோல்வி காணும் போது

பாதிக்கப்படப்போவது யார்??

உதவும் மனமுடையோர் இவ்வாறு மனமுடைவாராயின்........?

உங்களின் பார்வைக்கே விட்டு விடுகின்றேன்.

மேலும் மருந்து சாப்பாடு இவை கிடைத்தால் சரியாகிவிடுமா? என்ற தங்கள் கேள்விக்கு

இல்லை என்பது தான் எனது பதில்

முதலில் சோறு

அடுத்தது மற்றவை......

ஆனால் சோறும் மருந்தும் இல்லை என்ற நிலையிலிருந்து தாயகம் மேல் நோக்கி சென்று விட்டது என்பதே இன்றையநிலை.

 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

Early marriage issue in Batticaloa Thisaigal Documentary

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎10‎/‎2016 at 0:54 AM, வல்வை சகாறா said:

கலைஞன் ,

அம்மாக்களுடைய காலத்தில் 15 இல் அல்ல 13 வயதிலேயே திருமணபந்தத்திற்குள் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். அப்போதைய காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்த அடுத்த வருடங்களிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கான உலகம்,... பருவ வயது என்பதையே மறுக்கப்பட்டதாக இருந்தது. பால்யம் தாண்டும் காலத்தில் சட்டென்று தாய்மைக்குள் புகுத்தப்பட்டுஅவர்களுக்கான எக்கனவையும் காணமுடியாதவர்களாக முடக்கப்பட்டு எழுதப்படாத சட்டங்களுக்கு தம்மை எருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

என்னுடைய முப்பாட்டி பதினைந்து வயதில் திருமணம் செய்தவர். என்னுடைய பாட்டியும் தாயாரும் முப்பது வரமுன் திருமணம் செய்தவர்கள். எங்கள் மூதாதையரில் மிகுந்த செலவாக்கும் ஆற்றலும் நீண்ட ஆயுளும் கொழிக்கும் செல்வமும் உள்ளவராக முப்பாட்டியே வாழ்ந்து வந்தார். அவர் கொடுத்த செல்வத்தை பெருக்க முடியாமல் அவரது பிள்ளைகளும் பேத்திகளும் அழித்து முடித்தார்கள்.

பதினைந்து வயதில் தாயார் ஆனால் நாற்பது வயதில் ஆற்றலும் வளமும் உள்ள இருபத்தி ஐந்து வயது மகனோ மகளோ இருப்பார்கள். தாயும் பிள்ளைகளும் இளமையுடன் வாழ்க்கையை இனிமையாவும் வளமுடனும் அனுபவிக்க முடியும். முப்பது வயதில் பாட்டியாவது ஏதோ சாபக்கேடு போல இங்கு எழுதப்படுகிறது. இளமையான வயதில் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் ஓடி விளையாட சந்தர்ப்பம் பெற்றவர்களை வாழ்த்துவதை விட்டு அனுதாபப்படுவது பொருத்தமானதாக தெரியவில்லை.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.