Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சனியன்று போராட்டத்துக்கு அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில், 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல் வீடுகளை வழங்குமாறு கோரியும், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில், 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல் வீடுகளை வழங்குமாறு கோரியும், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

   

இதில் ஏனைய சமூகமட்ட அமைப்புக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்களையும் கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீண்ட கொடிய போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்ற, புனர் நிர்மான அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65,000 பொருத்து வீடுகள் நமது பிரதேச காலநிலைக்கும், சமூக பண்பாட்டுச் சூழலுக்கும் முற்றிலும் பொருத்தமற்றனவாகும். மேலும் மக்களின் சுகாதாரத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் இப் பொருத்து வீடுகள் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சமூக ஆர்வலர்களும், துறைசார் நிபுணர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே, இத்தகைய இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி எமது காலநிலைக்கும், சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைக்கும் பொருந்தக்கூடிய நிரந்தர கல் வீடுகளை அமைத்து வழங்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவும் அனல் மின் உற்பத்திச் செயற்பாட்டை இன்று கைவிட்டு வருகின்றன. இந்தியா, சீனா போன்ற நாடுகளும் தத்தமது அனல்மின் நிலையங்களை மூடுவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையிலே இயற்கை வளம் நிறைந்த திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தில், மக்களின் மீள்குடியேற்றத்தைத் தடுத்து நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. விவசாயம், மீன்பிடி மற்றும் கடல் வளம் நிறைந்த, நீலத் திமிங்கிலங்கள் வாளும் இக்கடற்பரப்பின் இயற்கைச் சமநிலையைக் கெடுப்பதாக அமைகின்ற இந்தச் செயற்பாடானது, சம்பூர் பிரதேச மக்களின் வாழ்வைச் சிதைப்பதாகவும் அமைகின்றது.

அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேற்கு பகுதிகளுக்கு மழையைத் தரும் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் நுளைவாயிலான கிழக்கு இலங்கையின் சம்பூர் பிரதேசத்தில் காற்றில் கலந்துவிடப்படவுள்ள இம் மின் உற்பத்தி நிலையத்தின் புகை, சாம்பல் கழிவுகள் எமது நாட்டின் வளிமண்டலத்தை நாசப்படுத்தி உயிர்வாழ்வைக் கேள்விக்குறியாக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த அனல் மின் நிலையத் திட்டத்தைக் கைவிட்டு சூரிய சக்தி அல்லது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதன் ஊடாக மின்சார தேவையையும், எதிர்கால மனித இருப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

நீண்ட காலமாகக் கவனிப்பாரற்ற நிலையில் இருக்கும் சுன்னாகமும் அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள கிணறுகளில் கலந்துள்ள கழிவு எண்ணெய் மற்றும் ஆபத்தான பார உலோகங்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றோம்" - என்றுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=154892&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

உடும்புப்பிடி போல் சிலவற்றை இறுகப் பிடித்திருக்கும் தன்மை யாழ் மக்களை இறுகவே பற்றிப்பிடித்து வருகிறது. துவிச்சக்கர வண்டி என்றால் றலி, கம்பர், தையல் இயந்திரம் என்றால் சிங்கர், மகிழுந்து என்றால் ஏபோட்டி, சேமசெற். இந்தப்பழக்கமே தற்போது பொருத்து வீடுகளுக்கு எதிராகவும் போராட வைத்துள்ளது. இன்று மேலை நாடுகளில் பெரும்பெரும் ஆலைகளையும் பொருத்தியே கட்டுகின்றனர். பொருத்து வீடுகளின் தரம் கவனிக்கப் படுவதே முக்கியமானது. 

நிலத்தடி நீரின் எண்ணை, அனல் மின்நிலையம், இவற்றுக்கான போராட்டத்தில் மக்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

பொருந்து வீடுகள் பொருத்தமானதா என்ற கேள்விக்கு முதல் இந்த பொருந்து வீடுகள் எப்படி வருகிறது என்ற கேள்வி முக்கியமானது. உலகில் உருக்கின் விலையில் ஏற்பட்ட வீழ்சியால் தேங்கியுள்ள உருக்கை நல்ல விலைக்கு இலங்கையில் தள்ளிவிட லக்ஸ்மி மிட்டேல் என்ற இந்திய வம்சாவளியின் பல்தேசிய நிறுவனத்துக்கு உதவுவதற்காகவே இந்தத் திட்டம். இந்த திட்டத்தில் உள்ள வீடுகள் லக்ஸ்மி மிட்டேலின் நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடமைப்பு பற்றி உள்ளூரில் கருத்துகளோ ஆலோசனையோ பெறப்படவில்லை. உலகத்தில் ஒரு இடத்திலும் இவ்வாறு இறுதிப் பயனாளியின் அபிப்பிராயம் பெறப்படாது வீடமைக்கப்படுவதில்லை. அது இலங்கையில் மட்டுமே சாத்தியமானது. மேற்குலக நாட்டால் பல்தேசிய நிறுவனங்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட அரசிடம் வேறு எதை எதிர்பாக்கமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு பிரதேசங்களில் செயல்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு

 

இலங்கையின் வடக்கு -கிழக்குப் பிரதேசங்களில் வீடற்ற குடும்பங்களுக்கென அறுபத்தையாயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு வடமாகாண சபை முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

160325173025_jaffna_chinese_house_512x28
Image captionவடக்கு - கிழக்கில் வீடற்றவர்களுக்கென அமைக்கப்பட்டுவரும் பொருத்து வீடுகள்.

இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் தளபாட வசதிகளுடன் கூடியதாக அமைக்கப்படவுள்ள இந்த பொருத்து வீடுகளின் முதலாவது வீடு யாழ்ப்பாணம் உரும்பிராய் செல்வபுரம் என்னும் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடமைப்புத் திட்டம், வடமாகாண சபைக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லாத வகையில் மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக நடைமுறைப்படுத்துவதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண சபையில் கண்டித்திருக்கின்றார்.

சீன அரசாங்கத்திடமிருந்து கடனாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதியுதவியில் அவர்களின் தொழில்நுட்பத்துக்கு அமைவாக இந்த வீடுகள் அமைக்கப்படுவதும் வடமாகாண சபையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த வீட்டுத் திட்டத்திற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அறுபத்தையாயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்படும் என்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் அரசாங்கமும் உறுதியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இந்த வீட்டுத் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய அரசாங்கம் உறுதியான கல் வீடுகளை ஐந்தரை இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கும்போது 21 லட்சம் ரூபாய் செலவில் பொருத்து வீடுகளை அமைப்பது சரியானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு வீடுகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கின்றனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160325_housing

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.