Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி குறித்த வைகோவின் பேச்சு: சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

Featured Replies

மக்கள் நலக் கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து வைகோ தெரிவித்த கருத்துக்களுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் தன் கருத்து குறித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.


I 140416154250_vaiko2014pollcampaignmdmkpa
வைகோவின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, தே.மு.தி.கவின் கூட்டணி குறித்து அதிருப்தி வெளியிட்ட அக்கட்சியின் முன்னாள் கொள்கைபரப்புச் செயலாளர் சந்திரகுமார் குறித்து கண்டனங்களை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சந்திரகுமார் இதுபோல செய்வதற்குப் பதிலாக, வேறு தொழிலைச் செய்யலாம் என்று பாலியல் தொழிலைக் குறிப்பிடுவது போல பேசினார்.
மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டு, அவருக்கு நாதஸ்வரம் ஊதும் கலையும் தெரியும் என அவரது ஜாதியைக் குறிப்பிடும் வகையிலும் பேசினார்.
வைகோவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது.

140326185727_dmkkarunanidhi2014_640x360_
கருணாநிதியின் ஜாதியைக் குறிப்பிடுவது போல வைகோ கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனது இந்தப் பேச்சுக்கு மன்னிப்புக் கோரி வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாதஸ்வரம் ஊதும் கலை அவருக்குத் தெரியும் எனத் தான் கூறியது கருணாநிதியின் சாதியைக் குறித்து தான் சொன்னதாக பழிப்பதற்கு ஏதுவாகிவிட்டதாகவும் அது குறித்து வேதனைப் படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
உலகின் ஆதித் தொழில் என கருணாநிதியின் குடும்பத்தைக் குறித்து தான் கூறியதாகக் கருதுவதற்கு இடம் ஏற்பட்டுவிட்டதை நினைத்து தன் உடல் நடுக்கமுற்றதாகவும் வைகோ கூறியுள்ளார். கருணாநிதி தன்னை மன்னிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், வைகோவின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தில் பல இடங்களில் தி.மு.கவினர் வைகோவின் கொடும்பாவியை எரித்தனர்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, தே.மு.தி.க. எம்எல்ஏ சந்திரகுமார் குறித்தும் தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்தும் வைகோ தெரிவித்த கருத்துக்கள் தங்களுக்கு ஏற்புடையதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

http://www.bbc.com/tamil/india/2016/04/160406_vaiko

  • கருத்துக்கள உறவுகள்
Vaiko's photo.
Vaiko
2 hrs

தவறுக்கு வருந்துகிறேன்!

வைகோ அறிக்கை

இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன்.

அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தலைமையைக் கடுமையாக விமர்சித்து நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கூறிய கருத்துகளுக்குப் பதில் சொல்லும் விதத்தில் சில விளக்கங்கள் அளித்தேன்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரை தலைமைக்கு எதிராக அறிக்கை விடச் செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் கோடிக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, வலை வீசுகிறார்கள்; அதற்குச் சாட்சியமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேமுதிக நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி என்பவரை அக்கட்சித் தலைமைக்கு எதிராக அழைத்து வந்தால் அவருக்கு 3 கோடி ரூபாயும், அழைத்து வருபவருக்கு50 லட்சம் ரூபாயும் தருவதாக, கோல்டன் கான் என்ற இÞலாமிய நண்பரிடம்,தேனியைச் சேர்ந்த நஜ்முதீன் பேசி இருக்கிறார் என்ற தகவலைச் சொன்னேன்.

பணம் வாங்கிக் கொண்டு கட்சி மாறுவது இழிவானது என்று கூறியபோது, இது உலகத்தின் ஆதித்தொழிலைப் போன்றது என்று கூறினேன். ஆனால், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களைக் குறித்தோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ, மறைமுகமாக இப்படிச் சொல்ல வேண்டும் என்று இம்மி அளவும் என் மனதில் எண்ணம் இல்லை என்பதை, நான் வணங்கும் தெய்வமான என் அன்னை மாரியம்மாள் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.

ஆனால் அதன்பின் நாதÞவரம் வாசிக்கும் கலை அவருக்குத் தெரியும் என்று கூறியது, தவறாகப் பொருள் கொள்ளும்படி ஆகி விட்டது. அது மிகப்பெரிய தவறுதான். அண்ணன் கலைஞர் அவர்களைச் சாதியைக் குறித்து நான் இப்படிச் சொன்னதாகப் பழிப்பதற்கும் நான் ஆளாகி விட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன்.

நான் சாதிய உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவன். அதை அண்ணன் கலைஞர் அவர்களே அறிவார்கள்.

அண்ணன் கலைஞர் அவர்களை 30 ஆண்டுகளாக என் நெஞ்சில் வைத்துப் போற்றியவன் நான். அவர் மீது துரும்பு படுவதற்கும் சகிக்காதவனாக, அவருக்கு ஒரு கேடு என்றால் அதைத் தடுக்க என் உயிரையும் தத்தம் செய்யச் சித்தமாக இருந்தவன் நான். அதனால்தான், 1993 அக்டோபர் 3 இல் என் மீது கொலைப்பழி சுமத்தப்பட்டபோது, என் உயிர் பிரியும் வரை உங்களுக்கு நான் கும்பகர்ணனாகவே இருப்பேன் என்று அறிக்கை விட்டேன். ஆனால், உலகின் ஆதித் தொழில் என்று கலைஞர் குடும்பத்தைக் குறிப்பிட்டு நான் கூறியதாகக் கருதுவதற்கு ஒரு இடம் ஏற்பட்டு விட்டதே என்பதை நினைக்கும்போது என் மேனி முழுவதும் நடுக்கமுற்றது என்பதை என் அருகில் இருந்தவர்கள் அறிவார்கள்.

இப்படி நான் கூறியது என் வாழ்நாளில் செய்த ஒரு குற்றமாகவே கருதுகிறேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றேன். அண்ணன் கலைஞர் அவர்கள் தாயுள்ளத்தோடு என் விளக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
06.04.2016

  • கருத்துக்கள உறவுகள்

பலபேரின் சாயம்,வேஷம்  கலையுது .....தேர்தல் நெருங்க நெருங்க இது இன்னும் அதிகமாகும் 
சீமானுக்கு மாற்று வைகோ எண்டினம் ...இந்தாளும் நாக்கில சனி இருக்க நரம்பில்லாமல் கதைக்கிறார் .....
அடுத்த மாற்று யாரு....? அன்புமணியா .....?

என்ன பெருசா பேசிட்டாரு!  கலைஞர் இத விட மோசமா எம்ஜியார, ராஜாஜிய, காமராஜர திட்டி இருக்காரு . அவர் கிட்ட பாடம் கத்துகிட்ட வைகோ அவர ரிவர்ஸ் பண்ணியிருக்காரு . கடுப்ப கெளப்பிகிட்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.