Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கேரளாவின் கொல்லம் பராவூர் கோவிலில் தீ - 90 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கேரளாவின் கொல்லம் பராவூர் கோவிலில் தீ - 90 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்:

10 ஏப்ரல் 2016

இந்திய கேரளாவின் கொல்லம் பராவூர் கோவிலில் தீ -  90 பேர் பலி 200 க்கும் மேற்பட்டோர் காயம்:
இந்தியாவின் கேரள மாநிலம் கோயில் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பராவுர் புட்டிங்கால் கோயிலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உள்ளுர் ஹிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆலயத்தில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், கொண்டாட்டங்களுக்காக கொண்டு வரப்பட்டிருந்த பட்டாசுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இடத்தில் தீ பற்றிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்கள் திருவனந்தபுரம் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

களஞ்சிசாலை வெடித்த சத்தம் பல கிலோ மீற்றர்களுக்கு கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கேரள மாநில உள்விவகார அமைச்சர் ரமேஸ் சென்னித்தலா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கேரள மதலமைச்சர் ஓமன் சான்டி விஜயம் செய்ய உள்ளார்.

குறித்த ஆலயத்தில் பட்டாசு கொளுத்தி வான வெடிக்கைகள் நடாத்த காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130962/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.

மக்கள் தொகையாகக் கூடும் இடங்களில் சரியான பாதுகாப்பின்மை.. முன்னெச்சரிக்கை இன்மை.. விபத்துக்களின் போது ஏற்படக் கூடிய அசம்பாவிதங்களில் இருந்து மக்கள் இலகுவாக வெளியேறக் கூடிய வசதிகள் இன்மை.. நிர்வாகச் சீர்கேடுகள்.. ஊழல்.. இலஞ்சம்... இவை தான் இந்த மக்களை பலி கொண்டுள்ளது.tw_angry:

 

கேரள ஆலயத்தில் வெடி விபத்து: 100க்கும் அதிகமானவர்கள் பலி

தென் இந்திய மாநிலமான கேரளாவிலுள்ள இந்து ஆலயத் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

160410065114_india_temple_fire_512x288_t

Image copyrightthehindu Image captionவெடி விபத்தால் கொழுந்துவிட்டு எரியும் தீ

கொல்லம் மாவட்டம் பரவூரிலுள்ள புட்டிங்கல் பகவதி ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்திரத் திருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பட்டாசுகள் வெடிக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் பட்டாசுகள் சேமித்து வைத்திருந்த கிடங்கு ஒன்று, இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தீ பிடித்து வெடித்துச் சிதறியது.

இதன்போது அந்த வாணவேடிக்கை மற்றும் பட்டாசு வெடிக்கப்படுவதை பார்க்க வந்திருந்த பலர், அந்தத் தீ விபத்தில் சிக்கினர்.

அதில் சிக்கியவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் செல்லும் வழியிலோ அல்லது பின்னரோ இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 350க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அந்தப் பட்டாசு கிடங்கு வெடித்துச் சிதறியபோது அந்த வெடிச்சத்தம் ஒரு கிலோமீட்டருக்கும் அப்பால் கேட்டது என செய்திகள் கூறுகின்றன.

இந்த விபத்து வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india/2016/04/160410_indiatemplefire

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.