Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஈழக்” கொள்கைக்கு இடமில்லை : ஜனாதிபதி

Featured Replies

“ஈழக்” கொள்கைக்கு இடமில்லை : ஜனாதிபதி  

 

நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.Maithripala-Sirisena_25.jpg

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

எந்தவிதமான தடைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலமிக்க கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான எனது பயணம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் பலாத்காரமாக பறித்தெடுக்கவில்லை. அனைவரது விருப்பத்துடனேயே தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டேன். எனவே கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு கட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.

 

இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. ஆனால் சுதந்திரக் கட்சி மீது அன்பு கொண்ட நான் எந்தத் தடைகளையும் கண்டு அஞ்சமாட்டேன். அனைத்திற்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன்.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் இன்றைய முக்கிய கடமை கட்சியை பலப்படுத்தி முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதே ஆகும். அதை விடுத்து கட்சியை பிளவுபடுத்தி அவசரமாக அரசாங்கமொன்றை அமைப்பது அல்ல.

 

இன்று நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கமல்ல. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இரண்டாம் இடத்தை வழங்கி நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும். அத்தோடு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பது அனைவரதும் கடப்பாடாகும்.

நல்லதொரு அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முதலாவதாக நல்லதொரு கட்சி இருக்க வேண்டும். அதற்காக நல்லதொரு ஒழுக்கமாக கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்டியெழுப்பப்பட வேண்டும். 

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கும் அன்றைய உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களின் செயற்பாடுகளே காரணமாக அமைந்தன.

நாட்டை பிரிக்கும் ஈழக் கொள்கைக்கு இடமில்லை. முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். அனைவரும் சகோதரத்துவத்தடன் வாழக்கூடிய நிலையான ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும். எமது மரபுரிமைகளை பாதுகாத்துக் கொண்டு எமது பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்துக் கொண்டு நாட்டின் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

எனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றியை பறைசாற்றும் சுதந்திர மே தினத்திற்கு அனைவரும் காலி நகரில் அணிதிரள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது பகிரங்க அழைப்பையும் விடுத்தார்.

இந்நிகழ்வில் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால், அமைச்சர் சந்திர வீரக்கொடி, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பியசேன கமகே, குணரத்ன வீரக்கோன், சஜிந்த வாஸ் குணவர்தன உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

http://www.virakesari.lk/article/5533

  • கருத்துக்கள உறவுகள்

ஈழக் கொள்கையை நீங்க எப்ப ஆதரித்தீர்கள். இப்ப புதிசா இடமில்லை என்று சொல்ல...??! சும்மா தமாஸ் பண்ணக் கூடாது. ஈழக் கொள்கை என்பது சொந்த நிலத்தை காலனித்துவத்திற்கும் பின் பெரும்பான்மை சிங்களவர்களிடமும் பறிகொடுத்திட்டு நிற்கும் தமிழ் மக்களுக்கானதே தவிர சிங்களவர்கள் அதனை ஏற்கனுன்னு அவசியம் இல்லை. காலனித்துவ ஆட்கள் தம் தவறை திருத்த.. தமிழ் மக்களுக்கு உதவினால் போதும்.. தமிழ் மக்களின் இழக்கப்பட்ட நிலமும் ஆட்சி உரிமையும் தானே கை வந்து சேரும். சிங்களவர்களிடம் கெஞ்சி மன்றாட வேண்டியதில்லை.

ஏனெனில்.. தமிழர்களின் நிலம்.. சிங்களவர்களிடம் காலனிகளாலும்.. பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற மேற்குலக சிந்தனைகளாலும் செயற்பாட்டாலும்.. தவறுதலாகக் கையளிக்கப்பட்டவை ஆகும். tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பதிலா  உங்களிடம் என்ன இருக்கு என்றும் சொல்லணும்

அந்த தைரியமும் நாணயமும் உங்களிடம் வராதவரை

தமிழினத்துக்கு நீங்க தலைமை தாங்கமுடியாது...

 

2 hours ago, நவீனன் said:

நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரொம்ப தெளிவா இருக்கிறான் சிங்களவன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, நவீனன் said:

சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கட்சியைப் பலப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு இன்று தடைகள் போடப்ப்படுகின்றன. இதனை கண்டு நான் அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அம்பலாங்கொடை தர்ம அசோக மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

எந்தவிதமான தடைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலமிக்க கட்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான எனது பயணம் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை நான் பலாத்காரமாக பறித்தெடுக்கவில்லை. அனைவரது விருப்பத்துடனேயே தலைமைப் பதவியை பெற்றுக் கொண்டேன். எனவே கட்சியில் மறுசீரமைப்புக்களை மேற்கொண்டு கட்சியை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.

 

இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. ஆனால் சுதந்திரக் கட்சி மீது அன்பு கொண்ட நான் எந்தத் தடைகளையும் கண்டு அஞ்சமாட்டேன். அனைத்திற்கும் முகம் கொடுக்க தயாராகவே உள்ளேன்.

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களின் இன்றைய முக்கிய கடமை கட்சியை பலப்படுத்தி முன்னேற்றகரமாக முன்னெடுத்துச் செல்வதே ஆகும். அதை விடுத்து கட்சியை பிளவுபடுத்தி அவசரமாக அரசாங்கமொன்றை அமைப்பது அல்ல.

 

இவர்ரை பிரச்சனை வேறை கண்டியளோ....உவங்கடை பிரச்சனை இப்பிடியிருக்க.........ஈழம் எண்ட ஒரு சொல்லை புகுத்தி விட்டால் எலி தப்பி ஓடுறதுக்கு கன ஓட்டையள் தானாக திறக்கும்  எண்டு  அவங்களுக்கு நல்லவடிவாய்  தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.