Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் தோல்விக்கவிதைகள்

Featured Replies

உன்னை மறப்பதும் ....
இறப்பதும் ஒன்றே ...!!!

தோப்பில் இருந்த ...
மரங்கள் வெட்டப்பட்டு ...
தனிமரம் நிற்பதுபோல் ....
உன்னை இழந்து தனியே ....
நிற்கிறேன் .....!!!

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயம் 
தீயில் கருகிய இதயம் ...
மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 
 

காதல் தோல்விக்கவிதைகள்

  • தொடங்கியவர்

ஜோடியாக நடந்து ....
திரிந்த செருப்பில் ஒன்று ....
அறுந்துவிட்டால் ....
மற்ற செருப்பு நிலை....?

என்னை பிரிந்த நீயும் 
சந்தோசமாய் இல்லை ...
உன்னை பிரிந்த நானும் ....
சந்தோசமாய் இல்லை ...!!!

இருட்டறைக்குள் ...
ஒரு சின்ன வெளிச்சம் ....
பெரும் வெளிச்சம் ....
உன் சின்ன திருப்பம் ...
பெரு வெளிச்சமாகும் .....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

தனிமையில் ...
இருக்கும் போது கூட ....
உன்னோடு தான் ...
பேசிக்கொண்டிருப்பேன் ...!!!

இதுவரை இன்பத்தில் ...
இருந்த இதயம் ...
இப்போ துன்பத்துக்கு ...
பயிற்சி எடுக்கிறது ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

மூச்சை நிறுத்தினால்.... 
மட்டுமே மரணம் இல்லை... 
நீ பேச்சை நிறுத்தினாலும்... 
மரணம் தான்......! 

ஒரு 
மரதில் ஆயிரம்... 
பூக்கள் மலரும்.... 
மரத்துக்கு வலியில்லை... 
காம்பின் வலியை... 
உணர்வார் யாருமில்லை... 
உன்னை இழந்த வலி... 
உனக்கே புரியவில்லை...! 

இதயத்தில்... 
இருந்து வெளியேறிய நீ 
இதயத்தை நிறுத்திவிட்டு... 
போயிருக்கலாம்....! 

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

என் கவிதையை ....
பார்ப்பவர்கள் எல்லோரும் ...
உனக்கு காதல் தோல்வியா ....
என்கிறார்கள் ....?
இந்த கேள்விக்கு மட்டும் ....
நீ பதில் சொல் .....!!!

என்னை பிடிக்கவில்லை ...
சொல்லியிருந்தால் ....
விலகியிருப்பேன் ....
பிடித்திருக்கு என்றால் ....
காதலித்திருப்பேன் .....
மௌனமாய் இருந்து ...
நடுரோட்டில் விட்டுவிட்டாயே ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் ......
கனவோடு ஆரம்பித்து .....
கண்ணீரால் கழுவப்பட்டு ....
நினைவுகளோடு போராடி ....
தூண்டில் மீன் போல் ....
துடித்துக்கொண்டு ......
இருக்கிறது ....!!!

ஒன்றை 
உனக்கு சொல்வேன் ....
நான் காயப்படலாம் .....
நீயும் காயப்படலாம் .....
காதல் காயப்படாது ....
காதல் காலத்தால் ....
அழிய முடியாதது ......!!! 

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?
எதற்காக என்னை உனக்காய் ...
எங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?
எதற்காக என்னை பிரிந்தாய் ...?
எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?
இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

விழித்திருக்கும் போது....
அழுதால் பரவாயில்லை ....
உன் நினைவுகள் என்னை ....
வதைக்கலாம் ....!!!

தூக்கத்தில் கூட 
கண்ணில் ஓரமாய் சிறு ...
துளிகள் வழிகிறது ....
கனவில் கூடவா என்னை ....
வதைக்கிறாய்......?
^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னை 
அவள் காயப்படுத்தி....
விட்டாள் என்று கவலை ...
படவில்லை .....!!!

என்னை 
அவளை தவிர யார் ....?
காயப்படுத்தமுடியும் ...?
அவளால் மட்டுமே நான் ...
காயப்படவேண்டும் ....
அதுவே இறுதியாகவும் ....
இருக்கவேண்டும் ....!!!

^
காதல் தோல்வி கவிதைகள் 
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன் 
மறந்தால் மரினித்து விடுவேன் 
------------
கவிப்புயல் இனியவன்

bride%252520%2528123%2529.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்

உனக்கு  தெரியாது
உன் மௌனத்தின் வலி
உனக்கு காதல்
உணா்த்தும்வரை....!!!

சில வேளை நீ
காதலித்தால் என்று
முதல் உணர்த்துவேன்
மௌனத்தின் வலியை 
துடித்தே இறந்துவிடுவாய்...!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

காதலிக்க உள்ளம் ...
இருப்பவர்கள் மட்டும் ....
காதலியுங்கள் .....!!!

ஆயிரம் காரணத்தை ....
காதலுக்கு ஆயுதமாய் ....
ரணகனமாக்கும் ....
காதலை செய்யாதீர் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பேசாமல் விட்டு விடலாம் ...
பேசாமல் இருப்பதுபோல் ....
நடிப்பதுதான் கடினம் ....!!!

காதலிக்காமல் இருக்கலாம் ...
காதலிப்பதுபோல் நடிப்பது ....
காதலில் கொடுமை ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ 
புரிந்து கொள் ....
பிரிந்து செல் ....
இரண்டும் ....
கலந்த கலவை ....
காதலுக்கு .....
விஷம் .....!!!

நீ 
என்னை புரியும் ....
வரை நான் உனக்கு ....
பொய்யாகவே ....
இருக்கும் ....
புரிந்தபின் இழந்த ....
காலத்தை நினைத்து ....
கண்ணீர் விடுவாய் ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஒருமுறை என்னை ...
காதலிப்பதாய் சொல்லு ....
அதற்கு அப்புறம் உன்னை ...
நான் காதலிக்க மாட்டேன் ....
உன்னை காதலிக்காமல் ....
என் மூசசு பிரிந்து விட ...
கூடாது என்பதற்காக ....
அவளிடம் கேட்டேன்....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • கருத்துக்கள உறவுகள்

ராசா , காதல் வியாதி பொல்லாதது...!

காதலின் வெற்றியைவிட காதலின் தோல்விக்  கவிதைகள்தான் அசத்தலாய் இருக்கு...! இந்தக் காதல் கவிதைகளுக்காகவே ஒருமுறை தோற்பதற்காகக் காதலிக்கலாம்.....!

நன்றி புயல்....!

  • தொடங்கியவர்
22 hours ago, suvy said:

ராசா , காதல் வியாதி பொல்லாதது...!

காதலின் வெற்றியைவிட காதலின் தோல்விக்  கவிதைகள்தான் அசத்தலாய் இருக்கு...! இந்தக் காதல் கவிதைகளுக்காகவே ஒருமுறை தோற்ப:unsure:தற்காகக் காதலிக்கலாம்.....!

நன்றி புயல்....!

:unsure: வேண்டாமுங்க அது பெரும் வலி 
ஹி ஹி ஹி 
நன்றி நன்றி 

வலிகள் தோன்ற தோன்ற .....
வரிகள் கண்ணீர் விடும் .....
கண்ணீர் விட விட....
காதல் கவிதைகள்
தோல்வியடையும்...!!!

வரிகள் இனிக்க இனிக்க
இதயம் துள்ளிக்குதிக்கும் ...
காதல் கவிதைகள்.....
இனிமையாகும் ...!!!

கண்கள் தான் இரண்டு ....
இதயம் ஒன்றுதானே ....
எதற்காக இரண்டையும் ....
தருகிறாய் .....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பல சோதனைகள்...
சந்தித்து பல ...
வேதனையையும் ....
சந்தித்தேன் ....
அத்தனைக்கும் தீர்வு
கண்டேன் ....
நீ காதல் செய்ததால் ....!!!

நீ ஏன் என்னை
பிரிந்தாய் என்று
இன்றுவரை
தீர்வு காணவில்லை ...!!!

எல்லோரும் வெற்றி
பெற்றால் -காதலை ...
யார் காதலிப்பார்கள் ....
என்பதற்காக நீ ....
என்னை பிரிந்தாயோ ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

நாணயத்துக்கு 
இரு பக்கம் போல் 
நான் தலை , நீ  பூ.....!!!

புத்தகத்துக்கு பண்பு போல் 
நான் எழுத்து நீ வரிகள் ...!!!

இதயத்துக்கு இரு அறை
நான்வ லது நீ ,இடது....!!!

காதல் பிரிவுக்கு காரணம்
என் அதிக எதிர்பார்ப்பு ....
உன் அதிக நிராகரிப்பு ....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை கடவுளாக ....
நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் -நீயோ ....
கடவுளை வணங்க ....
கோயில் போகணும் ....
என்கிறாய் ......!!!

நான் கவிதை ....
எழுதும்போது நீ ....
அருகில் இருக்கவேண்டும் ....
என்று ஆசைப்படுகிறேன் ....
நீயோ அக்கறையில்லாமல் ....
இருக்கிறாய் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

ஒருபுறம் நினைவு
மறுபுறம் கனவு
நீ மகுடி
நான் பாம்பு
படாத பாடு படுகிறேன்....!!!

நீ அழுதத்தை
நம்பிவிட்டேன்
கண்ணீர் என்று ....!!!

  • தொடங்கியவர்

எவரோடும் வாழலாம் ....
என்றிருந்திருந்தால் ....
காதல் தேவையில்லை ....!!!

உன்னோடு மட்டுமே ....
நான் வாழவேண்டும் ....
உனக்காகவே நான் ....
வாழவேண்டும் .....
என்பதால்  உன்னை....
காதலித்தேன் .... !!!

இப்போ ....
உனக்காகவும் வாழ ....
முடியவில்லை .....
எனக்காக வாழவும் ....
முடியவில்லை ..........!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

பிரிவை விட கொடுமை .....
காதலில் மௌனம் ......
மௌனத்தை விட கொடுமை ....
காதலில் சந்தேகம் ....!!!

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
கலங்கியிருக்க மாட்டேன்....!!!

உன்னை உயிராய் 
காற்றாய் காதலித்து .....
அவஸ்தைப்படுகிறேன் .....!!!

 ^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

நீ 
என்ன இருதய மாற்று 
சிகிச்சையாசெய்து 
விட்டாய் ..?

இத்தனைகாலம் பழகி 
எத்தனையோ நினைவுகளை 
தந்துவிட்டு ..

எதுவுமே இல்லததுபோல் ..
தலையை குனிந்துகொண்டோ 
செல்லுகிராயே நீ என்ன ?
இருதய மாற்று ....
சிகிச்சையா செய்து விட்டாய் ?

  • தொடங்கியவர்

ஏனடி 
பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................?

 உன்னோடு 
இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......?

இருந்த போது 
நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் 
சுகமாக உள்ளது ....!!!

பிரிந்து 
இருந்து அன்பு காட்ட
வேண்டாம்!

நீ அருகில் 
இருந்து சண்டை போடு
அது போதும்!!!...

  • தொடங்கியவர்

காதலை 
சொல்லவேண்டிய ....
நேரத்தில் சொல்லி விடு ....
இல்லையேல் காலம் ....
முழுவதும் காதலால் ....
காயப்படுவாய் .....!!!

என்றோ ஒருநாள் ...
சொல்லாமல் விட்ட காதல் ....
இதயத்துக்குள் முள்ளாய் ....
குத்திக்கொண்டே இருக்கும் .....!!!

காதலை சொல்லி வேதனை ....
பட்டவர்களை விட  காதலை ....
சொல்லாமல் வேதனை ....
பட்டவர்களே அதிகம் .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.