Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் சிங்களப் பகுதிகளில் மாத்திரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

   

இதனை வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கிறார். இதேவேளை வடக்கில் சிறுநீரக நோய்த் தாக்கத்துக்கு அதிகம் உட்படும் இரண்டாவது மாவட்டமான முல்லைத்தீவிலும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதுவும் சிங்கள மக்கள் அதிகம் வசிக்கும் வெலிஓயாவில் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=158882&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழரசு said:
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன. தூய குடிநீர் மூலமே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் வவுனியாவின் பொபஸ்வேவா பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்காக வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியா வரவுள்ளார். இலங்கையில் சிறுநீரக நோய்த்தாக்கம் வடக்கிலேயே அதிகமாகவுள்ளது. இதில் வவுனியா முதலிடத்திலும் முல்லைத்தீவு இரண்டாவது இடத்திலும் உள்ளன.

http://www.seithy.com/breifNews.php?newsID=158882&category=TamilNews&language=tamil

இது உண்மையா? எந்த மருத்துவ அல்லது துறைசார் நிபுணர்கள் இந்த கணிப்பை முடிவு செய்ததாக வேறு எங்கும் செய்திகள் வரவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்

 

Sri_Lanka_partially_bans_glyphosate2.jpg

http://www.i-sis.org.uk/Sri_Lanka_partially_bans_glyphosate.php

வடக்கில் பரவலாக இருக்கும் நிலத்தடி வன்னீரின் தன்மை மற்றும் சில வகை இரசாயனக்கலப்புக்களின் காரணமாக சிறுநீரக நோய்கள் அதிகரித்திருப்பது உண்மையே. அது வட மத்திய  மற்றும் கிழக்கு வரை பாதிப்பை உண்டுபண்ணி வருவதும் உண்மையே. அதன் பேரில் சிங்களவருக்கு தகுந்த பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்தும் சிங்கள பேரின அரசுகள்.. சிறுபான்மைத் தமிழ் மக்களை இதன் மூலமும் கொன்றொழிக்கலாம் என்று கணக்குப் போட்டு அந்த பாதுகாப்புத்திட்டங்களை அமுல்படுத்துவதில் ஏனோ தனோ மனப்பான்மை காணிப்பதும் உண்மையே. 

சிவப்பு நிறப்பகுதி எங்கும் பாரபட்சமற்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். அதில் சிங்களப் பகுதிகளுக்கு மட்டும் என்று அமைவதே இனவாதமாகும். அதுவே கண்டுக்கப்பட வேண்டியது. உலகிற்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது. tw_angry:

அதைச் செய்யாமல்.. சிலர் சிங்கள எஜமானர் விசுவாச வெறி எடுத்து உண்மைகளை மூடிமறைக்க  ஓடித்திரியக் கூடாது. 

Hard-water-distribution-4.png

சிறுநீரக நோய்ப் பரம்பல் + வன்னீர் பரம்பல். 

வடக்கில் தமிழ் மக்கள் அநேகம் வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில்.. வவுனியா மாவட்டத்தில்.. நோய் பரம்பல் குறித்த அக்கறை குறைத்து நோக்கப்படும் அதேவேளை... தெற்கு, வடமத்தியில், கிழக்கில் சிங்களவர்களின் பாதிப்பின்.. தாக்கத்தின் தீமை உணர்ந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படை உண்மையாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
  1. நீங்கள் தந்த இந்த இணைப்பில் ( http://www.i-sis.org.uk/Sri_Lanka_partially_bans_glyphosate.php ) 1990 க்கு முதல் ஏன் இந்த சிறுநீரக நோய் இப்படி பெறுமளவில் காணப்படவில்லை என்று ஆய்வாளரால் கேட்கப்பட்டிருக்கிறது.
  2. வடக்கு - கிழக்கு பகுதியில் உள்ள நீர் வன்னீர். ஆனால் இந்த வன்னீரை பருகியே எமது மூதாதையரும் நாமும் சிறுநீரக நோய் அறியப்படுமளவுக்கு பாதிப்பு இன்றி வாழ்ந்திருக்கிறோம்.
  3. மேலும் வன்னீர் பருகும் உலகின் ஏனைய பாகங்களில் இந்த அளவு சிறுநீரக நோய் அறியப்படவில்லை.
  4. இலங்கையின் வடக்கு - கிழக்கிலும் பார்க்க சிங்கள பகுதிகளிலேயே நீங்கள் இணைத்துள்ள படத்தின் படி இந்த நோய் பெருமளவில் அறியப்பட்டிருக்கிறது.
  5. அது தவிர நீர் சுத்திகரிப்பு எப்படி வன்னீரை மென்நீராக்கும்? நீர் சுத்திகரிப்பு நீரில் உள்ள கிருமிகளையும் இரசாயனங்களையும் அகற்றும். உப்புக்களை அகற்றி மென்னீர் ஆக்க உப்பு அகற்றும் முறைகளே பயனுள்ளவை. நெடுந்தீவில் இவ்வாறான உப்பு அகற்றும் நிறுவனம் அமைக்கப்பட்டு கடல் நீர் குடிநீராக்க படுகிறது. 
  6. வடக்கு - கிழக்கில் மனநோயும் புற்று நோயும் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக எங்கேயோ படித்த நினைவு. ஆகவே அவற்றிற்கு ஒதுக்கும் நிதியை சிறுநீரக நோய் தவிர்ப்பக்கு ஒதுக்க வேண்டுமானால் இந்த சிறுநீரக நோய் மக்களை ஏனைய நோய்களிலும் பார்க்க பெருமளவில் பாதிக்கிறதா என்று அறிய வேண்டியது முக்கியமானது.

 

Edited by Jude

அனுராதபுரம், வவுனியா, முல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள கிணற்று நீர் / நிலத்தடி நீர் சலக் கடுப்பை ஏற்படுத்துபவை, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துபவை என்பது பல நூற்றாண்டு அனுபவம்.

இதில் அனுராதபுரம் பகுதியில் சிங்கள அரச அனுசரணையுடன் பல தசாப்தாங்களாக பல ஆய்வுகள் செய்யப்பட்டு அறிக்கைகள் பல உண்டு. வவுனியா, முல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் போதியளவு ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.