Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை!- ரணில்

Featured Replies

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை!

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களில் இரசாயனப் பாதிப்பு இருந்ததாக அறிக்கைகளில் சுட்டிக்காடப்படவில்லை எனவும் போரில் இரசாயன ஆயுதங்கள் எவையும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையெனவும் தெரிவித்தார்.

போரில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் இரு தரப்பினரும் ஆட்லறிகளைப் பயன்படுத்திய சூழலில் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.

எனினும், மனித உடல்களில் ஊடறுத்த எந்த ஆயுதமும் இரசாயன உமிழ்வைக் கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அவ்வாறு உடலில் இரசாயன ஆயுதப் பாதிப்பு எவருக்கேனும் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

அவ்வாறானவர்களின் விபரங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

http://thuliyam.com/?p=29819

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கன காலமாய் இவரது கையிலுள்ள 'துரும்பை' எப்ப இறக்குவார் எண்டு பார்த்துக்கொண்டேயிருந்தன்!

ஐயா இப்பத்தான் துரும்பை இறக்கியிருக்கிறார்!

இரசாயனப் பகுப்பாய்வு துறையில்....சிங்களம் முதலிடத்திலும்... இந்தியா இரண்டாமிடத்திலும் இருக்கின்றன என்பது மட்டும் உறுதியாகின்றது!

முட்டாள் பயல்...சதாம் ஹுசையின்!

இவர்களது பகுப்பாய்வை ஆதாரமாகக் காட்டித் தூக்குக் கயிறிலிருந்து தப்பியிருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் காலத்திலும் கொத்து குண்டுகளை போட்ட குள்ள நரி இவர். எப்படி சிங்களவரை காட்டிக்கொடுப்பார்? எரிகாயங்களுடன் எத்தனை படங்கள் இணையங்களில் வந்து விட்டன. ஒன்றையேனும் இவர் பார்க்கவில்லை என்று பச்சை பொய் சொல்கிறார். 

chemical1.jpg

chemical7.jpg

 

http://puligal.blogspot.ca/2009/04/rumors-sri-lankan-military-used.html

1 hour ago, Athavan CH said:

இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் அப்பட்டமான பொய்களில் இவரது கூற்றுக்களும் அடங்கும்.

chemical_weapons_01.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.