Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.2000 கோடி செலவில் பிரதமர் மோடிக்கு தனி விமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
 
1466565724-6347.jpg
 
 
தற்போது பிரதமர் மோடி, ஏர் இந்தியா 747 - 400 மாடல் விமா‌னத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். புதிதாக நவீன வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய போயிங் 777 - 300 ரக விமானத்தை வாங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான இறுதி முடிவை வருகிற 25-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான குழு எடுக்க உள்ளது.
 
பிரதமரின் புதிய நவீன விமானத்தின் சிறப்புகள்:
 
* பிரதமரின் முகாம் அலுவலகம், படுக்கையறை போன்றவை இந்த விமானத்தில் இருக்கும்.
 
* நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகள், எதிரி வாகனங்கள், விமானங்களைத் தடுக்கும் ஜாமர் கருவிகள் இந்த புதிய விமானத்தில் இடம்பெறும்.
 
* கையெறி குண்டு மற்றும் ராக்கெட் தாக்குதலால் விமானம் பாதிக்கப்படாத வகையிலும், தாக்கவரும் ராக்கெட் உள்ளிட்ட ஆபத்துகளை முன்கூட்டி கணிக்கும் இந்த விமானத்தில் வசதி இருக்கும்.
 
* 2000 பேருக்குத் தேவையான உணவு இருப்பு வைக்கும் வசதி.
 
* அவசரகாலத்தில் நடுவானில் வேறொரு விமானம் மூலம் எரிபொருள் நிரப்பும் வசதி.
 
* 24 மணி நேர அதிநவீன மருத்துவ வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், 19 தொலைக்காட்சிப் பெட்டிகள்.
 
போன்ற வசதிகள் பிரதமரின் இந்த புதிய நவீன விமானத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

 

http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/rs-2000-crores-worth-flight-for-pm-modi-116062200009_1.html

பிரதமர் மோடி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்தும் வகையில், அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு சென்று வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா என்று 40 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்னும் 3 ஆண்டு காலத்தில் அவர் மேலும் பல உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். தற்போது மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பிரத்தியேகமாக கட்டப்பட்டது. பிரதமர் மோடிக்கும் தீவிரவா அச்சுறுத்தல் இருப்பதால், வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அவருக்கென்று 2,100 கோடி மதிப்பீட்டில் பிரத்தியேக விமானம் தயாரிக்கப்படவுள்ளது.

எனவே பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777 - 300ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த இராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த விமானத்துக்கு ஏர்இந்தியா ஒன் என்று பெயர் சூட்டப்படும். இந்த விமானத்தில் ஏவுகணை முறியடிப்பு வசதி , நவீன தகவல் தொடர்பு வசதிகள். ராக்கெட் தாக்குதலை தாங்கும் வலிமை கொண்டது.

எதிரியின் ரேடார் வலையில் சிக்காது. எதிரியின் ரேடாரை செயல் இழக்க வைக்கும். ரேடார் கண்காணிப்பையும், ஏவுகணை நெருங்குவதையும் முன்கூட்டியே தெரிவித்து விடும்.

ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு வசதிகள், 2 ஆயிரம் பேருக்கான உணவை சேமித்து வைக்க முடியும்.அவசர நிலையில், பறக்கும்போதே விமானத்துக்கு எரிபொருளை நிரப்ப இயலாம்.

24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள்,அவசர நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேசன் தியேட்டர், பிராண்ட் பாண்ட், ரேடியோ, 19 டி.வி.க்கள் பொருத்தப்படவுள்ளது.

பிரதமருக்கென்று தனியாக அலுவலகம், படுக்கையறை வசதியும் இந்த விமானத்தில் ஏற்படுத்தப்படவுள்ளது.

http://www.tamilwin.com/security/01/108581

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

பிரதமர் மோடி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்தும் வகையில், அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு சென்று வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா என்று 40 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்னும் 3 ஆண்டு காலத்தில் அவர் மேலும் பல உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். தற்போது மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை.

ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பிரத்தியேகமாக கட்டப்பட்டது. பிரதமர் மோடிக்கும் தீவிரவா அச்சுறுத்தல் இருப்பதால், வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அவருக்கென்று 2,100 கோடி மதிப்பீட்டில் பிரத்தியேக விமானம் தயாரிக்கப்படவுள்ளது.

எனவே பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777 - 300ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த இராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த விமானத்துக்கு ஏர்இந்தியா ஒன் என்று பெயர் சூட்டப்படும். இந்த விமானத்தில் ஏவுகணை முறியடிப்பு வசதி , நவீன தகவல் தொடர்பு வசதிகள். ராக்கெட் தாக்குதலை தாங்கும் வலிமை கொண்டது.

எதிரியின் ரேடார் வலையில் சிக்காது. எதிரியின் ரேடாரை செயல் இழக்க வைக்கும். ரேடார் கண்காணிப்பையும், ஏவுகணை நெருங்குவதையும் முன்கூட்டியே தெரிவித்து விடும்.

ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு வசதிகள், 2 ஆயிரம் பேருக்கான உணவை சேமித்து வைக்க முடியும்.அவசர நிலையில், பறக்கும்போதே விமானத்துக்கு எரிபொருளை நிரப்ப இயலாம்.

24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள்,அவசர நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேசன் தியேட்டர், பிராண்ட் பாண்ட், ரேடியோ, 19 டி.வி.க்கள் பொருத்தப்படவுள்ளது.

பிரதமருக்கென்று தனியாக அலுவலகம், படுக்கையறை வசதியும் இந்த விமானத்தில் ஏற்படுத்தப்படவுள்ளது.

http://www.tamilwin.com/security/01/108581

ரெம்ப முக்கியம், ஏழைகளின் பசியைப்போக்கினாலே இன்னும் பல வருடத்திற்கு பிரதமராக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் 'பகவத் கீதையில' ஒரு பிரதியையும் வைச்சிருக்கிறது நல்லது!

நீண்ட பறப்புக்களின் போது பொழுது போக்க உதவும்!

எவ்வளவு நேரம் தான் 'இந்து' பேப்பரையே படிச்சுக்கொண்டிருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழரசு said:
 
* 2000 பேருக்குத் தேவையான உணவு இருப்பு வைக்கும் வசதி.
 
* 24 மணி நேர அதிநவீன மருத்துவ வசதி, அறுவை சிகிச்சை அரங்கம், 19 தொலைக்காட்சிப் பெட்டிகள்.

305312-modi-bandhgala-his-own-name.jpg

பிரதமருடன் அந்த விமானத்தில்... பயணிக்கப் போகின்றவர்கள் 60-70 பேர் வரை தான் இருக்கும். 
அதற்கு... 2000 பேருக்கான உணவு கையிருப்பும், அறுவைச் சிகிச்சை அரங்கமும் மிக அதிகம்.

ஒபாமா இந்தியாவுக்கு வந்த போது.... அவரை வரவேற்க நரேந்திர  மோடி என நெய்யப்பட்டு, 
ஒரு முறை மட்டுமே   அணிந்த கோட் சூட்டின் விலை.... 14 லட்ச  ரூபாய்.
அப்படிப் பட்ட பிரதமருக்கு.... 2000 கோடியில் விமானம் வாங்கா விட்டால்  பொருத்தமாயிராது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

305312-modi-bandhgala-his-own-name.jpg

பிரதமருடன் அந்த விமானத்தில்... பயணிக்கப் போகின்றவர்கள் 60-70 பேர் வரை தான் இருக்கும். 
அதற்கு... 2000 பேருக்கான உணவு கையிருப்பும், அறுவைச் சிகிச்சை அரங்கமும் மிக அதிகம்.

ஒபாமா இந்தியாவுக்கு வந்த போது.... அவரை வரவேற்க நரேந்திர  மோடி என நெய்யப்பட்டு, 
ஒரு முறை மட்டுமே   அணிந்த கோட் சூட்டின் விலை.... 14 லட்ச  ரூபாய்.
அப்படிப் பட்ட பிரதமருக்கு.... 2000 கோடியில் விமானம் வாங்கா விட்டால்  பொருத்தமாயிராது.

இவர்கள் முன்னோடிகளான..மகாத்மா காந்தி..ஒவ்வொரு இந்தியப் பிரஜையும் நல்ல உடை அணியும் நாள் வரும் வரைக்கும்..நான் கதர் வேட்டி தான் அணிவேன் என்று கூறினார்!

கிழக்கு லண்டன் குளிரிலும் கூட...தனது வாக்கைக் காப்பாற்றிக் காட்டினார்!

இவ்வளவுக்கும் மகாத்மா கோட்டு சூட்டுடன் தொழில் செய்த ஒரு Queen Council  பாரிஸ்டர்!

உலகம் மாறுகிறதோ இல்லையோ...இந்திய அரசியல் வாதிகள் மட்டும் வானில் பறக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

யோக பயிற்சி செய்ய தனி அறை வைச்சிருக்கோ விமானத்தில்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.