Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார்: திருமாவளவன் வீசும் புதிய குண்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் தினமும் ஒவ்வொரு தகவலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றன.
 
1468578015-5566.jpg
 
 
இந்நிலையில் பிராமண பெண்ணான சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்னர் முஸ்லீம் ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார் என ஒரு சில கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. பின்னர் ராம்குமார் கைது செய்யப்பட்டதும் முஸ்லீம் குறித்த தகவல்கள் மங்கிப்போனது.
 
ராம்குமார் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தலித் அமைப்புகள் ராம்குமாருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. இதனையடுத்து ஸ்வாதி முஸ்லீம் மதத்துக்கு மாற இருந்ததாகவும், ரமலானுக்கு நோம்பு இருந்து கடைபிடித்ததாகவும் தகவல்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தது.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், முஸ்லீம் மதத்துக்கு மாறும் மன நிலையில் சுவாதி இருந்துள்ளதாக, அவரது நட்பு வட்டத்தினர் மூலம் தெரியவந்துள்ளது.
 
சுவாதி முஸ்லீம் மதத்திற்கும் மாறும் மனநிலைக்கு வர என்ன காரணம், அவர் மதம் மாறுவது பிடிக்காத சிலர் கூட இந்தக் கொலையை செய்திருக்கலாம். எனவே, காவல்துறையினர் ஒரே வழியில் விசாரணையை தொடராமல், பல கோணங்களில் விசாரிக்க வேண்டும் என்று திரியை கொளுத்தி போட்டுள்ளார் திருமாவளவன். அவர் கொளுத்தி போட்டிருக்கும் இந்த திரி பற்றி எரியுமா அல்லது அப்படியே அனைந்துவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/swathi-case-thirumavalavan-special-interview-116071500049_1.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும்  சுவாதி கொலை  நல்லதொரு தீனி.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்து சுவாதியின் அப்பா மீது தான் சந்தேகம்...அவர் தான் கூலிப் படை வைத்து செய்திருப்பார் என்று நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்து சுவாதியின் அப்பா மீது தான் சந்தேகம்...அவர் தான் கூலிப் படை வைத்து செய்திருப்பார் என்று நினைக்கிறேன்

சுவாதியின் குடும்பம் பிராமணர் என்று நினைக்கின்றேன், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் ராம்குமார் வேறு ஜாதி.
தமிழ் நாட்டில்... இதனை ஒட்டி, பல கொலைகளை தம் பிள்ளைகள் மீதே... பெற்றோர்கள் செய்து இருக்கின்றார்கள்.

அதற்குப் பெயர்..... "கருணைக் கொலை". தன் சாதிக்காக,  தன்   பிள்ளையையே.... கொலை செய்யும் மனித மிருகங்கள், இன்றும்  அங்கு   இருக்கின்றது. 

சுவாதியின்.... தகப்பன், ஒவ்வொரு நாளும் அவரை... வீட்டில் இருந்து  ரயில் நிலையம் வரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச்  சென்றவர், ராம்குமார்  பின் தொடர்ந்தை... அறிந்தும் அறியாத அப்பாவியா? 
இவ்வளவிற்கும்.... அவர் உளவியல் ஆலோசராக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்.
 
சந்தேகம்..... சுவாதியின் தந்தை மீது தான்.... எனக்கும் ஏற்படுகின்றது.

Edited by தமிழ் சிறி

10 hours ago, ரதி said:

எனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்து சுவாதியின் அப்பா மீது தான் சந்தேகம்...அவர் தான் கூலிப் படை வைத்து செய்திருப்பார் என்று நினைக்கிறேன்

சுவாதியின் குடும்பத்தினர் முக்கிய பல விடயங்களை மறைத்து வருவது தெளிவாகியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்த மரணம் குறித்து மேலும் ஒரு சில சந்தேகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கி விட்டது. ஆனால், காவல்துறைக்கே பிலால் மாலிக் யார் என்பது தெரியவில்லை. ஒய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிட்டார். இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை. அதோடு, சமீபமாக, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலை வழக்கில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இந்த மரணம் குறித்து மேலும் ஒரு சில சந்தேகங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொல் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில், சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் புலனாய்வைத் தொடங்கும் முன்பே பிலால் மாலிக் மற்றும் ராம்குமார் பெயர்கள் வெளிவரத் தொடங்கி விட்டது. ஆனால், காவல்துறைக்கே பிலால் மாலிக் யார் என்பது தெரியவில்லை. ஒய்.ஜி. மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு முஸ்லிம் என்றும், பிலால் மாலிக் என்றும் பெயர்களை வெளியிட்டார். இந்த பிலால் மாலிக் என்பவர் யார், அவரைப் பற்றிய தகவல்கள் ஏன் வெளியாகவில்லை. அதோடு, சமீபமாக, சித்திக் பிலால் அல்லது மாலிக் என்பவர் சுவாதி கொலை வழக்கில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.

   

ரம்ஜான் பண்டிகையின் போது சுவாதி நோன்பு இருந்ததாகவும், அவர் விரைவில் இஸ்லாமுக்கு மாறிவிடுவார் என்ற தகவல் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தெரிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் போது, ரத்தக் கறை படிந்த சட்டை ராம்குமார் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது தற்போது மறுக்கப்படுகிறது. இதில் எது உண்மை?

ராம்குமாரும் சுவாதியும் பேஸ்புக்கில் நட்பாகி, ராம்குமார் நெல்லையில் இருந்து சென்னை வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் 2014ம் ஆண்டுக்குப் பிறகு எதுவுமே பதிவாகவில்லை. சுவாதி பற்றிய பதிவு எதுவும் இல்லை. சுவாதி கொல்லப்பட்டவுடன் சுவாதி என்று ராம்குமார் தனது பேஸ்புக்கில் search செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. நன்கு அறிந்த ஒருவரைப் பற்றி அவர் ஏன் Search செய்ய வேண்டும்?

சுவாதிக்கும் ராம்குமாருக்கும் காதல் இருந்ததாக பேஸ்புக்கில் எந்த தகவலும் இல்லை. சுவாதிக்கும் பிலாலுக்கும் நட்பு இருந்தது என்றும், சுவாதி கொலைக்குப் பின்னால் பிலால் மாலிக் என்பவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானதன் பின்னணி என்ன? உடனடியாக பிலால் மாலிக்கை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தாதது ஏன்?

காவல்துறை எங்கள் மேன்ஷனில் வந்து விசாரிக்கவில்லை. அப்பகுதியில் இருக்கும் அனைத்து மேன்ஷன் மேலாளர்களையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்துத்தான் விசாரித்தார்கள் என்றுதான், ராம்குமார் தங்கியிருந்ததாக கூறப்படும் மேன்சன் மேனேஜர் அல்லது உதவியாளர்கள் கூறுகிறார்கள். இத்தனை விஷயங்களையும் எவ்வாறு புறந்தள்ள முடியும்? இதில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதால்தான், சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தமிழச்சி என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சுவாதிக்கு திருமணம் ஆகிவிட்டது. அது ‪ரிஜிஸ்டர்_ மேரேஜ்‬ என்றும் கூறுகிறது.

அவர் கொல்லப்படும் போது ‪நோம்பு‬ இருந்ததாகவும் கூறப்படுகிறது.

உடனே இந்த கொலையை சுவாதியின் கணவர்தான் செய்திருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருவதைவிட, இது ஏன் ஆணவக் கொலையாக இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவனிக்கத் தவறுகிறோமா? அல்லது தவிர்க்கிறோமா?

ஏற்கனவே திருமணமாக கதையை ஏன் சுவாதியின் பெற்றோர் மறைக்க வேண்டும் அப்படியானால் சுவாதியின் பெற்றோருக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஏன் காவல்துறையினர் விசாரிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161648&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.