Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

Featured Replies

அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு
 

18213f-dsfsdf.jpgபிரிட்­டனில் வசிக்கும் அழ­கு­ ரா­ணி­யான குமாரி மகேந்­தி­ரனை (26) அவரின் தாயார் சித்­ராணி மகேந்­திரன் (74) கத்­தியால் குத்­தி­யமை தொடர்­பான வழக்கு பிரிட்­டனின் வேல்­ஸி­லுள்ள கர்டிவ் கிரவுண் நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்­டது.

 

வேல்ஸ் பிராந்­தி­யத்தின்  உள்ளூர் அழ­கு­ராணி போட்­டி­களில் பங்­கு­பற்­றிய பின்னர், 2013 மிஸ் வேல்ஸ் அழ­கு­ராணி போட்­டி­யிலும் பங்­கு­பற்­றி­யவர் குமாரி மகேந்­திரன்.

 

குமாரி மகேந்­திரன் உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது அவரின் தாயார் கழுத்தில் கத்­தியால் குத்­தி­ய­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.


தனது தாயாரை தாய­க­மான இலங்­கைக்கு அனுப்­பு­வ­தற்கு தான் ஏற்­பாடு செய்த சில நாட்­களில் இத்­ தாக்­குதல் இடம்­பெற்­ற­தாக அழ­கு­ராணி குமாரி மகேந்­திரன் சாட்­சி­ய­ம­ளித்தார்.


தான் கட்­டிலில் படுத்­தி­ருந்­தபோது, தனது தாயார் தனது தலை
­ம­யிரை கோதி­யதால் இரு தட­வைகள் தான் விழித்­தெ­ழுந்­த­தா­கவும் ஆனால், 'உறங்கு உறங்கு' என தனது தாயார் கூறி­ய­தை­யடுத்து தான் உறங்­கி­விட்­ட­தா­கவும் மூன்­றா­வது தடவை விழித்­தெ­ழுந்­த­போது தனது கழுத்தில் கத்­தியால் குத்­தப்­பட்­டி­ருந்­த­தா­கவும் குமாரி மகேந்­திரன் கூறினார்.

 

'எனது கழுத்தில் கடும் குத்து விழுந்­ததைப் போல் உணர்ந்தேன். நான் விழித்­தெ­ழுந்­த­போது எனது தாயார் கத்­தி­யுடன் எனக்கு முன்னால் நின்று கொண்­டி­ருந்தார்.


18213kumari.jpgஇதனால் நான் பெரும் அதிர்ச்­சியும் குழப்­பமும் அடைந்தேன்.

 

அவர் என்னை கத்­தியால் குத்­தி­னாரா என நான் யோசித்தேன்.

 

எனது கழுத்தை தொட்டுப் பார்த்­த­போது இரத்தம் வரு­வதை உணர்ந்தேன்.

 

'அம்மா நீங்கள் என்னைக் கத்­தியால் குத்­தி­விட்­டீர்கள்' என நான் கூறினேன்' என குமாரி மகேந்­திரன் நீதி­மன்றில் தெரி­வித்தார்.


அதன்பின் தன்னை தனது தாயார் கத்­தி­யுடன் துரத்­தி­ய­தா­கவும் இதனால், தனது இரவு உடை­யுடன் இரத்தம் வடிந்த நிலையில் வீட்­டி­லி­ருந்து தான் வெளியே ஓடி வந்­த­தா­கவும் அவர் கூறினார்.


வேல்­ஸி­லுள்ள கேர்டிவ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கணி­தத்­து­றையில் கல்வி கற்­றவர் குமாரி மகேந்­திரன்.

 

இத் ­தாக்­கு­த­லினால் தனது செல்­லிடத் தொலை­பே­சியில் இரத்தம் தோய்ந்­தி­ருந்­ததால் அத்­தொலை­பே­சியை 'அன்லொக்' செய்­வ­தற்கு தன்னால் முடி­ய­வில்லை எனவும் இதனால், அம்­பி­யூ­லன்­ஸுக்கு அழைப்பு விடுக்­கவும் தான் சிர­மப்­பட்­ட­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

 

18213_Kumari-Mahendran-1.jpg

 

'எனக்கு மயக்கம் ஏற்­ப­டு­வது போல் உணர்ந்தேன். அச்­ச­ம­டைந்­தி­ருந்தேன். வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்­சித்­த­போது என்னால் சாவியை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

 

அவர் என்­னுடன் மோதலில் ஈடு­பட்டார். எனக்கு அம்­பி­யூலன்ஸ் தேவை என நான் கூறினேன்.

 

ஆனால், பொலி­ஸா­ரிடம் என்ன கூறு­வது என்­பது குறித்து நாம் கலந்­து­ரை­யாட வேண்­டு­மென அவர் கூறினார்.

 

18213_kumari-2.jpgதனது தாயா­ருடன் மல்­லுக்­கட்டி, அவரின் கையி­லி­ருந்து கத்­தியை தான் பிடுங்­கி­ய­தா­கவும் அவரை தள்­ளி­விட்டு விட்டு முன்­புற கதவை நோக்கி ஓடி­ய­தா­கவும் குமாரி மகேந்­திரன் தெரி­வித்தார்.

 

குமாரி மகேந்­திரன் கத்­திக்­கொண்டே வீதியில் சென்­றதை தான் கண்­ட­தாக அய­ல­வ­ரான எலின் கூப்பர் எனும் யுவதி (18) சாட்­சி­ய­ம­ளித்தார்.

 

'எனக்கு உத­வுங்கள், எனது தாயார் கத்­தியால் குத்தி விட்டார்' என குமாரி சத்­த­மிட்டார் என எலின் கூப்பர் கூறினார்.

 

இரத்தம் தோய்ந்­தி­ருந்த குமா­ரியை மற்­றொரு அய­ல­வ­ரான நியா டேவிஸ் தனது வீட்­டுக்கு அழைத்துச் சென்று அம்­பி­யூலன்ஸ் வரும் வரை காத்­தி­ருந்­தாராம்.

 

திரு­மதி சித்­ராணி மகேந்­திரன் தற்­போது நோட்­டிங்ஹாம் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் உள­வியல் சிகிச்சை பெறு­வதால் அவர் நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக முடி­யா­துள்­ள­தாக நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

 

அவர் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் அளவுக்கு திட நிலையில் இல்லை என பல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என சட்டத்தரணி அன்ட்ரூ ஜோன்ஸ் கூறினார்.

 

சித்ராணி மகேந்திரன் குற்றம் புரிந்துள்ளார் எனவும் அவருக்கான தண்டனை குறித்த அறிவிப்பு எதிர்வரும் செப்டெம்பர் வரை ஒத்தி வைக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

 

18213_10686790_10152484752766699_4554774

 
 
- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=18213#sthash.7dUlVtSJ.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன், என்ற (26 வயது) தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குமாரி மகேந்திரன் தெரிவிக்கையில்,

தான் உறக்கத்தில் இருந்த போது கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தான் விழித்துக்கொண்டமையினால் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கே அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த பெண், 2013ஆம் ஆண்டு ‘மிஸ் வேல்ட் ’ அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

625.0.560.350.160.300.053.800.668.160.90

http://www.tamilwin.com/lifestyle/01/112265

  • கருத்துக்கள உறவுகள்

உலக அழகு ராணிப் போட்டியில் கலந்து கொண்ட  ஒருவர்,
தனது தாய் மனநிலை பாதிக்கப் பட்டிருப்பது தெரிந்தும், இங்கிலாந்தில் மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுக்காமல்,
ஊருக்கு அனுப்பி..... தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முனைந்தது பிழைதானே....

  • கருத்துக்கள உறவுகள்

இவ உண்மையிலேயே ஒரு அழகுராணியா என்பதில் புடுங்குப்பாடு வந்திருக்கலாமில்லையா? :D: சும்மா பகிடிக்கு.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

இவ உண்மையிலேயே ஒரு அழகுராணியா என்பதில் புடுங்குப்பாடு வந்திருக்கலாமில்லையா? :D: சும்மா பகிடிக்கு.. :unsure:

லண்டனுக்கு கஸ்ரகாலம் எப்படியெல்லாம் வருது.tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.