Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேண்டியது கிடைக்கும் என்று நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய 19-வயது ’கல்லூரி மாணவி’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காளிக்கு காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ரீவாவில் உள்ள காளி கோவிலில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. நாக்கை அறுத்துக் கொண்ட டி.ஆர்.எஸ். கல்லூரி மாணவி ஆர்த்தி, சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் கனவில் வேண்டியது அனைத்தும் கிடைக்க கடவுள் நாக்கை கேட்டதாக கூறிஉள்ளார். மாணவின் சகோதரர் சச்சின் பேசுகையில், ”கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறினார். இது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

ஆனால் அவள் அதனை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு உள்ளாள். அவள் விளையாடுகிறாள் என்றுதான் நினைத்தேன்.

படிக்காதவர்கள் மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கி உள்ளவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்றுதான் நான் கேள்வி பட்டு உள்ளேன், ஆனால் என்னுடன் பிறந்த சகோதரி இப்படி மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பார் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறிஉள்ளார்.

மாணவி ஆர்த்தில் கனவு கண்ட மறுநாளே காளி கோலிக்கு சென்று தனது நாக்கை அறுத்து உள்ளார். உடனடியாக மயக்கம் அடைந்து விழுந்துவிட்டார். சம்பவம் நடைபெற்ற போது கோவிலில் பூஜாரி மற்றும் பெண்கள் நின்று உள்ளனர். அவர்கள் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், பூஜாரியின் பேச்சை கேட்டு துணி ஒன்றை போட்டு மூடிஉள்ளனர். விளக்கு மற்றும் ஊதுவர்த்தியை சுற்றிலும் ஏற்றிவைத்து உள்ளனர்.

இரத்தம் வழிந்த நிலையில் மாணவி ஆர்த்தி 5 மணிநேரங்கள் அங்கே கிடந்துஉள்ளார். பின்னர் அவராகவே மயக்கம் தெளிந்து எழுந்து உள்ளார். அப்போதும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவில்லை. கோவிலை சுற்றிஉள்ளார். இதுதொடர்பாக செய்தி வெளியாகியதும் அரசு அதிகாரிகள், போலீசார் மற்றும் மருத்துவர்கள் அங்கு சென்றனர். மருத்துவர்கள் முதல் உதவிசெய்தனர். பின்னர் மாணவி வீட்டிற்கு சென்றுவிட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உள்ளூர் செய்தியாளர் பேசுகையில், படிக்காதவர்கள்தான் இதுபோன்ற மூடநம்பிக்கையான செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இவ்விவகாரத்தில் படித்த ஒரு மாணவி ஈடுபட்டு உள்ளார் என்பது வருத்தமளிக்கிறது என்று கூறிஉள்ளார். இதுபோன்ற செயல்கள் நல்லது கிடையாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

http://www.tamilwin.com/culture/01/113776

  • கருத்துக்கள உறவுகள்

19 வயது கல்லூரி மாணவிக்கு, புத்தி... இப்படி ஏன் போனது? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

19 வயது கல்லூரி மாணவிக்கு, புத்தி... இப்படி ஏன் போனது? :mellow:

இது பலருக்குத் தீனி போடும் கதையாக போகிறது 

அடியே பாவிபுள்ள பக்தி பக்தியாக இருக்க வேண்டும் இப்படி பலிகொடுக்கவா சொன்னான் இறைவன்  

On 11/08/2016 at 1:36 AM, தமிழரசு said:

வேண்டியது அனைத்தும் கிடைக்க கடவுள் நாக்கை கேட்டதாக கூறிஉள்ளார்

ஆமா,

இனி வேண்டியதெல்லாம் மற்றவர் தயவிருந்தால் கேட்க்காமலே கிடைக்கும் - அதுதான் பேச முடியாதே.

ஆனால் நாக்கு மட்டும் மறுபடியும் கிடைக்காது மகளே.

  • கருத்துக்கள உறவுகள்

எனி என்னத்தை வேண்டுறது. கடவுளேன்னு சொல்லி வேண்ட நாக்கே இல்லையே. நல்ல காணிக்கை. எவனோ ஒருவன் தப்பிட்டான். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

எனி என்னத்தை வேண்டுறது. கடவுளேன்னு சொல்லி வேண்ட நாக்கே இல்லையே. நல்ல காணிக்கை. எவனோ ஒருவன் தப்பிட்டான். tw_blush:

நெடுக்கரின் புழுகத்தைப் பார்க்க... சிரிப்பை அடக்க முடியவில்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் வாயில்லாப் பூச்சியை பார்த்துப் புளுகமா..?! :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ம் ஒருவன்  தப்புகிறான் என்றால் எனக்கும் சந்தோசமே கன்பேருக்கு மனிசி மார் ஏசி ஏசி காது அடைத்து போனதாக செய்தி கேள்விப்பட்டேனே யாராவது உள வரவும் 

கன பேர் காதுக்குள் பஞ்சு வைத்து  திரிவது எனக்கு தெரியும் சொல்லவா வேண்டாமா 
என்னிடல் லிஸ்ட் இருக்கிறது தமிழ் சிறியர் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.