Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நா முத்துக்குமார் பாடல்கள்

Featured Replies

பாடல்: நினைத்து நினைத்து பார்த்தால்

பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்

பாடியவர்: ஸ்ரேயா கோஷல்

படம்: 7 G ரெயின்போ காலணி

இசை: யுவன்சங்கராஜா

 

நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ......
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்துப்படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் உனக்கு கண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ......
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமா
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில்
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா
தொடந்து வந்த நிழலின் பிம்பம் வந்து வந்து போகும்
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும்
ஒரு தருணம் என்னடா
காதலா உன்னுள் வாழ்கிறேன்

 

 

பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்
திரைப்படம்: பீமா
பாடியவர்: ஹரிஹரன் , மஹதி, ஆர்.ப்ரசன்னா
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

முதல் மழை எனை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ம்ம் இதமாய் மிதந்ததே

கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்

என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம்நின்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்

கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்


முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா

பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓ ஓ ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

  • தொடங்கியவர்
நா.முத்துக்குமாருக்கு சமுத்திரக்கனியின் அஞ்சலி! ( வீடியோ )
 
கவிதை வனத்தின்
 புல்லாங்குழலாய் 
ராகமிசைத்த
 நா.முத்துக்குமாருக்கு 
இயக்குநர் சமுத்திரக்கனியின் 
அஞ்சலியாக இது....
 
 
 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=171908

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வினா வினா ஒரே வினா
படம்: பாபநாசம்
இசை: ஜிப்ரான்
பாடியவர்: ஹரிகரன்
வரிகள்: நா.முத்துக்குமார்

 

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணற் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
சிக்குதே சிக்குதே மனது பாவம் எனும் பொய் வலையில்

அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும்
இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய ஆவனம் செய்த அறம் நம்மை காத்திடும்

வினா வினா ஓர் வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே
புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே

பாறை மேலே தேரே போனால் பாத சுவடு இல்லையே
வேறை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே

கூறா மனமே ரகசியம்
உலகில் உறவே அவசியம்

வினா வினா ஒரே வினா
விடாமலே எழும் வினா

நிறைவுறா ஒரே கனா
இறைவனா மனிதனா

ஆற்றில் செல்லும் நீரில்
நேற்றின் வெள்ளம் எது

நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின் ஊடாய்

சாயா நாணல் காடாய்
வேண்டும் ஓர் மேன்மையே

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

படம் : நளதமயந்தி
பாடல் : என்ன இது
இசை : ரமேஷ் விநாயகம்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மாயி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஊடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ

காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ

எதுவுமே… எதுவுமே… எதுவுமே…
எதுவுமே… நடக்கலாம் இறகின்றி
இளமனம் பறக்கலாம்

இதுவரை…
விடுகதை இனிவரும் கதை ஒரு தொடர் கதை

வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்

ஊமைக்கொரு வார்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹால் தான்

கல்லரையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

இனி வரும்….
இனி வரும் இரவெல்லாம் சீனத்தின் சுவரை போல்
நீளலாம்

உனக்கு நான்…. பிறந்தவள்
மனமென்னும் கதவை தான் திறந்தவள்

காதல் பிறந்தால் காவல் கடக்கும்

பூட்டி வைத்த கூட்டுக்குள்ளே காதல் என்றும்
நின்றதில்லை

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ
நாடி எங்கும் ஊடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்ன கொல்வது
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது

 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.