Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`போர்க்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்'

Featured Replies

`போர்க்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்'

160902142318_srilanka_ban_ki_moon_in_vee

 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார்.

தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூன் இக் கருத்தைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் விஜயம் செய்தபோது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் பெருத்த மாற்றம் இருப்பதாகவும், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

"தற்போது, பல்வேறு முன்னேற்றங்களைப் பார்க்கிறேன். முன்பு பெருமளவில் முகாம்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள், தற்போது அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இளைஞர்கள் உத்வேகத்துடனும், திறன் படைத்தவர்களாகவும் உள்ளனர்" என்றார்.

தற்போது, நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக இலங்கை அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று தெரிவித்த அவர், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகம் அமைக்கும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

போரின் இறுதிகட்டத்தின்போது, ஐ.நா. மன்றம் அக்கறை காட்டவில்லை என்பதை அவர் மீண்டும் ஒப்புக்கொண்டார்.

“போரின் இறுதிக்கட்டத்தில், ஐ.நா. மன்றம் அக்கறை காட்டவில்லை. அது தவறு செய்துவிட்டது என்பது உள்ளக விசாரணையில் தெரியவந்தது. அதனால்தான், மக்களின் வாழ்க்கை, மனித உரிமைகள் முக்கியமானவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/09/160902_judicialmechanism

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விட்டுப் போகிற நேரம் நிறய தந்திருப்பினம்......சந்தோசம் பாடிப்போட்டு போங்கோ....பாதிக்கப் பட்ட மக்கள திரும்பிப் பார்ர்க்காத நீங்களூம்...உங்கட  பதவியும்...

  • கருத்துக்கள உறவுகள்

 ஏற்கனவே நீங்களும், இலங்கையும் இணைந்து தீர்மானித்து, என் இனத்தை கருவறுத்து முடிஞ்சாச்சுது. கல்லறையையும் கிளறியாச்சு.  இனி என்னத்தை புதுசாய் தீர்மானிக்கப் போறீர்கள்? ஏதாவது தெருக்கூத்து ஆரம்பியுங்கோ. ஓய்வு காலத்தில பயிற்சி அளிக்க உதவும். உங்கட சோத்தும்  இப்ப அதைத்தான் செய்யிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் மங்கு சொல்லிட்டார்...உள்.....உள்தான்.....வெளீ இல்லை...பாங்கு நிற்கையில்..மங்கு....மாங்கி விட்டார்..

Edited by alvayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.