Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா அறிவிப்பு

Featured Replies

அணு ஆயுத சோதனை வெற்றி: வடகொரியா அறிவிப்பு

160909060555_north_korea_nuclear_test__6

 

வடகொரியா, தனது ஐந்தாவது, மிகப்பெரிய அணு அயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அணு அயுத சோதனை நடத்திய இடத்தில் 5.3 புள்ளிக் அளவுக்கு நில அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், இதற்கு முன்பு நடத்திய சோதனைகளைவிட இது இரண்டு மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கக் கூடும் என தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிதாக தயாரிக்கப்பட்ட அணு ஆயுதம் சோதித்துப் பார்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நடுத்தர ரக ஏவுகணையில் அணு ஆயுதத்தை செலுத்தும் திறனை அடைந்திருப்பதாகவும் வடகொரியா கூறுகிறது.

அதே நேரத்தில், வடகொரியா சோதித்தது ஹைட்ரஜன் குண்டா என்பது குறித்து தென்கொரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏனெனில், சாதாரண அணு ஆயுதங்களைவிட ஹைட்ரஜன் குண்டுகள் மிகவும் அதிகத் திறன் படைத்த வெடிசக்தி உடையது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டனம்

வடகொரியாவின் இந்த நடவடிக்கை, தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நடவடிக்கை என்று தென் கொரிய அதிபர் பார்க் குயென்-ஹை கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, வடகொரியாவை, சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கே வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டு அதிகாரிகளுடன் அவசர ஆலோசன நடத்திய தென்கொரிய அதிபர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தார்.

வடகொரியாவின் ஒரே முக்கிய ராஜாங்க கூட்டாளியான சீனா, அணு ஆயுத சோதனையை தீவிரமாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. நிலைமையே மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என வடகொரியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுக்கு எதிரான நாடுகள், தற்போதைய நடவடிக்கைக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் தடுமாறுவதாக கொரியாவின் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கடந்த ஜனவரியில் வடகொரியா நடத்திய நான்காவது அணு ஆயுத சோதனைக்குப் பிறகு அந்த நாட்டின் மீதான தடை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.com/tamil/global/2016/09/160908_northkoreatest

  • கருத்துக்கள உறவுகள்

“எங்களின் விஞ்ஞானிகள், புதி தாக உருவாக்கப்பட்ட அணு ஆயு தத்தை, நாட்டின் வடக்குப் பக்கத் தில் உள்ள அணு ஆயுத பரிசோ தனைக் களத்தில் வெடிக்க வைத்து சோதனை செய்தனர். விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட் டுள்ளது. 10 கிலோ டன் அளவுள்ள இந்த அணுகுண்டு வெடிப்பு, வட கொரியாவின் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையாகும்” என வட கொரிய டிவியில் தெரிவிக்கப்பட் டுள்ளது. “இந்த அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் ஏற்பட்ட அதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 5.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இது வடகொரியாவின் நான்காவது அணு ஆயுதச் சோதனையை விட இரு மடங்கு அதிகம். அமெரிக் காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மிடில்பரி சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி லூயிஸ் கூறும்போது, “வடகொரியா அணு ஆயுத சோதனைகளின் நிலஅதிர்வு வீச்செல்லை 20-30 கிலோ டன் அளவுக்கு இருக்கும். இது, இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்கா கண்ட னம் தெரிவித்துள்ளது. “இதன் பின் விளைவுகளை வடகொரியா சந் திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித் துள்ளார். ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் இந்த செயல் பைத்தியகாரத்தனமானது, பொறுப்பற்றது என தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை விமர்சித்துள்ளார்.

“இதன் மூலம் வடகொரியா கிம் ஜாங் உன் ஆட்சிக்காலத்தில் மேலும் தடைகளையும் தனிமைப் படுத்தலையும் எதிர்கொள்வதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடி யாது. மேலும் இத்தகைய தூண்டு தல் நடவடிக்கை அந்நாட்டை சுய அழிவை நோக்கி வேகமாக முடுக்கி விட்டுள்ளது. வட கொரியா மீது இன்னும் வலுவான தடைகளை வலியுறுத்துவோம்” என பார்க் கியூன் ஹை தெரிவித்துள்ளார்.

சீனா எதிர்ப்பு

சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “வடகொரி யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அணு ஆயுதக் குறைப்பு தீர்மானத்துக்கு வடகொரியா உரிய மரியாதை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/வடகொரியா-5வது-முறையாக-அணுகுண்டு-சோதனை-ஹிரோஷிமாவில்-வீசப்பட்டதை-விட-சக்தி-வாய்ந்தது/article9089856.ece

வட கொரியா அணு ஆயுத சோதனைகளை செய்வதை எதிர்க்க அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எந்த தகுதியும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11.9.2016 at 5:49 AM, nunavilan said:

அமெரிக்கா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்கா கண்ட னம் தெரிவித்துள்ளது. “இதன் பின் விளைவுகளை வடகொரியா சந் திக்க நேரிடும்” என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித் துள்ளார். ஜப்பான் மற்றும் தென் கொரிய தலைவர்களுக்கு இது தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் இந்த செயல் பைத்தியகாரத்தனமானது, பொறுப்பற்றது என தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை விமர்சித்துள்ளார்.

 

On 11.9.2016 at 5:49 AM, nunavilan said:

சீனா எதிர்ப்பு

சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறும்போது, “வடகொரி யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அணு ஆயுதக் குறைப்பு தீர்மானத்துக்கு வடகொரியா உரிய மரியாதை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Zivilisten-leben-in-dem-seit-vier-Jahren-andauernden-Krieg-in-Syrien-gefaehrlich.jpg

ரஷ்யாவும் அமெரிக்காவும் சிரியாவிலை சின்னனாய் அணுகுண்டு ஆராய்ச்சி செய்யினமாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.