Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் மீண்டும் வன்முறை: பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்

Featured Replies

  • தொடங்கியவர்

களத்தில் கைகொடுக்கும் கர்நாடகத் தமிழ்ச் சங்கங்கள்!

Cauvery%20Row%20001.png

கர்நாடகம் பற்றி எரிகிறது... தமிழர்கள் மீது தாக்குதல்... வாகனங்கள் தீ வைத்து எரிப்பு என்றெல்லாம் வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து, உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்கள் பதைபதைக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய சூழலில், தமிழர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளன. அதிலும் சொந்தப் பகையைத் தீர்த்துக்கொள்வதுபோல இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தமிழர்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், கன்னடர்களின் வாகனங்களும்கூட பெங்களூருவில் எரிக்கப்பட்டிருப்பதே இதற்கு உதாரணம். எனவே, எதைக் கண்டும் பதற்றமடைந்து செய்திகளை பரப்பிவிடாதீர்கள் என்று வேண்டுகோள்களை முன்வைக்கின்றனர் பெங்களூருவைச் சேர்ந்த தமிழர்கள்.

இதற்கிடையில், மைசூர் தமிழச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கு.புகழேந்தி விடுத்திருக்கும் செய்தியில், ''நேற்று (12.9.2016) காலையிலிருந்து இரவு 11 மணி வரை கர்நாடகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் தொடர்பில் இருந்தோம். பெரிதாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை. எந்த மாவட்டத்திலும் தமிழர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ குழுவாகவோ வந்து தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. எந்த ஒரு தமிழரும் பயப்படத் தேவையில்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். அதேசமயம், ஏதாவது ஓர் ஆபத்து ஏற்பட்டாலும் அது எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் உடனே கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண் 100&க்கு தொடர்பு கொள்ளவும். மைசூர் தமிழ்ச்சங்கத்தையும் தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கர்நாடக காவல்துறை மூலம் உரிய பாதுகாப்புக் கொடுக்கப்படும்" என்று கூறியிருக்கிறார். மேலும், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலிருக்கும் தமிழ்ச்சங்க நிர்வாகிகளின் எண்களையும் பகிர்ந்திருக்கிறார். உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இதோ அந்த எண்கள்...
 
மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.
லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903.  
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

http://www.vikatan.com/news/india/68320-helplines-for-karnataka-tamilians-by-tamil-organizations.art

  • தொடங்கியவர்
கர்நாடகாவில் தொடரும் பதட்டம்: வன்முறையாளர்களை சுட உத்தரவு

 

பெங்களூரு: காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் இன்றும் பதட்டம் நீடிக்கிறது. இரு மாநில போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் பெங்களூருவில் ஒரு தமிழக பதிவெண் கொண்ட வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. கலவரம் நீடிக்கும் பட்சத்தில் ராணுவம் வரவழைக்கப்படலாம் என தெரிகிறது. காவிரி விவகாரம் மற்றும் கலவரம் ஆகியன குறித்து மாநில முதல்வர் சித்தராமையா இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இ்நத கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

டிவி சேனல்களுக்கு போலீசார் அறிவுரை : பெங்களூருவில் நடக்கும் கலவரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ அல்லது கலவரத்தை தூண்டும் வகையிலோ எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்ப வேண்டாம் என அனைத்து டிவி சேனல்கள், கேபிள் டிவிகளுக்கு ஐதராபாத் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில்,கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பஸ் போக்குவரத்து இயக்கப்படவில்லை. மைசூரு சிட்டியிலிருந்து ஸ்ரீரங்கபேட்டா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படவில்லை. அதேபோல், கோலார், பெங்களூரு, சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு புறநகர் பகுதிகளிலிருந்தும் இன்றும் தமிழகம் நோக்கி பஸ்கள் இயக்கப்படவில்லை. பெங்களூருவில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பெங்களூருவில் 12 முதல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு 100 என்ற எண்ணை அழைக்கலாம்.டுவிட்டரில் @BlrCityPolice ல் செய்தி அனுப்பலாம். 9480801000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மக்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம் என பெங்களூரு போலீசார் கூறியுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605736

  • தொடங்கியவர்

கர்நாடகா வன்முறையில் 1,000 கோடி இழப்பு..! பரிதவிக்கும் லாரி உரிமையாளர்கள்

cauver-protest-bangalore354-12-147367299

சேலம் : "காவிரி பிரச்னையால் கர்நாடகாவில் ஏற்பட்ட கலவரத்தில் 70க்கும் அதிகமான தமிழக லாரிகள் அடித்து சேதப்படுத்தி, தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் தமிழக லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது," என  லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

சேலத்தில் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி கூறியதாவது.

காவிரி நதிநீர் பிரச்னையில் கர்நாடகம் முதலில் ஆர்ப்பாட்டம், போராட்டத்தை தான் நடத்தி வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது திடீரென கலவரமாக வெடித்தது. இதில் தமிழக பதிவு எண் உள்ள வாகனங்களை சிலர் தாக்கத்துவங்கினர். தமிழக பதிவு எண்ணோடு இருக்கும் அனைத்து வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டு, தீயிட்டும் கொளுத்தப்பட்டது. நாங்கள் கலவரத்தின் போது அங்கு செல்லவில்லை. ஆனால் ஏற்கனவே கர்நாடகாவுக்கு சரக்குகளுடன் சென்ற லாரிகள் அங்கு இருந்தன. அந்த மாநிலத்தின் வழியாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கு லாரிகள் செல்வதால் நிறைய லாரிகள் அங்கிருந்தன.

950.jpg

இந்த சூழலில் நேற்று (12ம் தேதி) கலவரத்தின் போது  மட்டும் 70க்கும் அதிகமான லாரிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை மத்திய பேரிடர் மேலாண்மை வாரியம் ஏற்று, இழப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும். இன்னும் கர்நாடகாவில் எங்களுடைய சரக்கு வாகனங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கு கர்நாடக அரசும், கர்நாடக காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பாதுகாப்புக்காக மத்திய அரசு உடனே துணை ராணுவத்தை அனுப்பி கர்நாடகா கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/68324-during-protests-over-cauvery-dispute-tn-lorry-owners-loss-exceeded-rs1000-crore.art

  • தொடங்கியவர்
 
 
gallerye_232326693_1605873.jpg

பெங்களூரு: காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடகா முழுவதும் நேற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
 

 

Tamil_News_large_1605873_318_219.jpg

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடந்ததால், பெரும்பாலான தமிழர்கள்,
வீடுகளுக்குள்ளேயே பீதியுடன் முடங்கி கிடக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த, டில்லியிலிருந்து கர்நாடகாவுக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

'காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என்ற, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து, கர்நாடகா முழுவதும், நேற்று முன்தினம் பெரும் கலவரம் வெடித்தது;
தமிழர்களுக்கு சொந்தமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன; தமிழக பதிவெண் உடைய வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.கலவரத்தை கட்டுப்படுத்த, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய மாவட்டங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு அமலில் இருந்தாலும், பெங்களூரு ஹெக்கனஹள்ளி பகுதியில் நேற்று, போராட்டக்காரர்கள் வீதியில் குவிந்ததால், தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், போலீசார் அவர்களை கலைத்தனர்.
இதனால், பெங்களூருவின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றும் பதற்றம் நீடித்தது. பஸ், மெட்ரோ ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பெங்களூரு, சித்ரதுர்கா, மைசூரு ரோடு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில், தமிழக பதிவு எண் உடைய லாரிகள், தீ வைத்து எரிக்கப்பட்டன. மாண்டியாவிலும், விவசாயிகள், கன்னட அமைப்பினர் ஆங்காங்கே
கூடியதால், பதற்றமான நிலை காணப்பட்டது.

மைசூருவில் புகழ்பெற்ற லலித் மகாலில், ராகவா லாரன்ஸ், பானுப்ரியா நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. அப்போது, கர்நாடக ரக் ஷண வேதிகே அமைப்பை சேர்ந்தவர்கள், உள்ளே புகுந்து, ரகளையில் ஈடுபட்டனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில, அ.தி.மு.க., பொருளாளர் ராஜேந்திரன் வீடு, வணிக வளாகம், நிறுவனங்கள் மீது கல்வீச்சு நடந்தது. மாகடி ரோட்டில் தமிழருக்கு சொந்தமான பிரியாணி கடை அடித்து நொறுக்கப்பட்டது. மாண்டியா, ஆனேகல் பகுதியில் தமிழ் நாளிதழ்கள்

தீ வைத்து எரிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும், 13 இடங்களில் தடியடி நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட, 335 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தமிழர்கள் வீடுகளுக்குள் முடக்கம்




பெங்களூருவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களிடையே கடும் பீதி நிலவுகிறது. 'எப்போது என்ன நடக்குமோ...' என்ற அச்சத்துடனேயே வாழ்க்கை நடத்துகின்றனர்; தமிழில் பேச தயங்குகின்றனர்.தமிழகத்தின், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், திருப்பத்துார், திருப்பூர் உட்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்தும்,பிழைப்பு தேடி, வந்துள்ள தமிழ் குடும்பங்கள், பெங்களூருவில் பல பகுதிகளில் வசிக்கின்றனர்; அவர்கள் யாரும் நேற்று வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.அதேபோல், மைசூரு, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஹனுார், ஷிவமொகா, மாண்டியா, சிக்மகளூரு உட்பட பல பகுதிகளில், தமிழர்கள் வெளியில் செல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
 

துணை ராணுவம் குவிப்பு

 



வன்முறை தொடர்வதால், டில்லியிலிருந்து கூடுதலாக, 10 கம்பெனி துணை ராணுவத்தினர், பாதுகாப்புக்காக வரவழைக்கப் பட்டுள்ளனர்; இவர்கள், இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை, கர்நாடகா போலீஸ், டி.ஜி.பி., ஓம் பிரகாஷ், நகர போலீஸ் கமிஷனர் மேகரிக் உட்பட உயர் அதிகாரிகள், பாதுகாப்பு பணிகளை பார்வை
யிட்டனர். வன்முறை காரணமாக பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், வாகன எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 

 

கருணாநிதி மகள் வீடு முற்றுகை


 



பெங்களூரு ரூரல் கனகபுரா பகுதியில் உள்ள வதெராஹள்ளியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மகள் செல்விக்கு சொந்தமான பண்ணை வீட்டை, சமதா சைனிக் தளம் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவரது வீட்டின் முன், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

 

தொடர் ஆலோசனை கூட்டம்


பெங்களூருவில் நடக்கும் வன்முறை சம்பவங்களால், சர்வதேச அளவில், கர்நாடகா மாநிலத்தின், 'இமேஜ்' கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல்வர் சித்தராமையா, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, நேற்று காலை, 9:00 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்
களுடன் ஆலோசனை

 

நடத்தினார்.இதைத் தொடர்ந்து, காலை 11:30க்கு, அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். மதியம், 2:30க்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

ரயில் ஓடாது!



கன்னட அமைப்புகள் சார்பில், செப்., 14ல், 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்; அப்படி எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை. செப்., 15ல், கர்நாடகா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நாகராஜ், கன்னட சலுவளி கட்சி தலைவர்.
 

குறை கூற கூடாது


பெங்களூருவில் நடந்த அசம்பாவிதங்களை வைத்து, போலீசாரை குறை கூற கூடாது. இனி, இதுபோன்ற அசம்பாவிதம் நிகழாமல், போலீசார் எச்சரிக்கையாக இருப்பர். ௧6 இடங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, நிலைமையை பொறுத்து, வாபஸ் வாங்குவது குறித்து, நகர போலீஸ் கமிஷனர் தீர்மானிப்பார்.ஓம் பிரகாஷ் , கர்நாடக மாநில டி.ஜி.பி.,
 

'சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்'

 



கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது:கர்நாடகாவில் நடந்த வன்முறை சம்பவங்கள், எனக்கு வருத்தமளிக்கிறது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பொதுச் சொத்துகளை சேதப்படுத்த கூடாது. குமார் என்ற இளைஞர் இறந்துள்ளதாக தெரிகிறது; அவர், போலீசார் தடியடி அல்லது துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை. மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
தமிழர் உட்பட வேறு மொழி பேசுபவர்களின் உயிர், உடல் நலனுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு அவரும், உறுதியளித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
தண்ணீர் குறைவாக இருந்தாலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்கி வருகிறோம். 2017 ஜூன் வரை, குடிநீருக்கு தண்ணீர் வழங்கப்படும்.
காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் மீண்டும் நடக்கவுள்ளது. அப்போது, அரசின் நிலையை எடுத்து கூறுவேன். பிரதமர் தலையிட்டு பிரச்னையை தீர்க்க கேட்டுள்ளோம். ஓரிரு நாட்களில் அனுமதி கிடைத்துவிடும். தமிழர்கள் நம்பிக்கையுடன் இருக்கலாம். வன்முறையில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1605873

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

selfie.jpg

ஒரு அழிவைக்கூட செல்பி எடுத்து பெருமிதம் கொள்கின்றது ஒரு கேவலம் கெட்ட இனம்...
நெருப்புடா.........மகிழ்ச்சிடா tw_angry:

  • தொடங்கியவர்

 

''என்னை கன்னடம் பேச சொன்னார்கள், லாரியை உடைத்தார்கள்''...அன்று கர்நாடகாவில் என்ன தான் நடந்தது? தாக்கப்பட்ட லாரி ட்ரைவரின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
 

  • தொடங்கியவர்

 

இன்று கர்நாடகாவில் தமிழனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அவல காணொளி ...
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

 

இன்று கர்நாடகாவில் தமிழனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அவல காணொளி ...

கோபண்ணா (காங்.): சில விரும்பத்தகாத சம்பவங்கள் கர்நாடகாவில் நடந்திருக்கின்றன. தமிழக மக்கள் இதைப் பெரிதுபடுத்தக்கூடாது..

கே.டி.ராகவன் (பாஜக): இந்த மாதிரியான காணொளிகளை ஊடகங்கள் வெளியிடாமல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

பேராசிரியர் தீரன் (அதிமுக): மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தண்னீர் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் உச்ச நீதி மன்றத்தில் மேற்கொண்டிருக்கிறார்கள். காணொளின்னா என்னென்றே தெரியாது நமக்கு.. tw_blush:

சரவணன் (திமுக): காவிரி பிரச்சினையில் தலைவர் கலைஞர் அவர்களையே குற்றம் சாட்டும் ஊடகங்களுக்கு ஜெயலலிதாவை கேள்வி கேட்க திராணி இருக்கா?!

மக்கள்: உங்க மேல நமக்கு பயங்கர வெறி.. ஆனாலும் அடுத்த தேர்தல்ல உங்களுக்கே போட்ருவோம்.. tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழ்நாடு அரசு கன்டமெண்டு ஆப் த கோர்ட்டு (நீதிமன்ற அவமதிப்பு) வழக்குக்கு இப்போ போக முடியாது... தமிழ் ஈன தலைவரும் போகவில்லை ..மைசூர் மகாராணியும் போகவில்லை.. புதுச்சேரி.. கேரளா ,, போல மறுசீராய்வு மனு போட்டாச்சு.. ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒரு 3000 டிம்சிக்கு என்று அப்படி போட்டாலும் அவனுங்க திறந்துவிட்டா... அவுங்களே ஒத்துகிட்டாங்க  பாருங்க ...என்று  பாலி நாரிமன் தலைமையில் வாதாட  ஒரு கோஸ்டி.. முச்சந்தியில் நிற்கின்ற காரணம் ..ரெடியாகவே இருக்கு.. இது காலத்திற்கும் தலைவலியாக மாறிவிடும்... ( தமிழகத்திற்கு ஒரு துளி தண்ணீர் கூட தர முடியாது - எம்.பி. பாட்டீல் திட்டவட்டம் ..)   அதனால் தான் இந்த ஈத்தறைகள் இவ்வளவு சவுண்டு விடுகிதுகள்...

டிஸ்கி :

வழக்கு என்றால் அரசு தான் எடுத்து செல்லவேண்டும் என்பதில்லை.. எதிர்கட்சிகளும் எடுத்து செல்லலாம் .. அவர்களுக்கு முழு அதிகாரமும் உண்டு.. இதே ஜெயலலிதா.. எதிர் கட்சியாக இருக்கும் போதுதான் கச்சதீவு மீட்பு குறித்து வழக்கு போட்டார்.. அதை சுப்ரீம் கோர்ட் எடுத்து கொண்டது.. எதிர்கட்சி தலைவர் என்றமுறையில் சுப்ரீம் கோர்ட் எடுத்து கொண்டது.. இன்றைய எதிர் கட்சி தலைவர் கருநாகமும் ஸ்டாலினூம்  காவிரி விவகாரம் குறித்து கேஸ்  பைல் செய்வார்களா ? இல்லை 3 hrs உண்ணாவிரதம் இருப்பார்களா ..?  கடிதம் எழுதி ஒப்பாரி வைப்பார்களா? இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சிகளின் மீதும் நமக்கு நம்பிக்கை இல்லை .. ஒன்று வெள்ளம் அதிகமாக வந்தால் ஸ்டிக்கர் பாய்ஸ் ஸ்டிக்கர் ஒட்டுறாங்க .. இவுங்க அதெபடி அவுங்க பேர ஸ்டிக்கர் ஒட்டலாம்.. !!  என்று  எதிர் வரிசையில் ஒரே களேபரம்!!.. ஆக மொத்தம் மக்கள் .. ??  வரும் அக்டோபர் மாதம் வெள்ளம் வந்தால் நடுதெருவில் போய் ..பிச்சை எடுங்கள் .!!!   காசு வாங்கிட்டு மறுபடியும் ஒட்டு போடுங்க .... !! வெள்ளம் வந்தது என்றால் எவனா இளிச்ச்வாயான் சோறு போடுவான்..!!... மறுபடியும் ஒட்டு போடுங்க .... !!

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 19.9.2016 at 7:08 PM, நவீனன் said:

 

இன்று கர்நாடகாவில் தமிழனுக்கு ஏற்பட்ட மற்றுமொரு அவல காணொளி ...

நாய்க்கூட்டங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

14317431_564458810407739_752867618779490

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.