Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை

Featured Replies

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை

 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

fsffa.jpg

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும்  ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார்.

இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/11357

  • தொடங்கியவர்

சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

 

சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், 12 போட்டி சாதனைகள் மற்றும் ஒரு இலங்கை சாதனையுடன் இன்று முடிவுக்குவந்தது.

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.

தியகம மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் நிறைவுநாள் இன்றாகும்.

இன்று காலை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் உயரத்திற்குத் தாவிய அனிதா ஜெகதீஸ்வரன் புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.

மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய இந்தப் போட்டிகளின் நிறைவு நாள் வைபவம் இன்று மாலை நடைபெற்றது.

போட்டிகளில் அதிசிறந்த வீராங்கனை விருதை அம்பலாங்கொட தர்மாஷோக கல்லூரியின் கே.கே. ரித்மா நிசாதி வென்றார்.

அதிசிறந்த வீரர் விருது நீர்கொழும்பு மரிஸ்டெலா கல்லூரியின் உஷான் திவங்க வசமானது.

மகளிர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வலல ஏ ரத்நாயக்க கல்லூரி அணி வெற்றிகொண்டது.

ஆடவர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு மரிஸ்டெலா கல்லூரி அணி தட்டிக்கொண்டது.

 

Share This

http://newsfirst.lk/tamil/2016/09/சேர்-ஜோன்-டாபட்-சிரேஷ்ட-ம-2/

  • கருத்துக்கள உறவுகள்

கோலூன்றிப்  பாய்தலில்...  இலங்கை சாதனையை  முறியடித்த,  தமிழச்சி  அனிதா ஜெகதீஸ்வரனுக்கு பாராட்டுக்கள். :)

  • தொடங்கியவர்
தெல்லிப்பழை மகாஜனா மாணவி அனித்தா கோலூன்றிப் பாய்தலில் புதிய இலங்கை சாதனை
2016-09-16 10:29:25

(திய­க­ம­வி­லி­ருந்து நெவில் அன்­தனி)


19301anitha.jpgதெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூரி மாணவி ஜெக­தீஸ்­வரன் அனித்தா, கோலூன்றிப் பாய்­தலில் புதிய இலங்கை சாத­னையை நிலை­நாட்டி பெரும் பாராட்டைப் பெற்றார்.

 

திய­கம மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறைவு பெற்ற 86 ஆவது சேர் ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளி­லேயே அனித்தா புதிய இலங்கை சாத­னையை நிலை­நாட்­டினார்.

 

20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.35 மீற்றர் தாவி­யதன் மூலம் அவர் புதிய இலங்கை சாத­னைக்கு சொந்­தக்­கார­ரானார். அத்­துடன் இந்த மூன்று நாள் போட்­டி­களில் ஒரே ஒரு இலங்கை சாத­னையை நிலை­நாட்­டிய பெரு­மையும் அனித்­தாவை சாரு­கின்­றது.

 

இதன் மூலம் இவ் வருடம் நடை­பெற்ற கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் வலல்ல ஏ.ரட்­நா­யக்க மத்­திய கல்­லூ­ரியைச் சேர்ந்த ஹர்­ஷனி தர்­ம­ரட்­ன­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த 3.34 மீற்றர் என்ற இலங்கை சாத­னையை அனித்தா முறி­ய­டித்தார்.

 

இலங்கை சாத­னையை முறி­ய­டித்த­தை­யிட்டு நான் பேரா­னந்­தமும் பெரு­மையும் அடை­கின்றேன்.

 

19301aniththa.jpgநாட்டின் வேறு பகு­தி­களில் வசதி படைத்த பாட­சா­லை­க­ளுடன் போட்­டி­யிட்டு சாதனை புரி­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல. யாழ். மண்ணில் போதிய வளங்கள், வச­திகள் இல்­லாத நிலை­யிலும் சாதனை நிலை­நாட்ட முடிந்­த­தை­யிட்டு எனது பயிற்­றுநர் சின்­னையா சுபாஷ்­கரன், கல்­லூரி அதிபர், முன்னாள் அதி­பர்கள், முன்­னைய பயிற்­று­நர்கள், ஆசி­ரி­யர்கள் அனை­வ­ருக்கும் எனது மன­மார்ந்த நன்­றியைத் தெரி­விக்­கின்றேன்' என ஜெக­தீஸ்­வரன் அனித்தா தெரி­வித்தார்.

 

'2014இல் நடை­பெற்ற அகில இலங்கை பாட­ச­ாலைகள் விளை­யாட்டு விழாவில் 19 வய­துக்­குட்­பட்ட பிரிவில் போட்­டி­யிட்டு அப்­போது அனோமா கரு­ணா­வன்­ஷ­வுக்கு சொந்­த­மா­க­வி­ருந்த 3.32 மீற்றர் இலங்கை சாத­னையை சமப்­ப­டுத்­தி­ய­போது என்னில் ஓர் உத்­வேகம் பிறந்­தது.

 

என்னால் இலங்கை சாதனை ஒன்றை நிலை­நாட்ட முடியும் என என்னை அப்­போது உற்­சா­கப்­ப­டுத்­திய அனை­வ­ருக்கும் குறிப்பாக எனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இன்று இந்தப் புதிய சாதனையை சமர்ப்பணம் செய்கின்றேன்' என பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ள அனித்தா மேலும் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=19301#sthash.SXQdc21a.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.