Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலும் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Featured Replies

மேலும் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

18741_thumb.jpg

 

காவிரியில் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்பின் படி, கர்நாடக மாநிலம் தண்ணீர் திறக்கவில்லை. இன்றுடன் அந்த அவகாரசம் முடிவடையும் நிலையில், காவிரியில் கூடுதலாக 3 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவை தீர்மானங்கள் உச்சநீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடக அரசின் இத்தகைய செயல்பாடுகள், நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் செயல் என்றும், கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்விகாரத்தில் மத்திய அரசு 2 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  

http://www.vikatan.com/news/flashnews/18741-the-supreme-court-again-ordered-to-open-water.art

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கலாம்.........

  • தொடங்கியவர்

காவிரி விவகாரம் குறித்து மருத்துவமனையில் இருந்தபடி ஜெயலலிதா ஆலோசனை
---------------------------------------------------------------------
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, அங்கிருந்தபடியே காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவிரி விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள உத்தரவு குறித்து மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரை அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனது அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் ராமமோகன ராவ், தலைமை வழக்கறிஞர் ஆர். முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலர் கே.என். வெங்கடரமணன், செயலர் ஏ. ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 6,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டுமென கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் உத்தரவு குறித்தும், இந்த விவகாரத்தில் நீடிக்கும் சிக்கலைப் போக்க கர்நாடகா மற்றும் தமிழக அரசின் முதல்வர்கள், மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் கூட்டம் நடத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பது குறித்தும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டதாக செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டம் 29ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர் ராம மோகன ராவ், பொதுப் பணித் துறை செயலர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்ள வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் என்ன அம்சங்கள முன்வைக்க வேண்டும் என்பது குறித்தும் முதல்வருடன் விவாதிக்கப்பட்டதாகவும் தலைமைச் செயலர் அங்கு வாசிக்க வேண்டிய உரை, முதல்வர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டதாகவும் அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவு உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

அவரது உடல் நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை ஒரு செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரிவித்தது.

BBC Tamils Foto.
BBC Tamils Foto.

BBC

  • கருத்துக்கள உறவுகள்

காவிரி... கர்நாடகத்திற்கு காங். மேலிடம் பகிரங்க ஆதரவு.. தமிழக விவசாயிகள் அதிர்ச்சி ..

டெல்லி: காவிரி விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாக கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திக்விஜய் சிங் இப்படி கர்நாடகத்திற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துப் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த 8ம் தேதியும் கூட இதே போலத்தான் கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் திக்விஜய் சிங்.

cauvery-tirichy4554-27-1474979170.jpg

இப்போது மீண்டும் கர்நாடகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் திக்விஜய் சிங். இதன் மூலம் காங்கிரஸ் மேலிடமே, கர்நாடகத்திற்கு தனது ஆதரவு முழுமையாக தெரிவித்துள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இன்றைய சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குப் பின்னர் அதுகுறித்து திக்விஜய் சிங் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டியுள்ளார். கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளை காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கும், உறுதுணையாக இருக்கும். கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட் நிராகரித்திருக்க கூடாது. ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கர்நாடக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது. குடிநீருக்குதான் முதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்பது சர்வதேச சட்டம் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங். தமிழகத்தின் சட்டப் போராட்டம் குறித்து வாயையே திறக்காமல் உள்ளன காங்கிரஸ் மற்றும் பாஜக மேலிடங்கள். ஆனால் காங்கிரஸ் மேலிடத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் கர்நாடகத்திற்குப் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து கட்சியின் நிலைப்பாட்டை அம்பலப்படுத்தி விட்டார். தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்படி ஒருதலைபட்சமான முடிவெடுத்திருப்பது தமிழக விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்

 

டிஸ்கி

காங்கிரஸு என்றாலே  .

 

.தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று இஸ்கூல் பசங்களுக்கு கூட  தெரியும் ..இங்க தமிழர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.. இந்த காங்கிரஸ் சினிமா கூத்தாடிகள் எங்க? குஸ்ப்பூ.. நக்குமா..? தமிழச்சிகள் பெட்டிகோட் போடவேண்டுமா?.. பேண்டிஸ் போடவேண்டுமா..? கழுத்தில் இருக்கும் தாலியை ( மன்னிக்கவும் மாங்கல்யம்)  யானை சைசில் போட்டு திரிவார்கள்..ஏன் திரிய கூடாதா.  ? என்று இந்த மாதிரி சிக்கல்களுக்கு முதலில் வந்து நிற்பார்கள்.. கேட்டால் மனித உரிமை பேசுவார்கள்.. இதுவும் தாண்டா மனித உரிமை .. தண்ணி வேண்டும் ..இப்போ இவுங்கள வர சொல்லு..   வரமாட்டார்கள்..  இப்போ இவுங்க போராட்டம் வேற எங்கோ நடந்திட்டு இருக்கும்..அது எங்கே என்னா என்று நமக்கும் தெரியவில்லை ...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

BBC Tamils Foto.

அப்பலோவுக்கு முன்னாலை காயிறதை விட்டுட்டு...
மண்சோறு  திங்கிறதை விட்டுட்டு....

மழை நீரை சேமிக்க பாருங்கப்பா.

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

 

 
கர்நாடக முதல்வர் சித்தராமையா | கோப்பு படம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா | கோப்பு படம்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தாலும், தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘கர்நாடக அரசு தமிழகத்துக்கு இரு தினங்களுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்''என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா நேற்று மாலை பீதரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய நீர்வளத் துறை பாசனத்தைவிட, குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. கர்நாடகாவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற் போது தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை முழுமையாகப் படிக்கவில்லை. தீர்ப்பு குறித்த விவரங்களைப் படித்து தெரிந்துகொண்ட பின்னரே கர்நாடக அரசின் முடிவு அறிவிக் கப்படும். கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சித்தராமையாவிடமும், சட்ட நிபுணர் களிடமும் விரிவாக ஆலோசிக்கப்படும். தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது தொடர்பாக சித்தராமையாவே இறுதிமுடிவை எடுப்பார்''என்றார்.

இன்று அமைச்சரவைக் கூட்டம்

கர்நாடக முதல்வர் சித்த ராமையா உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அவசர அமைச்சரவையை இன்று கூட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து த‌மிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடலாமா? அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா என விவாதிக்கப்படும் என தெரிகிறது.

பாஜக பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக சித்தராமையா இன்று கர்நாடக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முறை அனைத்துக்கட்சி கூட்டத் தைப் புறக்கணித்த பாஜக, இம் முறை பங்கேற்கும் என கர்நாடக பாஜகவின் தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத் துக்குக் காவிரி நீரைத் திறந்து விடுவது தொடர்பாக சித்த ராமையா அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசிப்பார். அப்போது நிறைவேற்றப்படும் தீர்மானத்தின்படி சித்தராமையா முடிவெடுப்பார் என தெரிகிறது.

http://tamil.thehindu.com/india/உச்ச-நீதிமன்றம்-உத்தரவிட்டிருந்தாலும்-தற்போது-தமிழகத்துக்கு-காவிரி-நீரை-திறக்க-முடியாது-கர்நாடக-முதல்வர்-சித்தராமையா-திட்டவட்டம்/article9157520.ece?homepage=true

  • தொடங்கியவர்
gallerye_234240941_1615864.jpg

'காவிரியில் தண்ணீர் திறந்து விடவேண்டும்' என்று உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுவதாக, கர்நாடகா அரசுக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், 'அடுத்த மூன்று நாட்களுக்கு, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
 

 

Tamil_News_large_1615864_318_219.jpg

காவிரி நதிநீரை பங்கிடுவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. 'கர்நாடகா அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், தண்ணீர் திறந்து விடும்படி பிறப்பித்த உத்தரவை திருத்த வேண்டும்' என, கர்நாடகா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
'சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாமல், அந்த உத்தரவை திருத்தக் கோரும் கர்நாடகாவின் மனுவை விசாரிக்கக் கூடாது' என, தமிழக அரசு சார்பிலும், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சேகர் நிபாடே, ''காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, இந்த மாதத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் நிறைவேற்றும் வரை, கர்நாடகாவின் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது,'' என்று வாதிட்டார்.

''கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததால், காவிரி நீரை, கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென, கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது,'' என, கர்நாடகா சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் நாரிமன் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும்வகையில் கர்நாடகா செயல்படுவது முறையல்ல; இந்த கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, கடமை உங்களுக்கு உள்ளது.சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு, வினாடிக்கு, 6,000 கன அடி வீதம், காவிரியில் தண்ணீரை திறந்து விட வேண்டும். இந்த உத்தரவை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அத்துடன், வழக்கின் விசாரணையை, வரும், 30க்கு ஒத்திவைத்தனர்.
 

முதல்வர்கள் கூட்டம்


வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ''பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநில முதல்வர்கள் விரும்பினால், முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது,'' என்றார்.
இந்த யோசனையை ஏற்று, நீதிபதிகள் கூறியதாவது:முன்னர் ஒரு முறை, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா அரசுகள் இணைந்து, சென்னைக்கு, 5 டி.எம்.சி., தண்ணீரை தந்தன;

 

இதுதான் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ''இதற்கு அரசியல் நல்லெண்ணமும், நல்ல தலைமையும் தேவை,'' என்றார்.இதன்பின், நீதிபதிகள், 'அடுத்த இரண்டு நாட்களுக்குள், மாநில முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து, வரும், 30ல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
 

மாண்டியாவில் போராட்டம்


சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, கர்நாடகா மாநிலம் மாண்டியாவில், கன்னட அமைப்பு மற்றும் கர்நாடகா விவசாயிகள், போராட்டம் நடத்தினர்; இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
இரு மாநில எல்லை பகுதியில், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, கர்நாடகா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா இன்று காலையில் அனைத்து கட்சி கூட்டத்தையும், மாலையில், அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.
 

பிரதமர் தலையிட கோரிக்கை


'காவிரி பிரச்னையில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும்' என, கர்நாடகாவைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடகாவைச் சேர்ந்த, காங்கிரஸ் கட்சியின், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள், பார்லிமென்ட் வளாகத்தில், நேற்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- நமது நிருபர் -
http://www.dinamalar.com/news_detail.asp?id=1615864

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.