Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர்

Featured Replies

மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர்

 

மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மரபணு தொழில்நுட்பம்

மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.

இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.

இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக ஒரு மரபணுக் கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்திருக்கிறது.

அந்தக் குழந்தையின் ஜோர்டானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு பிரச்சனை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெப்போதும் செய்திராத நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.

இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், இதே போன்று அபூர்வ மரபணு பிரச்சனைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால் `மிட்டொகோண்ட்ரியல்` நன்கொடை (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமுன், கடுமையான சோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

http://www.bbc.com/tamil/science-37481988

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பெற்றோர்களுக்கு பிறந்த உலகின் முதல் பிள்ளை.

ஒருவரை திட்டும் போது, நாசூக்காக, கெட்ட வார்தையை நேரடியாக பயன்படுத்தாமல், 'ஒரு தேப்பனுக்கு மட்டும் பிறந்திருந்தால் இப்படி நடப்பியா / நடந்திருப்பானோ' என்பார்கள். 

பிறப்பியல் புரியாவிடினும், அவ்வாறு சொல்வதன் / திட்டுவதன் மூலம் தாயின் நடத்தை குறித்து இழுத்து திட்டுவதாக அமையும் ஒரு கேவலமிக்க திட்டு.

இருப்பினும் அமெரிக்காவில் புதிய தொழில் நுட்பம் மூலம் முஸ்லிம் தம்பதிகள் இருவருக்கும், அடையாளம் தெரியாத இன்னுமொரு பெண்ணின் முட்டையின் சில DNA சேர்ந்து மூன்று பெற்றோர்கள் என்று சொல்லும் வகையிலான முதலாவது குழந்தை பிறந்துள்ளது.

தாயின் முட்டையிலுள்ள, இளவயது மரணத்தை உண்டாக்கச் கூடிய நோய் காவி DNA அகற்றப்பட்டு தானம் செய்யப்பட்ட இன்னுமோர் பெண்ணின் முட்டையிருந்து எடுத்து மாற்றீடு செய்யப்பட்ட DNA உடன் பிறந்திருக்கிறது இந்தக் குழந்தை.

ஜோர்தானிய தம்பதிகளில், மனைவியின் முட்டையில் இருக்கும் இந்த நோய் காவி DNA, அவர்களது முதல் இரு பிள்ளைகளை கொன்ற நிலையில், இந்த முயற்சியின் மூலம் மூன்றாவது குழந்தை கிடைத்துள்ளது.

குழந்தைக்கு ஜந்து மாதங்கள் ஆகிய நிலையில் பிரச்சனைக்குரிய DNA பாதிப்பில்லை என்று உறுதியான பின்பே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த மருத்துவ உலகின் புதிய புரட்டி மூலம் பல வழிகள் திறந்து விடப்பட்டுளளன.

source : New Scientist 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

 

ஒரு குழந்தை மூன்று பெற்றோர்
==============================
ஒரு குழந்தையை உருவாக்க மூன்றுபேரின் மரபணுக்களில் இருந்து கருத்தரிக்கச் செய்யும் முறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் முதல் தடவையாக செய்திருக்கிறார்கள். தனது தாய் மற்றும் தந்தையின் மரபணுக்களை கொண்ட அந்த ஆண் குழந்தை மூன்றாவது கொடையாளி ஒருவரின் மரபணு மூலக்கூற்றையும் கொண்டிருக்கும். தனது தாயின் மூலம் அந்தக் குழந்தைக்கு வரக்கூடிய சில உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

BBC

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.