Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்

Featured Replies

பிரித்தானிய ரயிலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பிய இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்

 




பிரித்தானிய ரயிலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த விரும்பியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் , ரயில் பணியாளர் ஒருவரிடம் கூறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 44 வயதான சுரேஸ்குமார் துரைராஜா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.


கடந்த ஏப்ரல் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் இந்த நபரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் சோதனையிட்ட போது குண்டு எதுவும் குறித்த நபரிடம் இருக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136782/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறிய ஈழத் தமிழருக்கு பிரிட்டனில் 10 மாத சிறை
 
 
தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்றதாக கூறிய ஈழத் தமிழருக்கு பிரிட்டனில் 10 மாத சிறை
பிரித்தானியாவின் லிவர் லைம் வீதி புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்திய குற்றத்தின் அடிப்படையில் கைதான இலங்கைத் தமிழருக்கு, 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 44 வயதான சுரேஷ்குமார் துரைராஜா என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி லைம் வீதி புகையிரத நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். இதன்போது புகையிரத நிலைய உத்தியோகத்தர் பயணச் சீட்டைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார். இதன்போது தன்னிடம் பயணச் சீட்டு இல்லை எனத் தெரிவித்த சுரேஷ் குமார், புகையிரதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனையடுத்து போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும், அவரிடம் வெடிகுண்டு ஏதும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
 
சுரேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருந்து, தற்கொலை செய்யும் எண்ணத்திலேயே தான் இங்கு வந்ததாகத் தெரிவித்ததாகவும், தற்கொலை செய்யுமாறு தனக்கு ஒரு குரல் கட்டளையிட்டதாகவும் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
 
மாறுபாடான வாக்குமூலத்தால் அவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், இலங்கையில் அவர் சந்தித்த கோரமான சம்பவங்களினால் அவர் மிக மோசமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்த னர்.
 
பிரித்தானியாவில் வசித்த காலத்தில் வேறு எந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கைது செய்யப்படாத சுரேஷ்குமார், இலங்கை யில் விடுதலைப் புலிகளுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைதுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் அவர் மீதான வழக்;கு விசாரணை லிவர்பூல் கிறவுண் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, பிரித்தானியாவில் சுரேஷ்குமாரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் மிக வும் மனம் உடைந்து போயிருந்ததாக வாதாடினார்.
 
வழக்கை ஆராய்ந்த நீதிபதி, சுரேஷ் குமாரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் உண்மையானதா அல்லது பொய்யானதா என்ற விடயம் ஒருபுறமிருக்க,அவரால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த பகுதியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்த தாகவும், இதனால் அவருக்கு 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.

http://onlineuthayan.com/news/18766

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்கள் கெடுவது கெட்டது எல்லாம் வாயால்.. தான். நுனலும் தன் வாயால் கெடும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இவர் வீசா எடுக்க இப்படி ட்ரை பண்ணியிருக்கார் என்றே தெரிகிறது.

இத்துப் போன அப்புக்காத்துகளின்ர கதையை கேட்டு ஆள் இப்ப உள்ள, 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2016 at 1:16 PM, nedukkalapoovan said:

எம்மவர்கள் கெடுவது கெட்டது எல்லாம் வாயால்.. தான். நுனலும் தன் வாயால் கெடும். tw_blush:

உனமைதான் .... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.