Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூக சிந்தனை கவிதைகள்

Featured Replies

நல்ல பழங்களை .....
தட்டில் அடுக்கி வைத்து .....
நலிந்த பழங்களை.......
கொடையாய் கொடுக்கும் .....
கலியுக தர்மவான்கள்.......!!!

பகட்டுக்கு பிறந்தநாள் .....
பலவிதமான அறுசுவை .....
உணவுகள் - நாலுபேர் .......
புகழாரம் .......
விடிந்த பின் பழைய சாதம் .....
ஏழைகளுக்கு அள்ளி....
கொடுக்கும் .......
கலியுக தர்மவான்கள்.......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 
 

  • தொடங்கியவர்

ஓடுகின்ற பேரூந்திலே 
ஓடி ஓடி  ஏறினாய் ....
ஒற்றை கையால் உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

வேகமாய் வரும் ரயிலை ......
எதிராய் நின்று உன்னை ....
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

பாழடைந்த கிணற்றுக்குள்  ......
நுனிவிரலில் நின்றுஉன்னை 
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!

ஊட்டி வளர்த்த தாயை ..........
நினைத்துப்பார்த்தாயா ...?
தூக்கி வளர்த்த தந்தையை ....
நினைத்தாயா...?

உன்னை ......
நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!!
உன்னை நாம் புகை படமாய் ......
பார்க்கிறோம் .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

பொய் சொல்லவத்தில்லை
உண்மையை மறைத்திருகிறோம்
இதை விட கொடுமை பாதி உண்மை
பேசியிருக்கிறோம் - கொடுமையில்
கொடுமை பாதி உண்மை
பேசுவதுதான் -இதை எல்லாம்
செய்து விட்டு நல்லவனாக
வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!!

@@@@@@

தப்பு என்று தெரிந்து கொண்டு
தப்பு செய்திருக்கிறோம் -ஆனால்
மற்றவர்கள் செய்யாத தப்பையா
நான் செய்கிறேன் என்று
சமுதாயத்தை அடமானம் வைத்து
தப்பு செய்கிறோம் நல்லவனாக
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@@

திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@

ஊன் உண்ணாதே களவெடுக்காதே
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்
பாடம் - ஆனால் மாமிசம் உண்போம்
பசு கன்றின் பாலை களவெடுத்து
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
என்று வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@

பிறர் மனம் புண் படும் படி
பேசமாட்டோம் -ஆனால்
அவர் இல்லாத தருணத்தில்
பேசாமல் இருக்க மாட்டோம்
தர்மத்தையும் நியாயத்தையும்
பேசுவோம் - கோயிலில் தர்ம
கத்தாவுடம் வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!

சமுதாய கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

மறுபடியும் உனக்கு மகனாய் பிறக்க வேண்டும்

 
அம்மா.
உன்னை நினைக்கும்
போது எனக்குள்
எல்லா நரம்பும் இரத்தத்தை
கடத்தவில்லை - உன் உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!!!


பிள்ளை பருவத்தில்
செல்ல காயம் வந்தால் கூட
விளையாட்டுக் காயங்கலாக
எடுக்காமல் -உன் கண்ணுக்கு
திரியை வைத்து விடிய விடிய
விளக்காய் எரிவாயே
தாயே ....!!!


சிறு வயதில் எல்லோருக்கும்
பசியதிகம் -பள்ளி விட்டு வந்து
படாத பாடு படுத்திவிடுவேன்
உன் காலை உணவை எனக்காக
வைத்திடுந்து நீ பட்டினீயிருப்பாய்
தாயே ......!!!


என் புத்தகச் சுமை
உன் வலது தோலில் சுமப்பாய் ...
செருப்பில்லாத பாதங்களேடு....
இடுப்பில் என்னைசுமந்திருக்கிறாய்.
வீடு வந்தவுடம் களைத்து விட்டாய்
மகனே என்று -உன் களைப்பை
பொருட்படுத்தாத அதிசயப்பிறப்பு
தாயே .....!!!


அ - வரிசையில் சொற்கள் சொல்லடா
அம்மா என்பேன் -உலகிலேயே
அப்படி சொன்ன முதல் பிள்ளை
என்பது போல் இனிமேல் யாரும்
சொல்ல மாட்டார்கள் என்பது போல்
உள்ளம் குளிர்வாய் ..
தாயே .....!!!


நான் பெற்ற சின்ன வெற்றிகளை
உலகசாதனைபோல் ஊர் முழுக்க
தம்பட்டம் அடிக்கும் -உன்
கதையை மற்றவர்கள் -அலட்டல்
என்று சொல்வார்கள் -எனக்கு
அதுதான் தாயே எனக்கு -உன்
ஊட்ட பானம்
தாயே ....!!!


வேலை தேடும் வயதில்
வெறும் கையோடு வருவேன்
எல்லோர் முகத்திலும் சோர்வு
தாயே -உன் முகத்தில் மட்டும்
எதுக்கடா கவலை படுற
நாளை கிடைக்குமடா மகனே
என்று - ஆறுதல் கரமானது
நீட்டியது உன்னை தவிர யார்
தாயே ......!!!


எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீயோ உயிரை உருக்கி மகிழ்ந்தாய்
முதல் காசு எடுத்து உன்
முந்தானையில் முடிந்து
கோயிலுக்கு அர்ச்சனை செய்தாயே
தாயே .....!!!


எப்படியெல்லாம் வாழ்ந்த நான்
இப்போ தாயே நீயில்லாமல்
வாழும் உலகம் - மனிதரே
வாழாத செவ்வாய் கிரகத்தில்
வாழ்வதுபோல் இருக்கு
தாயே ....!!!


தாயே உன்னைப்போல்
போலியில்லா முகம் வேண்டும்
எதிர் பார்ப்பில்லாத அன்பு வேண்டும்
தியாகத்தில் எல்லையற்ற கடலே
மறுபடியும் உனக்கு மகனாய்
நான் பிறக்க வேண்டும் வா ...
தாயே .....!!!
 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல் 
----------------------

தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!

தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!

பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!

கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!

உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!

மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!

அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!

%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை 
கவிப்புயல் இனியவன்  

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
9 hours ago, கவிப்புயல் இனியவன் said:
 

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய் 
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!

வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய் 
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!! 

&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

வறுமையின் நிறம் கொடுமை
-------------

பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!

&
வறுமையின் நிறம் கொடுமை 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!

நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!

&
சமுதாய கவிதை 
கவிப்புயல் இனியவன் 

இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!

இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!

இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....

&
கவிப்புயல் இனியவன் 
நட்பு  கவிதை 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தொடர்ச்சியான வரட்சி ....
மறு புறம் விவசாய கடன்....
நதிநீர் பிரச்சனை ....
நியாய விலை இன்மை ...
விவசாயி எங்களை 
என்ன செய்ய சொல்லுகிறீர்கள் ...?

நாங்கள் பொறுத்தது போதும் ..
போராடப் போகிறேம்  ......
நாளை முதல் என் மனைவியும் .....
பிள்ளைகளும்......
வீதிக்கு வருவார்கள் .....!!!

எங்களுக்கு துப்பாக்கி தாருங்கள்...
அரசுக்கு எதிராக போராட என்று .....
கேட்கமாடோம் ........!!!

ஒரு நெல் மூடை தாருங்கள் ......
இல்லையே ஆக குறைந்தது.......
ஒரு பானை சோறு தாருங்கள் .....
எங்கள் வறுமையோடு ......
போராடுவதற்கு ..................!!!

&
பொருளாதார கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இளைஞனே ....!
முடியாது என்று நீ 
நினைப்பதையெல்லாம் .....!!!

உலகில் ஏதோ ஒரு .....
மூலையில் யாரோ ஒருவன் ..
செய்துகொண்டிருக்கிறான் .....
நீ அறியாமல் யாரோ .......
செய்து விட்டான் ...

விமானத்தை .......
கண்டுபிடிக்க முடியாது ..
அணுவை பிரிக்க முடியாது ...
என்றுதான் உலகம் சொன்னது ...
கண்டுபிடிக்கப்படவில்லையா ...?
விழித்துக்கொள் ...!
உன் வெற்றி பறிபோய்விடும் ..?
&
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் 
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் .....!!!

தொடர்ந்து வருகிறது ..
என்றாலும்....
விடமாட்டேன் ...?

விஞ்ஞானிகள்பலரின் 
வாழ்க்கையை
கற்றிருக்கிறேன் 
தோல்வி என்னும்
கயிற்றில் தூக்கு போட்டு 
வென்றவர்கள் ....!

&
சமுதாய தன்னம்பிக்கை 
கவிப்புயல் இனியவன் 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் ...
முயற்சித்தாலும் 
வெற்றிக்கு ..
என் வாசல் படி .....
தெரியவில்லை ...
குட்டியை ....
வீடு வீடாக வாவிவரும்...
பூனைபோல் ....
தோல்வி மட்டும் ...

வெற்றியைவிட தோல்விதான் மனிதரின் இருப்பை சாத்தியமாக்குகின்றது. முயற்சிக்க ஊக்குவிக்கின்றது கவிஞரே....!  

tw_blush:

 

  • தொடங்கியவர்

சிதறி ....
கொட்டி கிடப்பவை.... 
குப்பைகள்மட்டுமல்ல ....
நீ அறிந்ததும்.......
அறியாததுமான ......
நோய்களும் தான் .......!!!
நீ கொட்டுவது ......
குப்பை மட்டுமல்ல ...?
உன் ஆயுளையும் ....
உன் சந்ததியின்........
ஆயுளையும்தான் ....?

&
சமுதாய கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

காதல் பைத்தியம் 
-------
காதலரின் பெயரை சுவரில்
மற்றும் கையில் எழுதுபவர்கள் ..!

காதல் முட்டாள்கள் 
-------
காதலருடன் சண்டையிட்டபின்
காயங்களை ஏற்படுத்துபவர்கள் 
தனக்கு தானே கையை வெட்டுதல் 
.மற்றும் சூடு வைத்தல்..!

காதல் கோழைகள் 
--------
காதலில் தோற்றதும் 
தற்கொலை செய்பவர்கள் ...!

காதல் வெறியன் 
--------
காதலின் பெயரில் ஏமாற்றி 
கற்பை சூரையாடுபவன் ...!

காதல் கொலைகாரன் 
--------
காதல் நிறைவேற்றவில்லை
என்றவுடன் பழிவாங்க துடிப்பவன் ...!

காதல் பயங்கரவாதி 
---------
காதலியின் முகத்தில்
அசிட் வீசுபவனும் 
கொலைசெய்பவனும்...!

&
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

நான் பறித்த கடைசி பூ
கவிப்புயல் இனியவன் 2013 
-----------
சாமிக்கு பூ பறித்து ..
வைப்பதை பழக்கமாக கொண்டவன் ..
சட்டென்று ஒருநாள்-பூவை
பறித்த என்மனதில் ஒரு -சஞ்சலம்
மரத்தை பார்த்தேன் -அதன் அழுகையை
மலரை பார்த்தேன் -அதன் ஏக்கத்தை
தாயையும் பிள்ளையையும் பிரித்த சோகம்
இதுதான் நான் பறித்த கடைசி பூ

  • தொடங்கியவர்

இவன் ....
காதல் தோல்வியால் ...
கவிஞனாக வில்லை ...
எல்லாவற்றிலும் ...
காதல்  கொண்டதால் ...
கவிஞன் ஆனவன்.....!!!

&
கவிப்புயல் இனியவன்
இதுதான் உண்மை 

கடலளவு ....
கற்பனையுடன் ...
காட்டாற்று ...
வெள்ளமாய்க்கரை...
புரண்டு ...
வந்த வார்த்தைகள் ...
எல்லாம் கன்னியவள்.... 
கன்னக்குழிக்குள் ...
கச்சிதமாய் மறைந்து விட்டன .....!!!

சொல்ல நினைத்துத் ...
துடித்தவை தொண்டைக்... 
குழிவறை வந்து ...
இருதலைக்கொள்ளிபோல் ...
திணறிக்கொண்டு ...
தடுமாறுகிறது ....! 

ஒத்திகை பார்த்து 
வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு 
முன்னே ஓடியேவிடுகின்றன.

கண்டவுடன் 
எப்படி மறைந்து கொள்ளலாம் 
என வெட்கப்படும் உன்னால் 
என் பாடு சொல்ல வழியில்லையே?

இப்போது சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

ஒரு கல்லை எடுத்தேன் ..!
நண்பன் சொன்னான் ....
மரத்துக்குஎறியப்போகிறான் ..
என்றான் .....!!!

நண்பி  சொன்னால் ....
அருகில்குட்டைக்குள் ...
எறியப்போகிறான் ......!!!

கையில் இருந்த கல் ...
கெஞ்சியது என்னை ....
ஒருமுறை வானத்தை நோக்கி ....
எறிந்து விடு .........
எனக்கும் உயரபோக .....
விருப்பம் இருகிறது ..............!!!

நாம் ....
பிறர் விருப்பத்தையும் .....
நம் விருப்பத்தையும் ......
நிறைவேற்றுகிறோம் ......
நம்மோடு இருப்பவர்களின் .....
விருப்பத்தை நிறைவேற்ற.... 
தவறுகிறோம் ...............!!!

கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 

முட்டை ....
கூடை சுமப்பவனே ..!
கவனம் நீ சுமப்பது ....
வெறும் முட்டை அல்ல....
எங்கள் வருங்கால சந்ததி ...!!!

&
சின்ன கவிதை 
கவிப்புயல் இனியவன் 

  • கருத்துக்கள உறவுகள்

கணவனின் விருப்தத்தை .....
உறவினர் விருப்பத்தை .....
நிறைவேற்றும் மனைவியின் .....
விருப்பத்தை கண்டறிவோர் சிலரே .......!!!

பொருளில் தவறுண்டு புலவரே...!

மனைவியின் விருப்பம் என்னவென்று எந்த ஒரு முட்டாள் கணவனுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் தெரியாத மாதிரி, கேட்காத மாதிரி நழுவி விடுகிறோம். அவ்வளவுதான்....! ஒட்டகசிவிங்கிக்கு  அட்டியலும் எலிபண்டுக்கு ஒட்டியாணமும் வாங்கிக் குடுக்க யாரால முடியும்....! tw_blush:

  • தொடங்கியவர்

இன்று ......
குடும்பங்களின் நிலைமை....
குடும்பத்துடன் போசுவதே ........
கிடையாது ......!!!

இருந்தால் .......
போல் தனியே இருந்து ....
சிரிக்கிறார்கள் ...
மௌனமாக ஓரக்கண்ணீர் .....
வடிக்கிறார்கள் .........!!!

உரத்த குரலில் 
திடீரென கத்துகிறார்கள் ....
உறவினரை கண்டால் ....
வாய்க்குள் ஒரு சிரிப்பு ...........!!!

இத்தனைக்கும் ஆட்டிப்படைக்கிறது ....
தொலைக்காட்சி .....!!!

&
சமூக சிந்தனை கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

  • 6 months later...
  • தொடங்கியவர்

கவிப்புயலின் சிந்தனைகள் 

^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல் 
பிடித்தால் ஒருபிடி இதயம் 
இடையில் ஆயிரம் ஆயிரம் 
சுமைகள் ....!

^^^

கூடி இருந்து சிரிக்கும் 
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு 
விரலால் துடைத்த 
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள் 
நிலைப்பதில்லை ....!

^^^

பெண்ணின் அழுகை 
வலிமையானது 
ஆணின் அழுகை 
கொடூரமானது 
ஆண் அழுதால் 
அந்த குடும்பமே 
அழும் ....!

^^^

தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!

^^^

கவிப்புயல் இனியவன்

  • 3 months later...
  • தொடங்கியவர்

எத்தனையோ......
கடவுளின் உருவங்கள்.....
அத்தனையையும் அழகாக.....
சிலையாக வடித்துவிட்டான்.....
மனிதன்..........!

இத்தனை கடவுளை வடித்த.......
மனிதனால் ஒரு மனிதனை......
இனங்கான முடியவில்லை.......
அவனுக்கொரு சிலையை.......
வடிக்க முடியவில்லை.......?

&
கவிநாட்டியரசர், கவிப்புயல் 
^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
சமுதாய விழிப்புணர்வு கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.