Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை

Featured Replies

3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை
2016-10-11 09:09:15

(ரெ.கிறிஷ்ணகாந்)

 

19860Bride-&-Groom.jpgதிரு­மணம் முடிந்து வீடு­தி­ரும்பிக் கொண்­டி­ருந்த போது மண­மகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மண­ம­க­னொ­ருவர் திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று இப்­பா­க­முவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

 

இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் இசுரு சம்பத் ரண­துங்க(25) என்ற இப்­பா­க­முவ பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞ­ராவார்.

 

கடந்த 3 வரு­டங்­க­ளாக தான் காத­லித்து வந்த மாத்­தறை ஹக்­மன பன­ம­வில பிர­தே­சத்தை சேர்ந்த 24 வய­தான யுவதி ஒரு­வரை  இவர் கடந்த 7ஆம் திகதி திரு­மணம் செய்­தி­ருந்தார்.

 

இம் மரணம் தொடர்பில் உயி­ரி­ழந்­த­வரின் மனைவி தெரி­விக்­கை­யில்,  நாம் இரு­வரும் திரு­மண வைபவம் முடி­வ­டைந்­த­வுடன் எதிர்­
கா­லத்தைப் பற்றி பேசிக்கொண்டே அன்­றைய தினம் 3 மணி­ய­ளவில் வாக­னத்தில் மாத்­தறை அதி­வேக நெடுஞ்­சா­லையில் இப்­பா­க­முவ நோக்கி வாக­னத்தில் பய­ணித்துக் கொண்­டி­ருந்தோம்.

 

இடையில் அழ­கிய இடம் ஒன்றில் இறங்கி படங்கள் சில­வற்றை எடுத்துக் கொண்டு மீண்டும் பய­ணத்தை தொடர்ந்தோம்.

 

அதன்­போது சிறிது நேரத்தில் இசு­ரு,  தனக்கு அச­தி­யாக உள்­ள­தாக கூறி எனது தோள் மீது சாய்ந்து கொண்டார்.

 

இரவு 8.30 மணி­ய­ளவில் எஹெ­லி­ய­கொ­டவை அண்­மித்தபோது அவர் அசா­தா­ர­ண­மான உடல்­நி­லையில் காணப்­பட்­ட­தனை உணர்ந்­த­த­னை­ய­டுத்து அதே வாக­னத்தில் அவரை அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றோம் எனினும் அவர் மார­டைப்­பினால் ஏற்­க­னவே உயி­ரி­ழந்து­ விட்­ட­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர் என்றார்.

 

அதிக சந்­தோஷம் மற்றும் தொடர்ச்சியான வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இவ்வாறு மாரடைப்பு ஏற் பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.metronews.lk/article.php?category=news&news=19860

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற செய்திகளை படிக்கும் போதுதான், இத்தனை வருடமாகியும்  நாங்கள் மனைவியைக் கூட /  மனைவியும் எங்களைக் கூட  சரியாய் காதலிக்கவில்லையோ என்று தோன்றுகின்றது...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

(திருமணம் முடிந்து சில மணிநேரங்கள் கரைந்துவிட்டதால் மேக்கப்பும் கரைந்துவிட்டதா? இதையும் விசாரிங்க கனம் கோர்ட்டார் அவர்களே..) :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.