Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு ; தவறு என்றார் ஜனாதிபதி

Featured Replies

பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு ; தவறு என்றார் ஜனாதிபதி

 

 

இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன்.  அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.

sdfafas1.jpg

பராளுமன்றத்திற்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன, 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தேசிய கலந்துரையாடல் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செலவுத்தலைப்புக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றினார்.

பொலிஸ்மா அதிபர் பேசும் வீடியோவை  நானும் பார்த்தேன். அந்த செயற்பாடு மிகவும் தவறானது. இது தொடர்பில் அவரை அழைத்து விளக்கம் கோர இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

 

இரத்னபுரியில் நேற்று காலை நடைபெற்ற கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபர் உரைநிகழ்த்திக்கொண்டிருந்தபோது அவருக்கு  தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்போது பொலிஸ் மா அதிபர், 'கட்டாயமாக அவரை கைது செய்ய மாட்டேன். பொலிஸ் நிதி மோசடி பிரிவில் விசாரித்தேன். எனது அனுமதியின்றி அவரை கைது செய்ய விடமாட்டேன்' என கூறுகின்றார். அந்த  தொலைபேசியில் உரையாடும் காணொளி தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.virakesari.lk/article/14070

  • தொடங்கியவர்

உரையாற்றிக்கொண்டிருந்த போது பொலிஸ்மா அதிபருக்கு வந்த அழைப்பால் சர்ச்சை (காணொளி இணைப்பு)

 

 

இரத்தினப்புரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அவர் பதிலளித்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.IGP.jpg

இரத்தினப்புரி பகுதியில் நேற்று நடைபெற்ற பொலிஸ் தின நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கும் அவர் கதைப்பது அங்கிருந்த ஒலிவாங்கி மூலம் வெளியில் கேட்டுள்ளது.

'குட் மோர்னிங் சேர் .. அவசர விடயமா சேர்.. நான் உங்களுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறேன். 

குறித்த விடயம் தொடர்பாக பரீட்சித்து பார்க்க கூறினேன். எப்.சி.ஐ.டி பணிப்பாளர் என்னை வர சொன்னார். ஆனால் எனக்கு என்னால் போக முடியவில்லை.

 

கொஞ்சம் நேரத்தில் எனக்கு அது கிடைக்கும். கிடைத்தவுடன் தகவல்களுடன் வந்து சேரை  சந்திக்கின்றேன்.

 அது நிலமேஸ் மேட்டர். கட்டாயம் அவரை கைது செய்யமாட்டோம். என்னுடை அனுமதி இல்லாமல் கைது செய்ய வேண்டாம் என பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளேன். நிச்சயமாக அவர் கைது செய்யப்படமாட்டார்.

இல்லை இல்லை. அது தொடர்பாக கேட்டுப் பார்த்தேன். ஓகே சேர்' என அவர் அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அவரின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றுக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி ,

இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டு அவருக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்ட காணொளி காட்சியை நானும் பார்த்தேன்.  அது தவறானது. அது குறித்து விளக்கம் கோரவுள்ளேன்  என  சபையில் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/14074

7 hours ago, நவீனன் said:

இரத்தினப்புரி பகுதியில் நேற்று நடைபெற்ற பொலிஸ் தின நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்டிருந்த போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு அவர் பதிலளிக்கும் அவர் கதைப்பது அங்கிருந்த ஒலிவாங்கி மூலம் வெளியில் கேட்டுள்ளது.

'குட் மோர்னிங் சேர் .. அவசர விடயமா சேர்.. நான் உங்களுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கிறேன். 

குறித்த விடயம் தொடர்பாக பரீட்சித்து பார்க்க கூறினேன். எப்.சி.ஐ.டி பணிப்பாளர் என்னை வர சொன்னார். ஆனால் எனக்கு என்னால் போக முடியவில்லை.

 

கொஞ்சம் நேரத்தில் எனக்கு அது கிடைக்கும். கிடைத்தவுடன் தகவல்களுடன் வந்து சேரை  சந்திக்கின்றேன்.

 அது நிலமேஸ் மேட்டர். கட்டாயம் அவரை கைது செய்யமாட்டோம். என்னுடை அனுமதி இல்லாமல் கைது செய்ய வேண்டாம் என பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளேன். நிச்சயமாக அவர் கைது செய்யப்படமாட்டார்.

இல்லை இல்லை. அது தொடர்பாக கேட்டுப் பார்த்தேன். ஓகே சேர்' என அவர் அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் கேலிக்கூத்தாகும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் தமிழின விரோத நீதித்துறை இயந்திரம்.  

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் இனமதவெறிக் கறை படிந்த நீதித்துறையை தமிழர்கள் ஒருபோதும் நம்பவே முடியாது என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

கடந்த 60+ வருடங்களில்  சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதித்துறை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் எவைக்கும் தேவையான முழுமையான நீதியை, நிவாரணத்தை பெற்றுக்கொடுத்த சரித்திரம் இல்லை.

மிக மிக நீண்ட காலமாக தமிழின விரோதமாகவும், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் - கொலைகாரர்கள் - கொள்ளைக்காரர்கள் - பாலியல் வன்கொடுமையாளர்கள் சார்பாகவும் இயங்கி கறைகள் பல படிந்த இந்த (அ)நீதித்துறையை தமிழர்கள் இன்னொரு 60+ வருடங்களுக்கு நம்புவதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அடிப்படைக் காரணங்கள் எதுவுமே இல்லை.

 

 

தொலைபேசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - ஜனாதிபதியிடம் உண்மையை கூறிய பொலிஸ்மா அதிபர்

அமைச்சர் சாகல ரத்நாயக்கவே “நிலமே” ஒருவரை கைது செய்வது சம்பந்தமாக அண்மையில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திர ஜனாதிபதி முன்னிலையில் ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதான அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்திர பகிரங்க மேடையில் இருக்கும் போது நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி வினவிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தவறானது எனவும் அது குறித்து பொலிஸ்மா அதிபரிடம் விபரங்களை கேட்க உள்ளதாக ஜனாதிபதி கடந்த வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, டில்ஷான் விக்ரமரத்ன குணசேகர என்பவரை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்ட சேர் யார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்திற்கு இருப்பதாக கூறியிருந்தார்.

பொலிஸ்மா அதிபர் அமைச்சரை சேர் என்று அழைத்திருக்க வேண்டும் அல்லது பிரதமரை சேர் என்று அழைத்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

http://www.tamilwin.com/politics/01/126901?ref=home

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.