Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகிவிட்டதா?

Featured Replies

சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகிவிட்டதா?

 

  •  

இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60.

ஜெ., மறைவுக்கு பிறகு அடுத்தது என்ன என்பது குறித்து : ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது - ஞாநி

சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா?
 சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா?

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து எம். நடராஜனை மணந்தார். 1980-களில், சசிகலா ஒரு வீடியோ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சசிகலா குறித்து மேலும் படிக்க: சசிகலா அதிமுக தலைமைப் பதவிக்கு வந்தால் என்ன ஆகும்?

சசிகலா குறித்து மேலும் படிக்க:ஜெ மறைவு: அசாதாரண வேகத்தில் நடந்த ஆட்சி மாற்றம் எழுப்பும் கேள்விகள்

சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த நடராஜன், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சந்திரலேகாவுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் அவரிடம் தனது மனைவி சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தார்.

சந்திரலேகா, அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசிகலாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இப்படித் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் வந்த சசிகலா, வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்துள்ளார். பின்னர் ஜெயல்லிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யும் வேலையும் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னாட்களில், இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

 

தனது அரசியல் குருவான எம்ஜிஆருடன் ஜெயலலிதா

 தனது அரசியல் குருவான எம்ஜிஆருடன் ஜெயலலிதா

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஜெயலலிதா பிரிவு என்ற அணியை ஜெயலலிதா தலைமை தாங்கி வந்த காலத்தில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் சசிகலா நிரந்தரமாக குடியேறினார். சில காலத்திலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், நடராஜன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடை அணுகுவதிலிருந்து தடை செய்யப்பட்டாலும், சசிகலா மட்டும் ஜெயலலிதாவின் தோழியாக, ஜெயலலிதாவின் வீட்டிலேயே இருந்து வந்தார்.

''சசிகலா எனது சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.'' என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார்.

சசிகலாவின் உறவினர்கள் பலரும் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். சசிகலாவின் அக்கா மகன் டி .டி வி. தினகரன் அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.

 

ஜெயலலிதாவுடன் சசிகலா

 தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

டி .டி வி. தினகரன் மூலமாகவே தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது.

சசிகலா மீதான குற்றச்சாட்டுகள்

சசிகலாவின் மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக இருந்ததாக அரசு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் ஊடகங்களில் பலமுறை புகார் எழுந்ததுண்டு.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. தற்போது அந்த வழக்கின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஜெயலலிதா, சசிகலா  எப்போதும் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த சசிகலா

அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு, ஜெயலலிதாவுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது. பின்னர் அந்த வழக்கை அவர் உச்சநீதிமன்றத்தில் வென்றார்.

சசிகலாவுக்கு வேண்டாதவர்களாகி விட்ட பல அதிமுக தலைவர்கள் அதற்கு பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா

கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஆனால், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை.

கடந்த 2011 டிசம்பர் 11-ஆம் தேதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், தனக்கும், தனது ஆட்சிக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் தெரிவித்த ஜெயலலிதா, சசிகலாவை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

சசிகலா  2011-இல் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் சசிகலா

அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைது செய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

பின்னர், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும் , தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்த ஜெயலலிதா

அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.

சசிகலா அரசியலில் இறங்குவாரா?

ஜெயலலிதாவின் சடலத்தின் அருகே சோகத்துடன் காணப்பட்ட சசிகலா  ஜெயலலிதாவின் சடலத்தின் அருகே சோகத்துடன் காணப்பட்ட சசிகலா

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் நேரடி அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் உலவி வந்தன. தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடக் கூடும் எனவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தற்போதுள்ள சூழலில் சசிகலா நடராஜன் நேரடி அரசியலுக்கு வருவதற்கான சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்சி பொறுப்பு ஓ.பன்னீர்செல்வம் கையில் இருந்தாலும், சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக வேண்டுமென்றும், கட்சியையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால் அவர் அரசியலில் நுழைந்தால் மட்டுமே முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது சசிகலாவின் உறவினர்கள் மட்டுமே காணப்பட்டனர்

 ஜெயலலிதாவின் இறுதி சடங்கின் போது சசிகலாவின் உறவினர்கள் மட்டுமே காணப்பட்டனர்

ஆனால் இது வரை கட்சியில் எந்த ஒரு பொறுப்பையும் வகிக்காத , ஜெயலலிதாவின் ஒரு சர்ச்சைக்குரிய தோழியாக மட்டுமே கருதப்பட்ட சசிகலா, ஜெயலலிதாவின் காலத்திலேயே அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாக, அதிகார மையமாக மட்டுமே விளங்கினார். ஜெயலலிதாவை அவர் மூலம் மட்டுமே கட்சியினர் அணுக முடிந்த நிலையில், அப்போது அவருக்கிருந்த செல்வாக்கு, ஜெயலலிதாவின் காலத்துக்கு பின்னர் தனியாக மக்கள் மத்தியில் செல்வாக்காக மாறுமா , கட்சியினர் கூட அவரை ஒரு தலைவியாக ஏற்றுக்கொள்வார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

http://www.bbc.com/tamil/india-38246347

  • தொடங்கியவர்

சசிகலா கோஷ்டி கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி:

 

மத்திய உளவுத்துறை கருத்து அதிமுகவில் சசிகலா கோஷ்டியின் நடவடிக்கைகளை அக்கட்சி தொண்டர்கள் கவனித்து வருகின்றனர். அந்த கோஷ்டியின் கை ஓங்கினால் கட்சி உடைவது உறுதி என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.

 

சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கை ஓங்கினால் அதிமுக உடைவது உறுதி என மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை வழிநடத்துவதற்கான 2-ம் கட்ட தலைவர்கள் எவருமே இல்லை.

ஆகையால்தான் இதுவரை நேரடி அரசியலுக்கே வராத சசிகலாவின் பெயரும் பொதுச்செயலர் பதவிக்கு அடிபடுகிறது. ஆட்சிக்கு ஓபிஎஸ், கட்சிக்கு சசிகலா என்ற நிலையை உருவாக்கி பின்னர் மெல்ல மெல்ல கட்சியையும் கபளீகரம் செய்யவது என்பது மன்னார்குடி தரப்பின் ப்ளான்.

 

மத்திய உளவுத்துறை கண்காணிப்பு

அதிமுகவின் தற்போதைய நிலை அக்கட்சி தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் மத்திய உளவுத்துறை மிக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சகிக்க முடியாத தொண்டர்கள்

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது அதிமுக மூத்த தலைவர்கள் ஒருவரைக் கூட ஜெயலலிதாவை சந்திக்கவிடாமல் சசிகலா தடுத்ததை அதிமுகவினரால் இன்னமும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ஆட்சியையும் கட்சியையும் ஒட்டுமொத்தமாக தமது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்திருந்ததையும் அதிமுக தொண்டர்களால் ஏற்க முடியவில்லை என்கிறது மத்திய உளவுத்துறை வட்டாரங்கள்.

 

ஜெ.வுக்கான மவுனம் காத்த தலைவர்கள்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்ததால் அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இதுபற்றி எதுவுமே பேசாமல் அமைதிகாத்திருந்தனர். அப்படி சசிகலா கோஷ்டிக்கு எதிராக ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே கலகக் குரல் எழுப்பினால் கட்சிக்கு கெட்ட பெயர் என பலரும் அமைதி காத்தனர் என்கிறது மத்திய உளவுத்துறை.

 

அதிமுக உடைந்துவிடும்... தற்போதைய நிலையில் அடுத்த சில மாதங்கள் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்... குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் நடவடிக்கைகள், கட்சி மற்றும் ஆட்சியில் தலையீடுகள் அதிகரிக்குமேயானால் நிச்சயமாக அதிமுகவில் இதற்கு கடும் எதிர்ப்பு எழும்; இதனால் அதிமுக உடைவது உறுதி என்றுதான் மத்திய உளவுத்துறை கருதுகிறது.

 

சசிகலா கையில்தான்...

ஆகையால் அதிமுக ஒன்றாக இருப்பதும் உடைவதும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் கைகளில்தான் உள்ளது. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினால் அக்கட்சியின் கட்டமைப்பை சீர்குலைக்காத வகையில் தங்களது நடவடிக்கைகளை சசிகலா கோஷ்டி பார்த்துக் கொண்டால் சரி எனவும் கருதுகிறது உளவுத்துறை.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/can-sasikala-avoid-split-the-aiadmk-269336.html

  • தொடங்கியவர்

‘என்னிடம் உத்தரவை எதிர்பார்க்க வேண்டாம்!’  -அமைச்சர்களுக்கு கட்டளையிட்ட சசிகலா

 

sasi_cho1_17384.jpg

மிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, இன்று காலையில் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர் அமைச்சர்கள். ‘ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யுங்கள். என்னுடைய உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்’ எனத் தெரிவித்ததாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க விரும்பினர். நேற்று காலை முதலே, ‘அவரிடம் இருந்து அழைப்பு வரும்’ எனக் காத்திருந்தனர். எந்த உத்தரவும் கார்டனில் இருந்து வரவில்லை. “ நேற்று மதியம் பத்திரிகையாளர் சோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பினார் சசிகலா. ‘ அம்மா மறைந்து மறுநாளே செல்ல வேண்டுமா?’ என உறவினர்கள் கேட்கவும், ‘ அவர் இருந்திருந்தால் அடுத்த நிமிடமே சென்றிருப்பார். எனவே, நான் செல்கிறேன்’ எனப் பதில் கொடுத்தார். இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்பட சில அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களிடம், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்பட சில விஷயங்களை விவாதித்தார்” என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர், 

“ நேற்று முழுக்கவே எந்த அமைச்சருக்கும் போயஸ் கார்டனில் இருந்து போன் செல்லவில்லை. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருந்ததால், சற்று ஓய்வெடுக்கவே விரும்புகிறார். முதல்வராக ஓ.பி.எஸ் நியமிக்கப்படும் முடிவை எடுத்தபோதும், உறவுகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் கொடுத்தவர், ‘ அம்மா இருந்திருந்தால், அவருடைய சாய்ஸாக அவர்தான் இருந்திருப்பார். அவரே முதலமைச்சர் பதவியில் தொடரட்டும்’ என்றார். இன்று அவரிடம் ஆலோசிப்பதற்காக கார்டன் வந்தார் பன்னீர்செல்வம். அவரிடம் பேசியவர், ‘ நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள். கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்’ என்றார். இந்த நிமிடம் வரையில், பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்விதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்றார் விரிவாக. 

sasikalala_20031.jpg

“ ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார். சோ மறைவுக்கு வந்தபோது, அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்தன. தொண்டர்கள் மத்தியில் தீவிரமாக வலம் வரத் திட்டமிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் அவர் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் கொண்டு வருவார் சசிகலா” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/74495-donot-expect-my-order-sasikala-informs-ops.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில நடந்தாலும் நடக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தியாவில நடந்தாலும் நடக்கும்

பிஜேபி இப்பவே ஆட்டையை போட்டு முடிச்சுருக்கும் அடங்காதவன் வீடுகளுக்குள் வருமான வரிக்காரன் போவான் அவர்கள் சுதகாரிப்பதுக்குள் பிஜேபி ,dmk எல்லாம் அதிமுக வை கபளீகரம் பண்ணிடுவாங்கள் மீடியா எல்லாம் மன்னார்குடியை தாக்குகின்றன அதிமுக  பிழைப்பது அதிசயம் ஏதும் நடந்தால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சைலன்ட் கில்லர்களின் வாழ்கை  (அமைதியான கொலைகாரன்) அமைதியாக தான் இருக்கம். ஆனால் முடிவு ?

டிஸ்கி :

மனைவியை பிரிந்து ஒரு ஆள் இவ்வளவு நாள் பொறுத்து இருந்தான் என்றால் ஏதோ ஒரு காரணம் இருக்கதான் செய்யுது..ஸ்கெட்ச் !!! என்ன நிலமை என்று பார்ப்பாம்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.