Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமஸ்டியை விரும்பாத சம்பந்தன்...! மஹிந்தவிடம் உறுதிமொழி

Featured Replies

புதிய அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதனை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சிறந்த தமிழ் தலைவரான இரா.சம்பந்தன் மற்றும் தானும் கலந்துரையாடினோம். புதிய அரசியல் அமைப்பில் சமஷ்டி அப்படையிலான அரசியல் தீர்வுக்கு யோசனை எதனையும் முன்வைக்க போவதில்லை என இரா.சம்பந்தன் தன்னிடம் உறுதியளித்துள்ளார். மக்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்தாலும், தான் அதனை முன்வைக்க போவதில்லை என இர.சம்பந்தன் திட்டவட்டமாக பல முறை கூறியுள்ளார்.

அத்துடன், தனி நாடு என்ற கோரிக்கையினையும் முன்வைக்க போவதில்லை எனவும் கூறியுள்ளார். இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிரக்கட்சி தலைவராக இருப்பதது நாட்டு மக்கள் செய்தி பெரும் பாக்கியம்.

அவர் போன்ற சிறந்த தலைவர் இருக்கும் போதே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். எவ்வாறாயினும், சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பிற்குள்ளும் இனவாதிகள் பலர் இருக்கின்றனர்.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தனி நாட்டு கோரிக்கையினை முன்வைக்கும் அதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரை நினைவு கூறுகின்றனர்.

இதேவேளை, உண்மையான பௌத்தராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் நிலையில், அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/129404?ref=youmaylike2

உந்தாளுக்கு தீர்வு பெற்றுத்தர ஒரு எள்ளளவும் விருப்பம் இல்லை. இவருக்கு தனது கதிரைதான் முக்கியம். ஓட்டுப் பொருக்கி ****. இதுகள் எல்லாம் 40, 50 வருஷம் அரசியல் இருந்து என்ன பிரயோசனம். தமிழனை பிடிச்ச சனியன் உந்த ஓட்டுப் பொருக்கி அரசியல் வாதிகள்.

  • தொடங்கியவர்
சமஷ்டியை முன்வைப்பதில்லை பெளத்தத்திற்கு முன்னுரிமை! சம்பந்தன் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் அமரவீர தகவல்
12832.jpg
அரசியல் யாப்பில் பெளத்த மதத்திற்கு வழங்கப் பட்டுள்ள முன்னுரிமையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்த கோரிக்கையையும் முன்வைக்கப் போவதில்லை என தம்மிடம் உறுதியளித்துள்ள தாக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.    
 
இவ்வாறான தமிழ் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தரைவராக இருப்பது நாட்டு மக்கள் செய்த பாக்கியம் என கூறி இரா.சம்ப ந்தனுக்கு புகழாரம் சூட்டிய அமைச்சர் மகிந்த அமரவீர, சம்பந்தன் போன்ற சிறந்த அரசியல் தலைவர் ஒருவர் எதிர்கட்சித் தலைவராக இருக்கும் காலத்திலேயே நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினை க்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் மகிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை முன் வைத்திருக்கின்றார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
 நாம் இந்த அரசாங்கத்தில் இருக்கும் வரை அதேபோல் உண்மையான பௌத்த மதத்தவனாக இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை ஒருபோதும் குறைக்க இடமளிக்கப்படமாட்டாது. அது மாத்திரமன்றி நீக்கவும் அனுமதியோம். அதேபோல் சமஷ்டி அல்லது வேறு எந்த வழியிலாகவோ நாட்டை பிரிக்க நாம் இடமளிக்க மாட்டோம் என்பதையும உறுதிப்படத் தெரிவித்திருக்கின்றோம். 
 
இவை மாத்திரமன்றி வடக்கு - கிழக்கு அல்லது வேறு எந்த மாகாணங்களையும் இணைக்கவும் இடமளிக்க மாட்டோம். எதிர் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறுவது போல் ஒற்றையாட்சி நீக்கப்படவோ சமஷ்டி முறை ஏற்படுத்தவோமாட்டாது என்பதை மாநாயக்கத் தேரர்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் சில ஊடகங்களில் வெளியான புதிதாக தேசிய கீதமொன்று தயாரிக்கப்படுவதாக வெளியா கும் செய்திகளிலும் உண்மையில்லை என்பதை எடுத்துரைத்தோம். அதனை சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் பாடலாம். 
 
சம்பந்தன் இருக்கும் காலத்திலேயே தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எமது நாட்டில் தற்போது தமிழர் ஒருவராக இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக இருக்கின்றார். சிறந்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன், வரலாற்றில் எமக்குக் கிடை த்த சுமுகமாக பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ளக் கிடைத்த சிறந்த அரசியல் தலைவர் ஆவார். சம்பந்தனுடன் நாமும் கலந்துரையாடினோம். அந்த சந்தர்ப்பங்க ளில் இந்த நாடு பௌத்த நாடு என்பதை அவ ரும் ஏற்றுக்கொண்டதுடன் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் தான் கோரிக்கை விடுக்கப்போவதில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். 
 
மக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்தாலும் தான் அதனை முன்வைக்கப் போவதில்லை என திட்டவட்டமாக அவர் பல தடவைகள் எம்மிடம் கூறியிருக்கின்றார். அதேபோல் தான் ஒருபோதும் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
சம்பந்தன் போன்ற மிகவும் மதிக்கப்படும் ஒரு அரசியல்வாதியிடமிருந்து இவ்வாறான கருத்துக்களை வெளியாகும் போதே நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
http://www.valampurii.lk/valampurii/content.php?id=12832&ctype=news                                           
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் கேட்பதெல்லாம்..  நல்ல சொகுசா எதிர்கட்சி வாசல்தலம் ஒன்று தான். கொடுத்திட்டாப் போச்சி இல்ல மைத்திரி.. ரணில்.. மகிந்த.. சந்திரிக்கா.. ஜே வி பி... ஹெல உறுமய... ..................... எக்ஸ்ட்டா..........

tw_angry:

  • தொடங்கியவர்

ஒற்றையாட்சிக்குள் தீர்வு ஏற்படமுடியாது - ஆபத்­தான விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை என்­கிறார் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன்

city-01-64b6c900864b14d0ad0774c512d04a38d7a88fc8.jpg
எமது மக்­க­ளுக்­கான தீர்­வா­னது ஒற்­றை­யாட்­சிக்குள் ஏற்­ப­ட­மு­டி­யாது என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  

புதிய அர­சியல் சாச­னத்­திற்கு பெரு­வா­ரி­யான மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொள்­வ­தற்காக எமது மக்­க­ளுக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­ம­ளிக்க முடி­யாது என­வும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் சமஷ்­டியைக் கோர­வில்லை என அமைச்சர் மஹிந்த அம­ர­வீர உட்­பட சில முக்­கி­ய­மான அர­சாங்க தரப்­பினர் பகி­ரங்­க­மாக தெரி­வித்­துள்­ளனர்.

இந்­நி­லையில் 2016ஆம் ஆண்­டுக்குள் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு கிடைக்கும் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கணித்­தி­ருந்தார்.

இவ்­விரு விட­யங்கள் தொடர்­பாக வின­வி­ய­போது கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு அவர் தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது சில முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்­றுக்­கொண்டு இருக்­கின்­றன. அதனை குழப்­பு­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. வீணான சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய காலம் இது­வல்ல. நாங்கள் அந்த விட­யங்­களை பெரி­து­ப­டுத்­து­வ­தற்கு விரும்­ப­வில்லை.

தமி­ழீ­ழத்தை சம்­பந்தன் கோர­வில்லை சமஷ்­டியை சம்­பந்தன் கோர­வில்லை என்றே கூறப்­பட்­டி­ருக்­கின்­றது. ஆனால் ஒற்றை ஆட்­சிக்குள் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை காண்­ப­தற்கு இணங்­கி­விட்டோம் எனக் கூற­வில்லை. அப்­ப­டி­யென்றால் அதன் அர்த்தம் என்ன?

நாங்கள் எத்­த­னையோ தட­வைகள் தென்­னி­லங்கை தலை­வர்­களை சந்­தித்த போது ஒற்­றை­யாட்­சிக்குள் எமது மக்­க­ளுக்­கான தீர்வு ஏற்­ப­ட­மு­டி­யாது என்­பதை தெளிவாக கூறி­யி­ருக்­கின்றோம். எமது மக்­க­ளுக்கு ஏற்­பு­டைய நியா­ய­மான தீர்­வொன்று வழங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் அவர்­க­ளி­டத்தில் தௌிவாக எடுத்­து­ரைத்­துள்ளோம்.

முக்­கி­ய­மாக தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை சிங்­கள மக்­களும் ஏற்­றக்­கொள்­ள­வேண்டும். சிங்­கள மக்­களும் புரிந்து கொண்­ட­தொரு தீர்வே நிரந்­த­ர­மாக இருக்கும் என்­பதில் நாம் நம்­பிக்கை உடை­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம். அதற்­கா­கவே சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தாது சாது­ரி­ய­மாக கரு­மங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

கடந்தவருடம் ஜன­வரி மாதம் 8ஆம் திகதி ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­ற­போது, முறை­யாக கரு­மங்கள் நடை­பெறும் இடத்து தேசிய பிரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்வு 2016 இறு­திக்குள் கிடைக்கும் என எனது கணிப்பை கூறி­யி­ருந்தேன்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நிய­மித்தார். அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே மீண்டும் தெரிவு செய்­யப்­பட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசியக் கட்­சியும், இணைந்து ஒரு கூட்டு அர­சாங்­கத்தை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன.

எமது உத­வி­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றிலி­ரண்டு பெரும்­பான்மை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வச­தி­யுள்­ளது. இது நீடிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றி­ருக்­கையில், மாதங்­களில் சில தாம­தங்கள் காணப்­ப­டு­கின்­ற­போதும் அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களில் முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

பார­ளு­மன்றம் அர­சியல் சாசன சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. புதிய அர­சியல் சாச­னத்தை இயற்­று­வ­தற்­கான தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அர­சி­யல் சாசன சபையால் வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

வழி­ந­டத்தல் குழுவால் ஆறு உப­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதன் அறிக்­கைகள் பூர­ண­ம­டைந்து வழி­ந­டத்தல் குழு­வி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

வழி­ந­டத்தல் குழு­வா­னது 45தட­வைகள் கூடி­யி­ருந்­தது. வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தயா­ராக இருந்­த­போதும் சில கார­ணங்­க­ளுக்­காக அந்த கருமம் தாம­த­மா­கி­யுள்­ளது. எவ்­வா­றா­யினும் இன்னும் சொற்ப காலப்­ப­கு­தியில் அந்த விட­யங்கள் முறை­யாக நடை­பெற்று அறிக்கை வௌிவ­ர­வுள்­ளது. 9ஆம், 10ஆம், 11ஆம் திக­தி­களில் விவா­தங்­களும் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஆகவே 2016ஆம் ஆண்டைப் பொறுத்­த­வ­ரையில் எது­வுமே நடை­பெ­ற­வில்லை என கூறி­வி­ட­மு­டி­யாது. முன்­னேற்­ற­க­ர­மான விட­யங்கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. ஆனால் நான் கூறிய கணிப்பின் பிர­காரம் கரு­மங்கள் நடை­பெ­று­வ­தற்கு சில தமா­தங்கள் காணப்­பட்­டி­ருக்­கின்­றன. அவை விரைவில் நடை­பெ­ற­வேண்டும். அதற்­காக அனை­வரும் இணைந்து பணி­யாற்ற வேண்டும்.

அதே­நேரம் அரசியல் சாசன சபையின் முன்னாள் கருமங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் புதிய அரசியல் சாசனம் மக்களுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மக்களிடத்தில் சமர்ப்பிக்கபடவுள்ளது.

புதிய அரசியல் சாசனம் பெரும்பான்மையான மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அது பெருவாரியான மக்களால் அங்கீககரிக்கப்படவேண்டும். அதனைப் பெற்றுக்கொள்வதற்காக எமது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விட்டுக்கொடுப்பில்லாது எமது மக்களின் உரிமைகளை பதுகாக்கக் கூடிய வகையில் கருமங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்படவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-28#page-1

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ...தலீவா 
நிம்மல்  ஒன்றை சொல்லுறீங்கோ ,....அவியல் ஒன்றை சொல்லுரினம் ....எது தலீவா உண்மை 
ஒன்று நீங்கள் உல்டா பார்ட்டியாக இருக்கவேண்டும் அல்லது அவியல் உல்டா பார்ட்டியாக இருக்க வேண்டும் ....யாரு தலீவா ஒரியினல் உல்டா பார்ட்டி 
ஒற்றையாட்சியும் ஏலாது சம்ஷ்ட்டியும் வேண்டாம். அப்படியென்றால் தீர்வு எப்படியிருக்கும் என்றாவது சொன்னீர்கள் என்றால் 
நாங்களும் மனம் குளிர்ந்து போவோமில்ல...ஏன் தலீவா இந்த இரட்டை வேடம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.