Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு.

Featured Replies

இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு.

இலங்கையின் 59ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பு, இராணுவ பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்தது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன.

இலங்கையின் 59ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நேற்றுக்காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரைநிகழ்த்தினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படையினரதும் பொலிஸாரினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையில் 126 படை அதிகாரிகளும் 3,366 படையினரும் கலந்துகொண்டனர். முதலில் படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது.

தரைப்படையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட படை அணிகள் கலந்துகொண்டன. பல வகையான யுத்த டாங்கிகளுடன் தரைப்படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. காலிமுகத்திடலில் கடலில் கடற்படையினரின் பல்வகையான கப்பல்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மூன்றாவது அணிவகுப்பில் விமானப் படையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. இந்த அணிவகுப்பின் போது 20இற்கும் மேற்பட்ட விமானங்கள் மேலே பறந்து சென்று அணிவகுப்பை அலங்கரித்தன.

வெவ்வேறு ரகங்களைச் சேர்ந்த மும்மூன்று விமானங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன. நான்காவதாகப் பொலிஸாரின் அணிவகுப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கலாசார நடனம் இடம்பெற்றது. இவ்வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் காலி வீதி உட்பட காலிமுகத்திடலுக்குச் சென்றடையும் பல வீதிகள் மூடப்பட்டிருந்தன. பாதுகாப்பும் வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

இலவசமாகக் கிடைத்த சுதந்திரத்தை சிறுபான்மையினரின் சுதந்திரத்தை ஒடுக்கும் இராணுவத்தைக் கொண்டு படங்காட்டிக் கொண்டாடுகிறார்கள்.

நாளை அடிக்கப் போகும் புயலில் இந்த இராணுவம் சின்னாபின்னமாவது உறுதி.

நாளை என்ன இண்டைக்கே அடிக்கும் என்று சொல்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18712&hl=

ஆனா புயல் அளவுக்கு வேகம் கொள்ளுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை என்ன இண்டைக்கே அடிக்கும் என்று சொல்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18712&hl=

ஆனா புயல் அளவுக்கு வேகம் கொள்ளுமோ தெரியாது.

உமக்கு நக்கல் கூடிப்போச்சு. கவனம் சினோவுக்குள்ளே காணாமல் போய்விடுவீர். நாம் பார்த்த அதே ஆமி துண்டை காணோம் துணியை காணோம் என்று பார்த்து பார்த்து ஓடும் நாள் வரும்.ஏனெனில் அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்ணால் கண்டு ரசித்தவர்களில் நானும் ஒருவன்.

அது எப்படி துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓடும் நாள் இனித்தான் வரப் போகுது. ஆனால் அந்தக் கண்கொள்ளாக் காட்சியை ஏற்கனவே பாத்திட்டியள்? ரைம் டிறவல் பண்ணிப் பாத்தனீங்களோ? சிங்கள்திலேயே தமிழிலியோ கத்திக் கொண்டு ஓடினவங்கள் துண்டைக் காணம் துணியைக் காணம் எண்டு?

புலிகள் வெற்றியடையும்போது முதலில் ஓடப் போகிறவர் குறுக்கால போவார்கள்தான். அதாவது நாம் யாழ் களத்திலிருந்து மறைந்து விடுவார்கள். ஆகவே இவர்களிடம் ஏதாவது கருத்துக்கள் கூற விரும்புபவர்கள் ( இவர்கள் மண்டையில் ஏறாதுதான், என்ன செய்வது ! ) இப்போதே கூறிக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் இப்போ ஒரு சந்தேகம் வந்துட்டுது தான்

குறுக்கு ஆரம்பிக்கும் போது எதோ புலிகள் பலமே பலம் இல்லயோ வேறு கதை ஆனா புலத்தில் இருக்கும் ஊடகங்கள் சொல்லுவது போல இல்லை என்று ஆனா இன்று அதே அவரின் பிழைப்பாக போட்டுது நம்பிக்கையிலும் தேசியதாகத்துடனும் இருக்கும் உறவுகளளின் மனதை சிண்டியும் நக்கல் பன்னியும் மனதை உடைக்கும் நோக்கம் போல இருக்கும்........

அப்பிடி தொடங்கினாத் தானே மேல்மாடி நிரம்பி வழியிற சனத்திட்டையிருந்து தப்பலாம். அப்பிடி இருந்தும் சனம் பக் எண்டு பிடிச்சுட்டுது அது தான் சரியான கவலையாக இருக்கு. மேல்மாடி இல்லை உடம்பு முழுக்க நிரம்பி வழியுது போல கிடக்கு. எப்பிடி எழுதினா காசு தருவாங்களோ அப்பிடி எழுதுறன்.

அது கிடக்க...

அடடா டேசிய டாகத்துடன் இருக்கிறியளா? அது தான் சோமபானம் குடித்துக் கொண்டு திகதி குறித்து கவிடை வறைந்து கொண்டு இருக்கிறீர்களா? அப்புறம் என்ன அது கவி நயம் மொழி நயத்தில போராட்டத்தையும் அதில உங்களுக்கு இருக்கிற அற்பனிப்பையும் வறுணிக்கிறயளா? வசனம் எழுதுகிறயளா?

ஏன் எண்டால் சினிமா மாதிரி ஒரு பொழுது போக்குத்தானே கூட்டாம் கூடி கும்மாளம் அடிச்சு குழுவாகச் சேர்ந்து பஞ்டயலாக்காயும் கவிதையாயும் விட.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஞ்சா அடிச்சு கொண்டு பிள்ளைகளை நித்திரைக்கு எப்ப மனுசி அனுப்புவா என்றும் காவல் இருந்து மனுசியிடம் சுகத்தை அனுபவிச்சாலும் டமில் டேசியம் டாகம் தீருமாம்

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன எங்கள் சாபக்கேடா.எங்களுக்க நாங்கள் பிடுங்குப்படுகிறது.என்ன குறுக்ஸ் இப்ப கொஞ்ச நாளா உங்கள் பதில்கள் எல்லாம் உங்கள் பானியில் இருந்து

தடம் பிறழ்வது போல தெரியுது.இதனால் குறையப்போவது உங்கள் கெளரவம் மட்டும் இல்லை உங்கள் கருத்தின் கனதியும்தான்.தயவு செய்து கருத்தில் கொள்ளவும். :huh:

தமிழ் தேசியம் என்று வார்த்தையளவிலாவது சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் மாற்றுக் கருத்துடையவர்களாம். இவர்கள் ஏதோ ஏழாவது அறிவுடன் வாழ்பவர்கள்போல் கற்பனையில் மிதக்கின்றார்கள். இவர்களுடைய கருத்து என்னவென்று கேட்டால், மற்றவர்கள் என்ன கருத்தை முன்வைக்கிறார்களோ அதற்கு எதிரான கருத்து.

இப்படி கொள்கையே இல்லாமல் கருத்துக் கூறுபவர்கள் கஞ்சா அடித்தென்ன, அடிக்காமலென்ன, இரண்டும் ஒன்றுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.