Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்செந்தூர்ராஜபக்ஷே மைத்துனி தங்க கவசம்

Featured Replies

தூத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலுக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் மைத்துனியும், எம்.பியுமான நிரூபமா ராஜபக்ஷே அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

ராஜபக்ஷேவின் மனைவியின் சகோதரி நிரூபமா ராஜபக்ஷே தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் திருச்செந்துõர் வந்தார் நிரூபமா.

உலக நன்மைக்காகவும், இலங்கைஇந்திய நல்லுறவுக்காகவும் அங்குள்ள பஜனை மடத்தில் வெள்ளியன்று யாகம் துவக்கினர். நேற்று மூன்றாவது நாளாக யாகம் நடந்தது.

திருச்செந்துõர் முருகனுக்கு பள்ளியறை பூஜையின் போது பயன்படுத்த தங்கத் தாள் பூசப்பட்ட சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குவதாக இவர்கள் வேண்டியிருந்தனர்.

அதன்படி ரூ.8 லட்சம் செலவில் செம்பின்மேல் 108 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டையும் கோவிலுக்கு வழங்கினர். இதற்கான நிகழ்ச்சி, நேற்று அதிகாலை 3 மணிக்கு மடத்தில் பூஜை, ஹோமத்துடன் தொடங்கியது.

காலை 8.15 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட சடாச்சர எந்திரத்திற்கு (முருகனின் திருநாமம் பொறிக்கப்பட்ட தகடு) 53 கும்ப கலசங்களின் புனித நீரால் அபிஷேகம் நடந்தது.

சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மன் உருவம் ஆகியவற்றுடன் ஊர்வலம் தூண்டுகை விநாயகர் கோவிலில் துவங்கியது. நிரூபமா ராஜபக்சே, அவரது கணவர் திருக்குமார் நடேசன், உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் சண்முகர் சன்னதியில் சுப்பிரமணியர் பாதம், வள்ளியம்மாள் உருவத்திற்கு புனித கும்ப நீர்அபிஷேகம் நடந்தது.

பின்னர் அவை உள்துறை கண்காணிப்பாளர் திருமலைக்குமாரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் இலங்கை எம்.பி. குடும்பத்தினர், கோவில் விதாயகர்த்தா ராமானந்த சாஸ்திரிகள், ஏராளமான அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/02/05/lanka.html

லங்கா சல்லி மகிந்த சல்லி :D

ராஜபக்ஷேயின் மனைவியின் தங்கை எப்படி நிரூபமா 'ராஜபக்ஷே' ஆனார் ?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சா என்பது குடும்பப் பெயர். சந்திரிக்கா கூட சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க என்று தான் போடுவார்.

மனுசன் ஒரு ரூபா உழைக்கிறதுக்கு நாயாப்படுற பாடு! உதுகள் லட்சங்களை சும்மா விசுக்கி விடுதுகள். தன் சொந்த உழைப்பில் வந்த காசைத்தானே கவனமாக வங்கியில் போட்டு பூட்டி வைப்பீனம். இது என்ன, பொது சனங்களிட்ட சூரையாடின காசுதானே! விசுக்கியெறிய மணியாத்தான் இருக்கும்!

முந்திய காலங்களில் கோயில்களிற்கு மாபெரும் தெய்வத்தன்மை இருந்தது. எதையாவது கடவுளிடம் போய் மனமுருகிக் கேட்டால் பலித்துவிடும். ஆனால் இப்போது அவ்வாற்றல்கள் கோயில்களிற்கு இல்லை அல்லது குறைந்து விட்டது. இவ்வாறு கோயில்களின் தெய்வீகத்தன்மை காணாமல் போனதற்கு கெட்டவர்கள், துரோகிகள், அரசியல்வாதிகள் கோயில் சுவாமிகளை காசுமாலைகளினால் கட்டிப்போடுவது முக்கிய காரணம்.

இந்த செய்திய வாசிச்ச நாம இனி வாழ்க்கையில திருச்செந்தூர் பக்கம் போகமாட்டம் கண்டியளோ! மற்றவன் செய்த பாவங்களை நம்மால சுமக்க முடியாது போங்க!

வங்கிகளில் பணம் வைப்பிலிடப்படும் போது குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருந்தால், தகுந்த காரணங்கள் கூறி பணம் எவ்வாறு கிடைத்தது என வங்கியதிகாரிக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இதே நடைமுறைகளை கோயில்களிற்கும் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் கறுப்புப் பணங்களும், பாவிகளும் கோயிலை அண்டாதவாறு பார்த்துக்கொள்ள முடியும்.

சம்மந்தப்பட்ட இந்துசமய பக்தர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே என்பது ஜனாதிபதியின் குடும்பப் பெயர். அவரது மைத்துனிக்கு அந்தப் பெயர் வேறு வழியில் அதாவது மைத்துனியின் தந்தை வழியில் வந்திருக்கலாம். மற்றப்படி மைத்துனனின் குடும்பப் பெயர் மைத்துனிக்கு வர வாய்ப்பில்லை. ஜனாதிபதியின் மனைவிக்கு மட்டுமே வர வாய்ப்புண்டு.

அந்த பிணந்திண்ணி நாய்களின்ர பெயர் எப்படி வந்தால் தான் எங்களுக்கென்ன அதை பற்றி நீங்கள் ஏன் ஆராய்ச்சி செய்கிறீர்கள்

ராஜபக்சே என்பது ஜனாதிபதியின் குடும்பப் பெயர். அவரது மைத்துனிக்கு அந்தப் பெயர் வேறு வழியில் அதாவது மைத்துனியின் தந்தை வழியில் வந்திருக்கலாம். மற்றப்படி மைத்துனனின் குடும்பப் பெயர் மைத்துனிக்கு வர வாய்ப்பில்லை. ஜனாதிபதியின் மனைவிக்கு மட்டுமே வர வாய்ப்புண்டு.

Edited by நேசன்

ராஜபக்ஷேயின் மனைவியின் தங்கை எப்படி நிரூபமா 'ராஜபக்ஷே' ஆனார் ?

ராஜபக்சா என்பது குடும்பப் பெயர். சந்திரிக்கா கூட சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க என்று தான் போடுவார்.

ராஜபக்சே என்பது ஜனாதிபதியின் குடும்பப் பெயர். அவரது மைத்துனிக்கு அந்தப் பெயர் வேறு வழியில் அதாவது மைத்துனியின் தந்தை வழியில் வந்திருக்கலாம். மற்றப்படி மைத்துனனின் குடும்பப் பெயர் மைத்துனிக்கு வர வாய்ப்பில்லை. ஜனாதிபதியின் மனைவிக்கு மட்டுமே வர வாய்ப்புண்டு.

யாழ் கள நண்பர்கள் உறவுமுறைகள், குடும்பப் பெயர்களைப் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அடியேனின் சிறிய சந்தேகம் நிரூபமா மகிந்துவிற்கு சின்னவீடாக இருக்க முடியுமா என்பதே! இதனாலேயே அவரும் நிரூபமா ராஜபக்ச என அழைக்கப்படுகின்றார்?

யாராவது கைக்கூலிகள் நிரூபமாவிற்கு ஒரு போன்கோல் போட்டு கேட்டு யாழ் கள பார்வையாளர்களின் சந்தேகத்தைப் போக்கமுடியுமா?

யாராவது கைக்கூலிகள் நிரூபமாவிற்கு ஒரு போன்கோல் போட்டு கேட்டு யாழ் கள பார்வையாளர்களின் சந்தேகத்தைப் போக்கமுடியுமா?

நீங்கள் சொல்வதில் எந்த அளவு உண்மையுள்ளதோ தெரியாது, ஆனால் நிரூபமாவின் கணவர் தமிழர் (திருக்குமார் நடேசன்).

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்களில் செய்திகள் பிழையாக வருவதுண்டு. அண்மையில் மட்டக்களப்பில் குண்டு வெடிக்க, தமிழக ஊடக மொன்றில் கொழும்பில் உள்ள மட்டக்களப்பில் குண்டு வெடித்தது என்று எழுதியிருந்தது. அது போல நிருபமா ராஜபக்சா என்றும் எழுதி இருக்கலாம்.

உலக நன்மைக்கு யாகம் செய்யினமோ?. வாகரை, யாழ்ப்பாணத்து மக்களுக்கு உணவு கொடுக்காமல் தடுத்தவர் உவவின் அக்கா புருசன் தானே. உவை ஒழுங்கா தமிழரை அழிக்காமல் இருந்தாலே பல நன்மைகள் இருக்குது.

சன்னதி கோவில் தேரினை அழித்தது, கோவில்கள், தேவலாயங்கள் தரை மட்டமாக்கியது, அக்கோவில்கள், தேவாலயங்களில் தஞ்சம் அடைந்த மக்களை கொன்று குவித்தது..... இப்படி எத்தனை அனியாங்கள்.

முருகன் அசுரர்களை வென்று தேவர்களை காத்த இடமாக கொள்ளப்படுவது திருச்செந்தூர். ஆண்டு தோறும் இங்கே நடக்கும் சூரன் போர் இதை தான் குறிக்கிறது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இந்த திருச்செந்தூர் சென்று அபிசேக ஆராதனைகள் செய்து வணங்கி, முருகன் அருள் பெற்றால் எதிரிகளை வெற்றி கொள்ளலாம் என்பது ஒரு ஐதீகம். இதை தெரிந்து கொண்டு தான் இவர்கள் தமிழ் கடவுள் எனப்படும் முருகனை தேடி ஒடி இருக்கிறார்களோ தெரியாது.

தமிழனை அழிக்க தமிழ் கடவுள் முருகனுக்கே லஞ்சமா? உருப்பட்ட மாதிரி தான்.

அறிவு எப்படி இருக்க வேண்டும்? கூர்மையாக இருக்க வேண்டும்!

அறிவு எப்படி இருக்க வேண்டும்? பரந்து இருக்க வேண்டும்!

அறிவு எப்படி இருக்க வேண்டும்? ஆழமாக இருக்க வேண்டும்.

இப்படி அறிவுக்கு தமிழன் வரைந்த கருத்தோவியம் (graphical symbol) தான் முருகன் கை வேல்.

முனையில் கூர்மையாய், பின் பரந்த வடிவாகி கடைசியில் ஆழமான குற்றி போல் முடிவுறும் வேலின் வடிவம், அறிவுக்கு தமிழன் வரைந்த வரைவிலக்கணம்.

வெற்றிவேலுடனும் தமிழுடனும் இருக்கும் முருகன் ஏமாறுவானா?

இல்லை சிங்கள இனவெறிக்கு எமனாக மாறுவான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.