Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது

Featured Replies

யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது
 
 
யாழிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 99.45 வீதமான நிதி செலவிடப்படுள்ளது
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு  அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 7724 மில்லியன் ரூபா நிதிதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு யாழ்.மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
 
அதனடிப்படையில் கடந்த ஆண்டு 7724 மில்லியன் ருபா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3518 மில்லியன் ரூபா நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
 
IMG_5461.JPG
 
2015 ஆம் ஆண்டு 96.53 வீதம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த 2016 ஆம் ஆண்டு 99.45 வீதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து பாரிய நிதிகள் கிடைத்துள்ளன.
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்களிப்புக்களின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்துள்ளன.
 
IMG_5460.JPG
 
நிர்வாகம், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், அனர்த்த முகாமைத்துவம், குடிநீர், வீதி போக்குவரத்து விவசாயம், உட்கட்டுமானம் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதில் மீள்குடியேற்றத்தின் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சினால், 4039 மில்லியன் ரூபா நிதியும், விவசாயம் 2.415 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டு அதன் வேலைத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன.
 
விசேட திட்டங்களாக ஊர்காவற்துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கான படகுச் சேவை, நெடுந்தீவு இறங்கு துறைமுகம், மற்றும் காரைநகர், ஊர்காவற்துறைக்கான பாலம் அமைக்கும் வேலைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
 
IMG_5463.JPG
 
மேலும் "2017 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் வறுமை ஒழிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஊடாக நல்லிணக்க வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் எனவும் அவர் தெரிவித்தார்

http://www.onlineuthayan.com/news/22343

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் நிதி திரும்பி போய்விட்டது என எழுதியதாக ஞாபகம்.

3 hours ago, MEERA said:

ஜீவன் நிதி திரும்பி போய்விட்டது என எழுதியதாக ஞாபகம்.

நான் எழுதியது விபரமா 2015 என்று. இது 2016 

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை.

பூனைக்குட்டி அடுத்த மாதம் வெளியில வரும் - அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஜீவன் சிவா said:

நான் எழுதியது விபரமா 2015 என்று. இது 2016 

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை.

பூனைக்குட்டி அடுத்த மாதம் வெளியில வரும் - அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம்.

 

"2015 ஆம் ஆண்டு 96.53 வீதம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன்"

இது என்ன?

உங்களுக்கு உண்மையிலேயே விளங்கவில்லையா அல்லது விளங்காத மாதிரி நடிக்கிறீர்களா என்று எனக்கு இன்னமும் தெரியவில்லை.

40 minutes ago, ஜீவன் சிவா said:

பூனைக்குட்டி அடுத்த மாதம் வெளியில வரும் - அதுவரை வதந்திகளை பரப்ப வேண்டாம்.

 

பூனைக்குட்டி வெளியில் வந்தால் பிடித்து மடியில் வைத்திருங்கள்.

எப்போது எங்கு வதந்தியை எழுதினேன். செய்தியை ஒழுங்காக வாசியுங்கள்.

 

5 hours ago, நவீனன் said:
2015 ஆம் ஆண்டு 96.53 வீதம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், கடந்த 2016 ஆம் ஆண்டு 99.45 வீதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த பாரிய அபிவிருத்தி திட்டத்தில் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் இருந்து பாரிய நிதிகள் கிடைத்துள்ளன.
 

இதுதான் ஏற்கனவே நாடறிந்த செய்தி ஆச்சுதே :grin:
இனி இதை மடியில பிடிச்சு வைச்சா என்ன வெளியில விட்டா என்ன?

அடுத்த பூனைக்குட்டியைப் பற்றித்தான் நான் கதைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் நீங்கள் கேட்ட பூனைக்குட்டிகள் இவைதான்

Quote

2015 ஆம் ஆண்டு 96.53 வீதம் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன்,

கடந்த 2016 ஆம் ஆண்டு 99.45 வீதமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்

 

2 hours ago, ஜீவன் சிவா said:

 

இதுதான் ஏற்கனவே நாடறிந்த செய்தி ஆச்சுதே :grin:
இனி இதை மடியில பிடிச்சு வைச்சா என்ன வெளியில விட்டா என்ன?

அடுத்த பூனைக்குட்டியைப் பற்றித்தான் நான் கதைக்கிறேன்.

 

 ஜீவன்நீங்கள் எழுதியது 2015 இல் திருப்பி அனுப்பியது ஆயிரம் மில்லியன் ரூபாக்களுக்கு அதிகம் என. 2015 இல் 96.53% செலவழிக்கப்பட்டால் எப்படி? 

நீங்கள் தான் வதந்தியை பரப்புகிறீர்கள்(?).

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.