Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரபரப்பாகும் அரசாங்க கவிழ்ப்பு விவகாரம்

Featured Replies

  • தொடங்கியவர்

பரபரப்பாகும் அரசாங்க கவிழ்ப்பு விவகாரம்

03-7b282ab848b7024c5721993c0a3633345397bdd0.jpg

 

ரொபட் அன்­டனி

உண்­மை­யி­லேயே பிரச்­சினை தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குமே காணப்­ப­டு­கி­றது. அந்த பிரச்­சி­னையை மஹிந்த ராஜ­பக் ஷ நன்­றாக பயன்­ப­டுத்திக் கொண்டு தான் மீண்டும் பத­விக்கு வர முயற்­சிக்­கிறார். மறு­புறம் மஹிந்­தவின் பல­வீனம் மற்றும் பலம் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்தி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தம்மை பலப்­ப­டுத்த முயற்­சித்துக்  கொண்­டி­ருக்­கின்­றன.  

 

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­யன இணைந்து அமைத்­துள்ள நல்­லாட்சி தேசிய அர­சாங்­க­மா­னது பாரிய நெருக்­க­டிக்குள் சிக்கித் தவிர்ப்­ப­தா­கவே தெரி­கின்­றது. பாரிய எதிர்­பார்ப்­புக்கு மத்­தியில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னாலும் அமைக்­கப்­பட்ட தேசிய அர­சாங்கம் இன்று ஆட்டம் காணும் நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

எனினும் தற்­போது இடம்­பெறும் நிகழ்­வு­களைப் பார்க்­கும் ­போதும் மற்றும் நகர்­வு­களை அவ­தா­னிக்­கும்­போதும் தேசிய அர­சாங்கம் இன்னும் எவ்­வ­ளவு காலம் தாக்­கு­ப்பி­டிக்கும் என்ற கேள்வி எழு­கின்­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் பகி­ரங்­க­மான முறையில் இரண்டு கட்­சி­க­ளையும் விமர்­சித்துக் கொண்டு செல்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இதன் மிக அண்­மைய நகர்­வாக பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­லான நெருக்­க­டியை குறிப்­பிட முடியும். அண்­மையில் வெளிநாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்த ஒரு விட­யமே மஹிந்­த­வுக்கும் ரணி­லுக்கும் இடை­யி­லான அண்­மை­க்­கால கருத்து மோதல்­க­ளுக்கு ஆரம்­ப­மாக அமைந்­தது.

வெளிநாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கருத்து வெளியிட்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 2017 ஆம் ஆண்­டுக்குள் தற்­போ­தைய அர­சாங்­கத்தை கவிழ்ப்­ப­தாக சூளு­ரைத்­தி­ருந்தார். மஹிந்த ராஜ­ப­க் ஷவின் இந்த கருத்­தா­னது அர­சியல் களத்தில் பாரிய சர்ச்­சை­யையும் முரண்­பா­டு­க­ளையும் தோற்­று­விப்­ப­தாக அமைந்­தது. குறிப்­பாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னதும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் பகி­ரங்­க­மா­கவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை விமர்­சிக்க ஆரம்­பித்­தனர்.

அதா­வது மஹிந்த ராஜ­பக் ஷ பகல் கனவு கண்டு கொண்­டி­ருக்­கின்றார் என்றும் மஹிந்­த­வினால் ஒரு­போதும் ஆட்­சியைக் கவிழ்க்க முடி­யாது என்றும் இரண்டு கட்­சி­க­ளி­னதும் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்­தனர். அது­மட்­டு­மன்றி மஹிந்த ராஜ­பக் ஷ அதி­காரப் போதையில் கனவு காண்­ப­தா­கவும் விமர்­சித்­தி­ருந்­தனர். இந்த கூற்­றா­னது உண்­மையில் நாட்டில் அர­சியல் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யது என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. மறு­புறம் மஹிந்த அணி­யி­ன­ராக செயற்­படும் கூட்டு எதி­ர­ணி­யினர் மஹிந்­தவின் இந்த கூற்று கார­ண­மாக குறிப்­பி­டத்­தக்க உற்­சா­கத்தை அடைந்­தனர்.

மஹிந்­தவின் இந்த கூற்­றுக்கு ரணில் விக்கி­ர­ம­சிங்க எவ்­வா­றான பதிலை வழங்கப் போகின்றார் என அனை­வரும் எதிர்­பார்த்த நிலையில் பிர­தமர் அதற்கு மென்­மை­யான பதில் ஒன்றை வழங்­கி­யி­ருந்தார்.

அதா­வது ""இம்­மாத நடுப்­ப­கு­தியில் ஒரு வாரம் நான் வெளி­நாட்­டிற்கு செல்­ல­வுள்ளேன். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்திக் கொண்டு முடி­யு­மானால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்து காட்­டட்டும்"" என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சவால் விடுத்­தி­ருந்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜ­பக் ஷ எதுவும் செய்­யலாம். அல்­லது செய்­யாமல் விடலாம். ஆனால் அவர் என்ன செய்­தாலும் நான் தான் நாட்டின் பிர­த­ம­ராக இருப்பேன் என்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க இவ்­வாறு பதி­ல­ளித்­ததன் மூலம் தேசிய அர­சாங்கம் மிகவும் வலு­வாக இருப்­ப­தாக வெளிக்­காட்­டி­யி­ருந்தார். அதா­வது மஹிந்த முடி­யு­மானால் அர­சாங்­கத்தை கவிழ்க்­கட்டும் நாங்கள் எங்கள் வேலைத்­திட்­டங்­கனை முன்­னெ­டுத்து செல்வோம் என்ற தொனி­யி­லேயே பிர­தமர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் அதற்கும் பதி­ல­ளித்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ பிர­தமர் ரணிலின் முதுகில் குத்­தி­விட்டு அர­சாங்­கத்தை கவி­ழ்க்க மாட்டேன் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

""பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க நிம்­ம­தி­யாக வெளி­நாடு சென்று நாடு திரும்­பட்டும். அவ­ரது முதுகில் குத்தி ஆட்­சியை கைப்­பற்ற வேண்­டிய தேவை எனக்கு கிடை­யாது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தாக நான் கூறினேன். ஜன­நா­யக முறைப்­படி அதனை வெற்­றி­க­ர­மாக செய்வேன். அதற்­கான அர­சியல் செயற்­பா­டுகள் மற்றும் மக்கள் அணித்­தி­ரட்­டல்கள் வெற்றி கர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன "" என்று மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்­தவின் இந்தக் கூற்­றுக்கு பதி­ல­ளித்­தி­ருந்த பிர­தமர் ரணில் ""தேசிய அர­சாங்­கத்தில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் இல்லை. எமக்குள் பிள­வினை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்கின்­றனர். நானும் ஜனா­தி­ப­தியும் ஐக்­கி­யத்­து­டனும் புரிந்­து­ணர்­வு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம். எமது அபி­வி­ருத்திப் பய­ணத்தை ஒரு­போதும் தடுத்து நிறுத்த முடி­யாது. தேசிய அர­சாங்­கத்தின் ஸ்திர தன்மை தொடர்ந்தும் பாது­காக்­கப்­படும். பிர­தமர் பத­விக்­காக போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­பக் ஷ

தற்­போது எம்.பி பத­வியை பாது­காப்­ப­தற்­காக போராடி வரு­கின்றார் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இவ்­வாறு பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக் கும் முன்னாள் ஜனா­ப­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­லான கருத்து மோதல்கள் தொடர்ந்த வண்­ணமே இருக்­கின்­றன. இதே­வேளை அர­சாங்­கத்தின் சார்பில் அர­சாங்க கவிழ்ப்பு விவ­காரம் குறித்து கருத்து வெளி­யிட்­டி­ருந்த அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜி­த­சே­னா­ரட்ன இவ்­வாறு கூறு­கிறார். ""அர­சாங்கம் தொங்­கிக்­கொண்­டுதான் இருக்­கி­றது. ஆனால் அர­சாங்கம் ஒரு­போதும் வீழ்ந்­து­வி­டாது. தொங்­கிக்­கொண்டு இருக்­கின்ற அனைத்தும் வீழ்ந்­து­விட்டால் வாழ­மு­டி­யாது.

தொங்­கு­கின்ற எவையும் இல­குவில் விழுந்­து­வி­டாது. முதலில் 2015 ஆட்­சியை மாற்­று­வ­தாக கூறினர். பின்னர் 2016 இல் ஆட்­சியை மாற்­று­வ­தாக கூறினர். தற்­போது 2017 இல் அர­சாங்­கத்தை மாற்­று­வ­தாக கூறு­கின்­றனர். திரு­டர்­களை காப்­பாற்­றவே இவ்­வாறு அறிக்­கை­களை விடுக்­கின்­றனர். ஆனால் இவ்­வாறு கூறு­கின்­ற­வர்­க­ளினால் ஒரு­நாளும் அர­சாங்­கத்தை கவிழ்க்க முடி­யாது"" என்று ராஜித குறிப்­பிட்­டி­ருந்தார்.

இவ்­வாறு அர­சாங்­கத்தை கவிழ்ப்­பது என்ற விட­யங்கள் மிகவும் பர­ப­ரப்­பாக கூறப்­பட்­டு­வ­ரு­கின்­றன. எனினும் அர­சாங்­கத்தை கவிழ்ப்­பது என்­பது அவ்­வ­ளவு இல­கு­வான விடயம் அல்ல. பார்க்­கின்ற பார்­வையில் அர­சாங்கம் நெருக்­க­டிக்குள் இருப்­ப­தாக தெரி­கின்­றது. அதற்­காக அர­சாங்­கத்தை கவிழ்த்து விட முடியும் என்­ப­தற்­கான விஞ்­ஞான ரீதி­யான நிறு­வு­தல்­களை யாரும் முன்­வைக்­க­வில்லை.

 கடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி 106 ஆச­னங்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 95 ஆச­னங்­க­ளையும் பெற்­றி­ருந்­தன. ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு இரண்டு கட்­சி­க­ளுக்­குமே பெரும்­பான்மை பலம் கிடைக்கவில்லை. இந் நிலை­யி­லேயே வர­லாற்றில் ஒரு முக்­கிய பதிவை ஏற்­ப­டுத்தும் வித­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தை நிறு­வின.

எனினும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் சுமார் 50 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மஹிந்த தலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் எதி­ர­ணியில் அங்கம் வகிக்­கின்­றனர். அது­மட்­டுமின்­றி கூட்டு எதிர்க்­கட்சி என்ற பேரில் அர­சாங்­கத்தை எதிர்த்து தொடர்ச்­சி­யாக செயற்­பட்டு வரு­கின்­றனர். இந்த அணியின் மிகப்­பெ­ரிய மூல­த­ன­மாக மஹிந்த ராஜ­ப­க் ஷவே காணப்­ப­டு­கின்றார். மஹிந்த ராஜ­ப­க் ஷவை மிகப்­பெ­ரிய மூல­த­ன­மாக வைத்தே கூட்டு எதி­ர­ணி­யா­னது அர­சியல் செய்து வரு­கி­றது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அர­சாங்­கத்தை கவிழ்ப்போம், வீழ்த்­துவோம் போன்ற கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன. எவ்­வா­றெ­னினும் அர­சாங்­கத்­துக்குள் நெருக்­க­டிகள் இருக்­கின்­றமை தெ ளிவா­கின்­றது. இரண்டு பிர­தான கட்­சிகள் இணைந்து அர­சாங்­கத்தை அமைத்தால் இவ்­வா­றான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது இயல்­பா­ன­தாகும். அதனை எதிர்­பார்த்தே இரண்டு பிர­தான கட்­சி­களும் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருந்­தன.

இந் நிலையில் இந்த நெருக்­கடி தொடர்பில் சிரேஷ்ட சர்­வ­தேச ஊட­க­வி­ய­லாளர் அமல் ஜெய­சிங்க விப­ரிக்­கையில், ""எந்­த­வொரு கட்­சிக்கும் பெரும்­பான்மை பலம் இல்­லா­ததன் கார­ண­மா­கவே கூட்டு அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டது. எனவே இவ்­வாறு இரண்டு பிர­தான கட்­சி­களும் அர­சாங்­கத்தை அமைக்­கும்­போது பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வது யதார்த்­த­மா­ன­தாகும்.

அதா­வது இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான கொள்­கைகள் ஒன்­றுக்­கொன்று மாறு­பட்­ட­தாக இருக்­கின்­றதன் கார­ண­மாக எந்­த­வொரு கட்­சியும் தேசிய அர­சாங்­கத்தில் தனித்து முடி­வெ­டுக்க முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஒரு கட்சி ஏதா­வது ஒரு திட்­டத்தை முன்­வைத்தால் அடுத்த கட்சி அதனை எதிர்க்கும் கொள்­கை­யையே கொண்­டி­ருக்கும். இது தான் தேசிய அர­சாங்­கத்தின் யதார்த்­த­மாகும்.

இதனை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும். தேசிய அர­சாங்கம் எனும் ­போது விட்டுக் கொடுப்­புகள் நிச்­சயம் தேவை­யாகும். இல்­லா­விடின் தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­வது கடி­ன­மாகும் என்று குறிப்­பி­டு­கிறார்.

இந்த இடத்தில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ வும் இணைந்து செயற்­ப­டு­வ­தாக சுதந்­திரக் கட்­சியின் பிர­தி­நி­திகள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்ற நிலை­யி­லேயே இவர்கள் இரு­வரும் இவ்­வாறு கருத்து மோதல்­களில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். இங்கு இந்த விட­யத்தை சற்று ஆழ­மாக அவ­தா­னிக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய இரு­வ­ருக்கும் மஹிந்த ராஜ­பக் ஷ மிகவும் முக்­கி­ய­மான ஒரு­வ­ராக காணப்­ப­டு­கிறார்.

அதா­வது மஹிந்த ராஜ­ப­க் ஷவை பல­மி­ழக்கச் செய்து சுதந்­திரக் கட்­சியின் பலத்தை முழு­மை­யாகப் பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முயற்­சிக்­கலாம். அதற்­காக சுதந்­திரக் கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சியல் காய்­களை நகர்த்­தலாம். காரணம் சுதந்­திரக் கட்­சியை தனக்கு கீழ் பலப்­ப­டுத்­த­வேண்­டிய தேவை தலைவர் என்ற ரீதியில் அவ­ருக்கு உண்டு.

ஆனால் அதனை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க விரும்­ப­மாட்டார். மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பி­டத்­தக்க பலத்­துடன் இருக்க வேண்டும் என்­பதும் அத­னூ­டாக சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வ­துமே பிர­தமர் ரணிலின் நோக்­க­மாக இருக்கும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் என்ற ரீதியில் அவர் அவ்­வா­றான அர­சியல் காய் நகர்த்­தலை முன்­னெ­டுக்­கலாம்.

அவ்­வாறு பார்க்­கும்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற பனிப்­போரே மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான பனிப்­போ­ராக பிர­தி­ப­லித்துக் கொண்­டி­ருக்­கின்ற­தா­கவே தெரி­கி­றது.

அப்­ப­டி­யாயின் உண்­மை­யி­லேயே பிரச்­சினை தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்­குமே காணப்­ப­டு­கி­றது. அந்த பிரச்­சி­னையை மஹிந்த ராஜ­பக் ஷ நன்­றாக பயன்­ப­டுத்திக் கொண்டு தான் மீண்டும் பத­விக்கு வர முயற்­சிக்­கிறார். மறு­புறம் மஹிந்­தவின் பல­வீனம் மற்றும் பலம் ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்தி ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் தம்மை பலப்­ப­டுத்த முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால் இந்த இரண்டு தரப்­பி­னரும் ஒரு விட­யத்தை நன்­றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாரிய எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யி­லேயே தேசிய அர­சாங்கம் உருவாக்கப்பட்டது. குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதி முறைமையில் மாற்றம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித அபிவிருத்தி மற்றும் மலையத்தை கட்டியெழுப்புதல் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியிலேயே தேசிய அரசாங்கம் உருவாகியது.

அதுமட்டுமன்றி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் தற்போது பார்க்கும்போது எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேறிவிடாமல் போய்விடுமோ என்ற எண்ணமே மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

 தேசிய அரசாங்கத்தை அமைக்கும்போது எவ்வாறான நோக்கங்களுடன் அதனை உருவாக்கினோம் என்பதனை இரண்டு கட்சிகளும் மறந்துவிடக்கூடாது. அந்த நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் வரை அதனை முன்னெடுத்துச் செல்வது அவசியமாகும். ஆனால் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலை பார்க்கும்போது எங்கே எந்தவொரு விடயமும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.

மக்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் செயற்படவேண்டியது அவசியமாகும். பரபரப்பான அரசியல் சூழலானது மக்களின் எதிர்பார்ப்புக்களை மழுங்கடித்துவிடக்கூடாது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.