Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினை இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்..? பொங்கல் வாழ்த்தில் சம்பந்தன்

Featured Replies

இனப்பிரச்சினை இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்..? பொங்கல் வாழ்த்தில் சம்பந்தன்

தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகின்றேன்.

உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது.

தை மாதம் பிறக்கும் ஆண்டுத் தொடக்கம் மக்களுக்கு பல எதிர்பார்ப்புக்களை உருவாகும். அந்த வகையில் தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்

அந்த தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திட வேண்டுமெனவும், இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் இந் நன்னாளில் நாம் நம்பிக்கை கொள்வோம்.

எதிர்பார்ப்புகளும் சவால்களும் நிறைந்த ஆண்டொன்றினுள் காலடி வைத்துள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் மக்களிடையே புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட்டு சாந்தி, சமாதானத்துடன் கூடிய சௌபாக்கியமிக்க நாடாக இந்நாடு சிறப்புற, பிறக்கும் தைத்திங்கள் வழிசமைத்திட வேண்டுமென எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

http://www.tamilwin.com/special/01/131658?ref=home

 

  • தொடங்கியவர்

தைப்பொங்கல் மானிட சமூகத்தின் உயர்ந்த பண்பின் வெளிப்பாடு : ஜனாதிபதி

மனிதனுக்கும், இயற்கையின் கொடைகளுக்குமிடையிலான பரஸ்பர உடன்படிக்கையை புதுப்பிக்கும் கலாசார பண்டிகைகள் மூலம் மனித சமூகத்தின் பரந்த உள்ளத்தின் உயர்ந்த பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனித வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே இயற்கையுடன் நெருங்கிய பிணைப்பினை கொண்டுள்ள மனிதன் ஒட்டுமொத்த இயற்கையினை பிரதிநிதித்துவப்படுத்தும் சூரிய பகவான் மீது கொண்டுள்ள பக்தியினை பரிணாம வளச்சியை நோக்கிய பயணத்தின் பின்னரும் கைவிடவில்லை.

இந்து சமயத்தை பின்பற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் தொன்று தொட்டு மேற்கொண்டு வரும் சூரிய வழிபாட்டின் சிறந்த வெளிப்பாடாகவே தைப்பொங்கல் இருந்து வருகின்றது.

சகோதர தமிழ் மக்களுக்கும் நாட்டிற்கும் சௌபாக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என அவர் தெரித்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/131675?ref=home

 
  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் மக்கள் பிரதிநிதிகளின் பொங்கல் வாழ்த்துச் செய்திகள்

சித்திரைப் புத்தாண்டுக்குள் வடகிழக்கு மக்களின் ஏகோபித்த கோரிக்கைகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டுமென இறைவனை வழிபட்டு இன்றைய தினம் மலர்ந்துள்ள தைத்திரு நாளை கொண்டாடுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தை திருநாளை முன்னிட்டு லங்காசிறி சேவைக்கு இன்று(14) வழங்கிய விசேட வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளாருமாகிய கி.துரைராஜாசிங்கத்தின் வாழ்த்துச் செய்தியில், “தை திருநாள் தமிழர்களின் புதுவருடமாக கணிக்கப்பட்ட வரலாற்றுச் சான்று, இருந்த போதும் சித்திரை வருடப் பிறப்பைதான் தமிழர்களின் புதுவருடமாக கொண்டுகின்றோம். எதிர் காலத்தில் தமிழர்களின் புதுவருடமாக தை திருநாளை புதுப்பிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அனைத்து தமிழ் இந்து மக்களிடையே உள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

வருங்காலங்களில் தை திருநாளை தமிழர்களின் புதுவருடமாக கொண்டாட அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் ஏற்படுத்துவோம் என நினைக்கின்றோம். 'தை பிறந்தாள் வழி பிறக்கும்' என்பதற்கு ஏற்ப 2015 ஆம் ஆண்டு தை மாத்திலே இடம்பெற்றதான ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள் ஒரு சிறிய ஒளிக்கீற்றைக் காட்டியிருக்கின்றது. அதனடிப்படையில் பயணிப்போம், அனைத்து தமிழ் இந்து மக்கள் அனைவருக்கும் தை திரு நாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.துரைரெட்ணம் தனது தை திருநாள் வாழ்த்துச் செய்தியில், “இலங்கை வாழ் தமிழ் இந்து மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தை திருநாளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

2016 ஆம் ஆண்டு ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வடகிழக்கு தமிழ் மக்கள் தீர்வுத் திட்டத்தை நோக்கியதான 2017 ஆம் ஆண்டுக்குரிய தை திருநாள் அமையும். ஆனால் இன்றைய தை திருநாளில் எமது மக்களின் வேண்டுதல்கள் எண்ணங்கள் அனைத்தும் தொக்கி நிற்கின்றது” என தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரத்தின் தை திருநாள் வாழ்த்துச் செய்தியில், “ஈழத்தில் தை திருநாளை கொண்டாடும் அனைத்து எமது தமிழ் இந்து உறவுகள் அனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இரா.சம்பந்தன் 2016 க்குள் தீர்வு கிடைக்குமென பல மேடைகளில் கூறியிருந்தும் 2017 ஆம் ஆண்டு வரை நீடித்து எமது வடகிழக்கு தமிழ் உறவுகளின் கோரிக்கைகள் கேள்விக் குறியாக உள்ளது.

இரா.சம்பந்தன் மாத்திரம் வாக்குறுதி கொடுக்கவில்லை. பல தமிழ் தலைவர்கள் நாட்டின் ஆட்சியாளர்களின் போக்கை வைத்து தமிழ் மக்களுக்கான ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குறுதிகளை கொடுத்து இருக்கின்றார்கள்.

2017 ஆம் வருடத்திற்குள் ஸ்ரீலங்கா அரசிடம் ஒரு இறுதியான தீர்வுக்கான கோரிக்கையை எமது தமிழ் தலைமைகள் முன்வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/131688?ref=home

 
  • தொடங்கியவர்

சிறைக்குள் வீரவன்சவுக்கு கிடைத்த ஞானம்! தமிழர்கள் மீது திடீரென ஏற்பட்ட பாசம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருளுக்கு மீண்டும் அனுமதிக்காமல் தேசிய ஒற்றுமை பாதுகாப்போம்...

விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையை வழங்குகின்ற சூரிய பகவான் மற்றும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்துகளால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்து பக்தர்களுக்கு தைப்பொங்கல் தினத்தின் பின்னரே புதுவருடம் ஆரம்பமாகின்றது. புதிய வருட ஆரம்பத்தை தொடர்ந்து புதிய எதிர்பார்ப்பு, நல்ல விடயங்களை மேற்கொள்வதற்கு இலங்கை இந்த பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வோம்.

2009ஆம் ஆண்டின் பின்னர் யுத்தத்தில் காயமடைந்த தெற்கு மற்றும் வடக்கு மக்களின் மனங்களை இணைத்து உண்மையான நல்லிணக்கம் நாட்டினுள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

குறுகிய பிளவுகளை கைவிட்டு நாங்கள் இலங்கையர்கள் என இணைந்திருப்போம். ஆனால் "மாற்றம்" என்ற பெயரில் இன்று நாட்டினுள் போலி நல்லிணக்கமும் அதன் ஊடாக மக்களுக்கு இடையில் எதிரியான நட்பும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இந்த அனைத்து விடயங்களின் ஆழத்தை புரிந்துக் கொள்ளும் புதிய வருடமாக இது காணப்படும். அதில் மீண்டும் இருண்ட சூழலுக்கு இடமளிக்காமல் அனைவரும் நட்புடன் தேசிய நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு இந்த நல்ல நாளில் இந்து பக்தர்கள் செயற்பட வேண்டும் என விமல் வீரவன்ச தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.tamilwin.com/community/01/131685?ref=youmaylike2

  • தொடங்கியவர்

முன்னாள் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவிலைத்தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கள மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் உள்ள தமிழர்கள் இன்று தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த தைத்திருநாள் சிறப்பாதாக இருக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/statements/01/131693?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

15937195_196615130810876_560115328462617

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.