Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள

Featured Replies

சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள
 
 
சனல்4 படத்தை இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாமாம்-கூறுகிறார் மங்கள
சனல் 4 வின் ஆவணப்படத்தினைத் தற்போது இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம் என  வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
பிரிட்டனிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, லண்டன் சத்தம் ஹவுசில்  இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்தார். 
 
இந்தக் கலந்துரையாடலில் சர்வதேச இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் மத்தியில் உரையாற்றிய அவர் ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிலைமைகள் எதிர்பார்க்கப்படுவது போல், நூற்றுக்கு நூறுவீதம் இல்லா விட்டாலும், அரசாங்கம் மனித உரிமை நிலைமைகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் கணி சமான முன்னேற்றங்களைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தார்.
 
இங்கு கலந்துகொண்டிருந்த சனல் 4 தொலைக்காட்சியின் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது அரச படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளிட்ட ஏனைய குற்றங்களை சிங்கள மக்கள் பார்வையிடவேண்டும் என்றும், தனது ஆவணப்படத்தினை இலங்கையில் திரையிடுவதற்கு ஏன் இலங்கை அரசு தயங்குகிறது என்றும் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டார்.
 
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சமரவீர இந்த ஒளிநாடாவை சர்ச்சைக்குள்ளான காலப்பகுதியிலேயே தான் இலங்கையில் பார்த்ததாகவும், தற்போது இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளில் அரசு தீவிரமாக இறங்கியிருக்கும் வேளையில், இந்த ஒளிநாடா திரையிடப்பட்டால் அது தமிழர் அரசாங்கத்திடமிருந்து அந்நியப்பட அல்லது விலகிச் செல்ல வழிவகுக்கும் என்று அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
 
ஆனாலும், இந்த ஆவணப்படத்தினை இலங்கையில்  திரையிடுவதற்கான ஒரு காலம் விரைவில் வரும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் சமரவீர தெரிவித்தார்.
 
இலங்கைக்கு மீளவும் விஜயம் செய்வதற்குக் கலம் மக்ரேக்கு அழைப்பு விடுத்த அவர் கடந்த 18 மாதங்கள் என்ற இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள், நாம் கணிசமானளவு  மாற்றத்தினை வடக்கில் மேற்கொண்டிருக்கிறோம். 
 
அங்கே நிலைமைகள் 100 க்கு 100 வீதம் சரியாக இருக்காவிட்டாலும் கூட இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கின்ற போதிலும் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/22653

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இலங்கையில் திரையிட்டால் தமிழர்கள் அந்நியப்படுத்தப்படலாம்

இப்போ தமிழ் மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்கிறார்களாம்.  2016 இறுதியில் தமிழ் மக்கள் தீர்வை பெற்றுக் கொண்டார்கள்  என்பதை ஏன் சொல்லவில்லை?

Quote

கடந்த 18 மாதங்கள் என்ற இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள், நாம் கணிசமானளவு  மாற்றத்தினை வடக்கில் மேற்கொண்டிருக்கிறோம். 

உதாரணத்துக்கு இரண்டை எடுத்து விடுங்கோ பார்ப்போம்.

Quote

ராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கின்ற போதிலும் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது

வடக்கு கிழக்கில் தற்போதைய இராணுவத்தின் எண்ணிக்கை என்ன? மகிந்த காலத்திலும் இப்படி ஒரு பம்மாத்து விடப்பட்டது. இப்படி பல பொய்களை சொல்லி தான் ஐரோப்பிய தடையை எடுத்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.