Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவரவா சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுகின்றது? டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்கிறார்

Featured Replies

மஹிந்­தவை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரவா சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு கோரப்­ப­டு­கின்­றது?

 

டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கு முக்­கி­ய ­பொ­றுப்பு உள்­ளது என்­கிறார் 

(ரொபட் அன்­டனி)

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி ­பதி முறையை நீக்கும் நோக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தினால் அர­சியல் தீர்வை பெறு­வ­தற்­கான இறுதி சந்­தர்ப்­பத்­தையும் இழந்­து­வி­டுவோம். அத்­துடன் மீண்டும் மஹிந்த ராஜ­பக்ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட பிர­த­ம­ராக உரு­வெ­டுப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­படும் என்று சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா தெரி­வித்தார்.

சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் மாகாண சபை­க­ளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை வழங்கி ஒத்­தி­சைவு பட்­டி­ய­லையும் நீக்க முடியும். ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சென்றால் இவை ஒன்றும் இல்­லாமல் போய்­விடும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை வலி­யு­றுத்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்றும் டிலான் பெரெரா குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை மற்றும் அர­சியல் தீர்வு விவ­காரம் என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரெரா இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­ப­டு­மென அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன கூறி­யி­ருக்­கிறார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யவர் என்ற வகையில் அவர் அவ்­வாறு கூறலாம். ஆனால் அவ­ருடன் சேர்ந்து வெளி­யே­றிய துமிந்த திஸா­நா­யக்க நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை மாற்­றப்­ப­டக்­கூ­டாது என யோசனை முன்­வைக்­கிறார் என்­ப­த­னையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றோம்.

எனவே அனைத்துத் தரப்­பிலும் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எது சிறந்­த­தாக அமை­கி­றதோ அதை முன்­னெ­டுக்­கலாம். ஆனால் இங்கு ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலம் கிடைத்­துள்­ளது. அதனைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை உள்­ள­டக்­கிய அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை முன்­னெ­டுப்­பதே பொருத்­த­மா­ன­தாக அமையும்.

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு எதி­ராக வேலை­செய்த சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைக் கொண்டே 19 ஆவது திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது. அவ்­வாறு அன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் 19 ஆவது திருத்த சட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கா­விடின் என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

தற்­போது 19 ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் எதனை கூறிக்­கொண்டு வந்­தாரோ அந்த நோக்கம் குறிப்­பி­டத்­தக்க அளவில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

எனவே தற்­போது என்ன செய்ய வேண்­டு­மென்றால் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்தைக் கொண்டு இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் கண்­டு­விட வேண்டும். அத­னை­வி­டுத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் ஊடா­கவே புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ருவோம் என அடம்­பி­டித்தால் ஒன்றும் நடக்­காமல் போய்­விடும்.

குறிப்­பாக நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கிய புதிய அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்றும் நோக்கில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டால் அது வெற்­றி­ய­டைந்­தாலும் தோல்­வி­ய­டைந்­தாலும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அது பாதிப்­பா­கவே அமையும். அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தோல்வி அடைந்தால் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுத்­திட்­டமும் தோல்­வி­ய­டைந்­து­விடும்.

அப்­படி நடந்தால் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு கிடைத்த இறுதி சந்­தர்ப்­பத்­தையும் நாங்கள் இழந்­த­தா­கவே வர­லாற்றில் பதி­வாகும். அந்த நிலை­மைக்கு சென்­று­வி­டக்­கூ­டாது. அது­மட்­டு­மன்றி புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு வெற்­றி­பெ­று­மானால் அது மீண்டும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நிறை­வேற்றுப் பிர­த­ம­ராக உரு­வா­கு­வ­தற்கு வழி­ச­மைத்­து­விடும்.

எனவே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தினால் அதனால் உரு­வாகும் வெற்றி அல்­லது தோல்வி என இரண்டு நிலை­மை­க­ளுமே தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை நிச்­சயம் பாதிப்­ப­தாக அமையும். எனவே பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரி­நிற்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு இது தொடர்பில் சற்று சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­வதை காரணம் காட்­டியே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும் எனக் கூறு­கிறார்.

எனவே இவ்­வாறு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு அத­னூ­டாக தீர்வு கிடைக்­காமல் போனாலும் அல்­லது மஹிந்த மீண்டும் நிறை­வேற்று அதி­காரப் பிர­த­ம­ராக உரு­வா­கி­னாலும் அதற்­கான பொறுப்பை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஏற்­க­வேண்டும்.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தான் தற்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை தொடர்ச்­சி­யாக கோரி வரு­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அடிக்­கடி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்து பேசு­கிறார். அதனை மேற்கோள் காட்­டியே அர­சாங்­கமும் கருத்து வெளி­யி­டு­கி­றது. எனவே இது தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அது­மட்­டு­மன்றி சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி அதி­கா­ரப்­ப­கிர்வு விட­யத்தில் தற்­போது முக்­கி­ய­மான இடத்­திற்கு வந்­தி­ருக்­கி­றது. அதா­வது 13 ஆவது திருத்த சட்டம் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென்றும் காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் சுதந்­தி­ரக்­கட்சி தற்­போது கூறு­கி­றது.

இந்த இடத்­திற்கு கட்­சியை கொண்­டு­வந்­த­மை­யா­னது பாரிய வெற்­றி­யாகும். அந்த சாத­னையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவே முன்­னெ­டுத்­துள்ளார். எனவே அதில் உரிய முறை­மை­யி­லான வெற்றியைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அனைவரதும் கடமையாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்குவதாக தற்போது ஒருசிலர் பகிரங்கமாக கூறுகின்றனர். ஆனால் அதிலுள்ள ஆபத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இருந்தால் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தராஜபக்ஷ, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் மீண்டும் பதவிக்கு வரமுடியாது.

ஆனால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக வரக்கூடிய நிலைமை உள்ளது. எனவே இந்த அனைத்து சாத்தியங்கள் குறித்தும் அரசியல் கூக்குரலிடுகின்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக இந்த இடத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு பாரிய பொறுப்பு உள்ளது என நாங்கள் கருதுகிறோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-14#page-1

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பம்மாத்து எல்லாம் வேண்டாம்.

MP மார் கொடுத்ததை, அடுத்து பாராளுமன்றம் வரும் MP மார் பறிக்க முடியும்.

ஆகவே சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும். இது தொடர்பில் சர்வதேச அழுத்தம் உள்ளது. அதில் இருந்து தப்பிக்க, இவர்கள் தூண்டில் போடுகிறார்கள்.

சுதந்திரத்தின் போது, பாகிஸ்தான் ஜின்னா போல நடவாது, சிங்கள தலைகள் தந்த இத்துப் போன கயிறில் தொங்கி 69 வருசமா நாசமறுந்தது போதும்.

இம்முறையும் அதே போல அறுந்து விழாமல், சூதனமாக நடந்து கொள்ளணும் மக்கா.

http://www.dailymirror.lk/article/SLFP-favours-proposals-not-requiring-referendum-Dilan-122110.html

பின்னூட்டம் பாருங்கள்... முக்கியமாக 'NuttyNutter'

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.