Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு

Featured Replies

கிளிநொச்சியில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக குற்றச்சாட்டு

poruthu-veedu.jpg
கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவா்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிா்ப்புத் தொிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட  செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

அந்த வகையில் கிளி நொச்சி மாவட்டத்தில்  காணியற்றவா்கள், ஒரு அங்கத்தவா் குடும்பங்கள், காணி கிளிநொச்சியில் இருந்தும் நிரந்தரமாக  மாவட்டத்தில் வசிக்காதவா்கள், என அனைத்து தர்பினா்களிடமும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

பொருத்து வீட்டுக்கு மக்கள் பெரும் தொகையில் விண்ணப்பத்துள்ளனா் எனவே அது மக்களின் விருப்பத்திற்குரிய வீடு எனக் காட்டுவதற்கே மீள்குடியேற்ற அமைச்சு இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  மாவட்ட பொது அமைப்புக்கள் விசனம் தெரிவித்துளளன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 11 ஆயிரம்  பொருத்து வீட்டு விண்ணப்படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை மாவட்டச் செயலகம்  கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு 6500 விண்ணப்பங்களும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு 2300 விணப்பங்களும், பூநகாி பிரதேச செயலக பிாிவுக்கு 1500 விண்ணப்பங்களும், பளை பிரதேச செயலக பிரிவுக்கு 700 என வழங்கியுள்ளது..

இதனை தவிர மீள்குடியேற்ற அமைச்சு அரச திணைக்களங்களுக் அப்பாலும் பொருத்து வீட்டுக்கான விண்ணப்பங்களை வழங்கி விதிமுறைகள், நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாது பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொருத்தமற்ற  பொருத்து வீட்டுக்கு மக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என வெளிக்காட்டவே அமைச்சு இவ்வாறு  பல நடவடிக்களை மேற்கொண்டுள்ளது பொது  அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனஃ

மக்கள் மத்தயிலும் இந்த பொருத்து வீட்டுத் திட்டத்தை விட்டால் வேறு வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெறாது எனவே கொட்டில்களில் இருப்பதனை விட கிடைக்கின்ற எதனையாவது பெற்றுக்கொள்வோம் என்ற நிலையில் விருப்பம் இன்றி விண்ணப்பங்களை பூரணப்படுத்தி வழங்கி வருவதாகவும் சில அதிகாரிகள்  குறிப்பிடுகின்றனர்.

http://globaltamilnews.net/archives/14322

கிளிநொச்சியில் நல்ல கல்வீடு உள்ளவர்கள், பணமுள்ளவர்களும் பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்துள்ளார்களாம்! தங்கள் பெரிய காணிகளில் ஒருபகுதியை தனிக் காணியாக பிரித்து அதில் பொருத்து வீடுகளை அமைக்க கோரும்படி மேற்படி கிராம சேவையாளர்கள் இவர்களிடம் சொல்லியுள்ளார்கள்.  

கிராம சேவையாளர்களுக்கு கடும் நிர்பந்தம் காரணமாக வேறுவழியின்றி இவ்வாறு செய்து வருகிறார்களாம்.

  • தொடங்கியவர்
பொருத்து வீட்டுக்கு 5,003 பேர் விண்ணப்பம்
 
19-01-2017 05:49 PM
Comments - 0       Views - 27

article_1484828591-1.jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு 5,003 பேர்,  கடந்த 13 ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்,            

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியேற்றத்தின் போது குடியமர்ந்துள்ள குடும்பங்களில்  16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு  வீட்டுத்திட்டத்தின் ஊடாக புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.               

இந்நிலையில், மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைந்து கொள்வதற்கு எமது மாவட்டத்துக்கு 11 ஆயிரம் விண்ணப்பப் படிவங்களை மீள் குடியேற்ற அமைச்சு வழங்கியுள்ளது.        

இதனை நாம், கண்டாவளை பிரதேச் செயலகப் பிரிவில் உள்ள 16 கிராம அலுவலர்கள் பிரிவுகளின் ஊடாக 2,300 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பயனாளிகளிடம் இருந்து 1,294 பூரணப்படுத்திய   படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.                         

இதேபோன்று, பூநகரி பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள 19, கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 1,340 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், மீளவும் பயனாளிகளிடம் இருந்து 957 பூரணப்படுத்தி படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 18 கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 520 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில் மீளவும் 420 பூரணப்படுத்திய படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கரைச்சி பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட 42 கிராம அலுவலகப் பிரிவுகளின் கிராம அலுவலர்கள் ஊடாக 5,550 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பயனாளிகளிடம் இருந்து 2232, பூரணப்படுத்திய படிவங்கள்  இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளன.

4 பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 95 கிராம அலுவலர்கள் பிரிவுகளில் 8,410 விண்ணப்பங்களை பயனாளிகளுக்கு வழங்கிய நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து பூரணப்படுத்திய 5,003 படிவங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.                  

இதேவேளை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதித் திகதிக்குள் விடுமுறை தினங்கள் அதிகம் வந்துள்ளமையால் தம்மால் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, கால நீடிப்பு வழங்குமாறு அனைத்து மாவட்ட பயணாளிகளும் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.     

எனவே பொருத்து வீட்டுத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கால நீட்டிப்பு முடிவடைவதற்கு முன்னர் தமது பகுதி பிரதேசச் செயலகப் பிரிவுகள் ஊடாக பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்க முடியும்” என அவர் மேலும் கூறினார்.

- See more at: http://www.tamilmirror.lk/190012/ப-ர-த-த-வ-ட-ட-க-க-ப-ர-வ-ண-ணப-பம-#sthash.IBLwm6Tk.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.