Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு

Featured Replies

டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு 

 

 

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார்.

_NCS_modified_20170128162353_MaxW_640_im

ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாரிய போராட்டங்கள் நடைபெற்றதோடு, அமெரிக்க விமானநிலையங்களில் குடிவரவு துறை அதிகாரிகளால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் குறித்த தடை உத்தரவு காரணமாக இதுவரை சுமார் 60 ஆயிரம் விசாக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

170129105148-donald-trump-extreme-vettin

மேலும் அகதிகளை அனுமதிக்கும் திட்டத்திற்கு 120 நாட்கள் இடைநிறுத்தம், ஈரான், ஈராக், சிரியா, சூடான், லிபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு 90 நாட்கள் விசா வழங்குவது தடைபடுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் சியாட்டல் நீதிபதியின் உத்தரவினால், அமெரிக்கா செல்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் செல்வதற்கான தடை, அத்தோடு குறிப்பிட்ட நாட்டவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

விசா ரத்துக்கு இடைக்கால தடை: கோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு

7 நாடுகளுக்கான விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 
 
 
 
விசா ரத்துக்கு இடைக்கால தடை: கோர்ட்டு உத்தரவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு
 
வாஷிங்டன்:

ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளுக்கு ‘விசா’ வழங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

அதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கூடி அதிபர் டிரம்புக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். நேற்று வாஷிங்டன், மியாமி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களான லண்டன், பாரீஸ், பெர்லின், ஸ்டாக் கோம், பார்சிலோனா உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் டிரம்பின் ‘விசா’ தடை உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. சியாட்டில் மத்திய கோர்ட்டு நீதிபதி ஜேம்ஸ் ராபர்ட் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இது டிரம்பின் அரசு அதிகாரத்துக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

இதற்கிடையே, மத்திய கோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசின் நீதித்துறை மேல்கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது. மேலும் அதிபர் டொனால்டு டிரம்ப், உள்துறை ஜான் கெல்லி, வெளியுறவு துறை மந்திரி ரெஸ் டில்லர்சன் ஆகியோரும் சியாட்டில் மத்திய கோர்ட்டு தடை உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவின் பாதுகாப்புக்காகத்தான் ‘விசா’ வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவசர வழக்காக விசாரித்து தடையை உடனே நீக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/05121717/1066393/Trump-admin-appeals-ruling-blocking-travel-ban.vpf

  • தொடங்கியவர்

அமெரிக்க அரசின் மேன் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது..

donald-trump.jpg

7 நாடுகளின் மக்கள் மற்றும் அகதிகள் மீது அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த தடையை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி அமெரிக்க அரசின் நீதித் துறை தாக்கல் செய்த வேண்டுகோளை, அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று நிராகரித்திருக்கிறது. அமெரிக்க ஜெனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த தடையை எதிர்த்து, அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் தொடர்கின்றன.

டிரம்ப் விதித்திருந்த தடைக்கு, சியாட்டல் நீதிபதி வழங்கிய தேசிய அளவிலான தற்காலிக இடைநிறுத்தத்திற்கு எதிராக அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அரசின் இந்த மேல்முறையீட்டை நிரானரித்த நீதிமன்றம், இந்த தடை குறித்து மேலதிகமான விரிவான விளக்கங்களை,  திங்கள்கிழமைக்குள் நீதித்துறை   தாக்கல் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.  இதன் பின்னரே இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பை வழங்கிய நீதிபதி  தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பற்றிய விடயத்தில் ஜெனாதிபதியின் முடிவுக்கு எதிராக, இந்த தற்காலிக தடையை வழங்கியதன் மூலம், முடிவுக்குப் பின்னான கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார் என அவர் மீது டிரம்ப் நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

http://globaltamilnews.net/archives/16446

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா  எது செய்தாலும் தன்ரை பலத்தாலை தப்பீடும்..... ஆனால் கிட்டடியிலை மிண்டு குடுக்கப்போன மேடம் மே பாவம்...

Bullish May tells Trump they can lead the world. Really?

அந்தக்காலத்து பில்டப் இந்தக்காலத்துக்கு சரிவருமோ எண்டது சந்தேகம்தான்...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.