Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள்

Featured Replies

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள்

16939267_1131864583591407_62922336965834
தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் தயரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையின் இருட்டறை என்ற  (The Dark Cornors of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர். எதிர் வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.
 
 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களில் பலர் இந்த ஆவணப்படத்திற்கு வாக்குமூலங்ளை வழங்கியுள்ளனர். அதில் பெற்றோலால் நனைக்கப்பட்ட பொலுத்தீன் பைகளால் முகங்களை மூடி தாக்ப்பட்டவர்களும், அசீட் ஊற்றி தாக்கப்பட்டவர்களும், நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களும், முள்ளுப்பற்றைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் உழவு இயந்திரம் மூலம் கட்டி இழுக்கப்பட்டவர்களும், வீட்டில் தங்கியிருந்தபோது பிள்ளைகளுக்கு முன்பாக தாயை நான்கு பேர் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியதை நேரில் பார்த்த பிள்ளைகள் என பலர் தமது உள்ளக்குமுறல்களை இந்த ஆவணப்படத்தில் வெளிப்டுத்தியுள்ளனர்.
 
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
 
 

http://globaltamilnews.net/archives/18854

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்படையாக ஒரு இனப்படுகொலை நடந்தது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன. விசாரணையை நடாத்துவதற்கு சிங்களவர் தயங்குவது நியாயமானது. தாம் மாட்டுப்படுவோம் என தெரியும். இதில் தமிழ் அரசியல்வாதிகள் பின் நிற்பதும் பின் வாங்குவதும் பிற்போடுவதும் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு இனப்படுகொலை இனிமேல் நடக்காமல் இருக்க ஒரு நீதியான விசாரணை அவசியமானது.

இவ்விசாரணையால் தமிழர் சிங்களவரின் ஒற்றுமை பாதிக்கபடும் என்பது நொண்டிச்சாட்டு.தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவது உலக நீதியானது தானே. நாம் எப்படி விதிவிலக்காக முடியும்???

  • தொடங்கியவர்

  'அம்மாவை நான்கு அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர், கதறி அழுதார் : என்னை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தார்' : பெண் அதிர்ச்சி வாக்குமூலம் : ஆவணப்படம் வெளியானது

 

 

The-Dark-Cornors-of-Srilanka.jpg

'நான் வயதுக்கு வந்து சில நாட்களில் அம்மாவுடன் தனியாக வீட்டில் இருந்தேன். இரவில் இராணுவ அதிகாரிகள் வந்து எனது வீட்டை தட்டினார்கள். நான் கதவை திறந்த போது எனது கழுத்தில் கத்தியை வைக்க உடனடியாக அம்மா என்னை தள்ளி அவர்களிடம் மாட்டிக்கொண்டார். நான் தனி அறையில் இருக்க எனது அம்மாவை மற்றைய அறையில் வைத்து நான்கு பேர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார்கள். எனது எம்மா கதறி அழுதார். என்னை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன்னை தியாகம் செய்தார். இந்த சம்வத்தை என்னால் மறக்க முடியாது என பெண்ணொருவர் அதிர்ச்சி  வாக்கு மூலம் வழங்கியுள்ள ஆவணப்பட்டமொன்று வெளியாகியுள்ளது.

 

 

மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) நிறுவனத்தினால் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும்  சித்திரவதைகள் தொடர்பான ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படம் முழுமையும் இலங்கையில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இருட்டறை என்ற  (The Dark Corners of Sri Lanka) என்ற இந்த ஆவணப்படத்தில் பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் தமக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாமாகவே விபரிக்கின்றனர்.

எதிர்வரும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் வெளியிடப்பட இருக்கும் இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களில் பலர் இந்த ஆவணப்படத்திற்கு வாக்குமூலங்ளை வழங்கியுள்ளனர்.

அதில் பெற்றோலால் நனைக்கப்பட்ட பொலுத்தீன் பைகளால் முகங்களை மூடி தாக்ப்பட்டவர்களும், அசீட் ஊற்றி தாக்கப்பட்டவர்களும், நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களும், முள்ளுப்பற்றைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் உழவு இயந்திரம் மூலம் கட்டி இழுக்கப்பட்டவர்களும், வீட்டில் தங்கியிருந்தபோது பிள்ளைகளுக்கு முன்பாக தாயை நான்கு பேர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதை நேரில் பார்த்த பிள்ளைகள் என பலர் தமது உள்ளக்குமுறல்களை இந்த ஆவணப்படத்தில் வெளிப்டுத்தியுள்ளனர்.

ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/17019

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.