Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூக வலைத்தளங்களில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற கண் தெரியாத இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார்.

ஜோதி, பேஸ்புக் இணையதளத்தில் தனது குரலில் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார். இவரின் குரலை கேட்ட அனைவரு பாராட்டிவந்தனர்.

இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக தான் நடிக்கும் அடங்காதே படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளார்.

இந்த பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது ஜி.வி.பிரகாஷ் அவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்

http://www.manithan.com/news/20170225125298?ref=tamilwin-leftsidebar 

Edited by முனிவர் ஜீ

வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

ஜி வி பிரகாஷ்

ஒவ்வொருக்குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களை கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளைக் கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது.


தந்தையின் துணையில்லாமல்  தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஜோதி சென்னையை சேர்ந்தவர். குறையென்பதெல்லாம் உடலுக்கு மட்டும் தான். மனசுக்கு அல்ல...என்பதை ஜோதி பாடும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

ஜோதியிடம் பேசினோம்.

’’ எனக்கு எல்லாமே அம்மாவும், தாத்தா பாட்டியும் தான். சின்ன வயசுல இருந்தே எனக்குப் படிக்கப் பிடிக்கல. அதனால ஸ்கூலுக்குப் போகலை. அப்புறம் 13 வயசுல அடையார் , இசைக்கல்லூரியில சேர்த்துவிட்டாங்க. அங்க தான் மியூசிக் படிச்சிட்டு இருக்கேன். இப்ப எனக்கு 16 வயசாகுது. ஒரு நாள் சர்ச்சுல பாடினேன். அதைப்பாத்துட்டு எல்லாரும் பாராட்டினாங்க. அதுக்கப்புறம் ஒரு நிகழ்சியில பாட சொன்னாங்க. அப்படி நான் பாடுனதை வீடியோ எடுத்து ஆன்லைன்ல போட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் தான்  இப்ப என்னை ஜி.வி. பிரகாஷ் சார் பாட கூப்பிட்டிருக்கார்’’ என்னும் ஜோதியின் பேச்சில் இன்னும் மழலை மாறவில்லை.

’கண்ணம்மா...கண்ணம்மா அழகு பூஞ்சிலை’  என ’றெக்க’ திரைப்படப் பாடலை உணர்ந்து உள்வாங்கிப் பாடும் இவரின் குரல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அப்படி ஷேர் செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ்   ’அடங்காதே’ என்னும் திரைப்படத்தில் ஜோதிக்கு பாட வாய்ப்பளிக்கப் போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க, செம குஷியில் இருக்கிறார் ஜோதி.

‘’ஜோதி பிறந்த சமயம், பிரசவத்துல இருந்த சிக்கலால ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு அவளுக்கு பார்வை குறைபாடு உண்டாகிடுச்சு. இப்ப அவளால வெளிச்சத்தை மட்டும்  ரொம்ப லேசா உணர முடியுமே தவிர எதையுமே பார்க்க முடியாது. அவளுக்கு 16 வயசு ஆனாலும் அதுக்கான மனநிலையில இப்ப இல்ல. ஆனா என்னால இப்பவும் நம்ப முடியலை. அவளுக்குப் பாடும் சக்தி மட்டும் அபூர்வமா இருக்கு. இந்த நேரத்துல ஜோதிக்கு வாய்ப்பு கொடுத்த ஜி.வி.பிரகாஷ் சார், கூட இருந்து உதவி செஞ்ச எல்லாருக்கும் நன்றி சொல்லிக்குறேன்’’ என்னும் ஜோதியின் தாய் கலைச்செல்வி,  பேசும் போதே அவரையும் அறியாமல் வந்துவிழுகின்றன கண்ணீர்த்துளிகள்.

 இசைக்கலூரியில் கடந்த 3 ஆண்டுகளாக  படித்து வரும் ஜோதிக்கு அவரின் ஆசிரியர்கள் அனைவரும் பக்க பலமாய் இருந்து வருகிறார்கள். காலையில் எழுந்து குறைந்தது 3 மணி நேரமாவது இசையைப் பற்றிய குறிப்புகள் எடுத்துக் கொள்வதுடன், தன் தாயின் உதவியுடன் தான் பாடும் பாடலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி தனக்கு தெரிந்தவர்கள் பலரிடமும் கருத்து கேட்டு தன்னை மெருகேற்றிக் கொள்வதுடன், தன்னிடம் சந்தேகம் கேட்கும் பலருக்கும் அதை சொல்லிக் கொடுத்தும் வருகிறார் ஜோதி.
சின்னதான வண்ண துளி தான். அதில் தூரிகையைத் தோய்த்து ஓவியம் செய்வதில் தான் கலைஞனின் கைவண்ணம் இருக்கிறது. அந்த நயம் ஜோதிக்கு இயல்பாய் வாய்த்திருக்கிறது.

வாய்ப்பு என்கிற ஒன்று இல்லாமல் போனால் இங்கே யாரும் வெளிச்சத்துக்கு வந்துவிட முடியாது. ஜோதிக்கு வாய்ப்பளித்து அவர் வாழ்வில் ஜோதி ஏற்றும் இசையமைபாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் பாடிய 'கண்ணம்மா... கண்ணம்மா...' பாடல் தான் தற்போதைய வைரல்

 

http://www.vikatan.com/news/womens/81814-visually-impaired-girl-jothi-gets-a-chance-to-sing-in-gvprakash-music.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனில் ஏது பதர்   வாழ்த்துக்கள் சகோதரி 

  • கருத்துக்கள உறவுகள்

இளம் பாடகிக்கு வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...!

கண்கள் தான் ....உணர்வுகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று இதுவரை நினைத்திருந்தேன்!

இன்று தான் புரிந்தது///ல்குரல் தான் என்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.