Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பட்டினத்தார் பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினத்தார் பாடல்

பட்டினத்தார் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் மற்ற பக்கத்தில் வன்னிமைந்தனின் காம சாத்திரத்தை பாத்த பொழுது தான் வாழ்வின் உண்மையை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய பட்டினத்தார் பாடலை எழுத யோசித்தேன். பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார் சில நேரம் அவரது தனிப்பட்ட பாதிப்புகள் காரணமாக இருந்திருக்கலாம். அனாலும் அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்தவை அதில் முக்கியமானதொன்றை ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விபரிக்கும் ஒரு பாடலை படிக்க இலகுவாக்கி இங்கு தருகிறேன்.

1)தனதன தான தனதன தான

தந்ததனந்தன தந்ததனந்தன

தனதன தான தனதன தான

தந்ததனந்தன தந்ததனந்தன

ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும்

அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து

ஊறு சுரோணிதம் மீது கலந்து..

பொருள்.....அறியாமை குணமுடைய ஒரு ஆணும் பெண்ணும் தன்னந்தனியாய் இன்னபசுகத்தில் இணைந்து அறிவு மயங்கி ஆண்வழியாக வெளிவந்த சுக்கிலம் பெண்வழியாக வந்த சுரோணிதத்தில் கலந்து

2)பனியிலோர் பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து

பகுந்து திரண்டு பதுவமரும்பு கமடமிதென்று

பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று

பொருள்.....இரவரிலும் இருந்து வெளியேறிய உயிரணுக்கள் பனித்துளியில் ஒரு பாதியளவேயான சிறு துளி பெண்ணின் கருவிற் பாய்ந்து திரண்ட தாமரை மொட்டை போலவும் ஆமையை போல கண் உடல் வாய் காது கால் கை என்று வடிவம் பெற்று

3)உருவமுமாகி உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்

நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து

யோகமும் வாரமும் நாளும் அறிந்து..

பொருள்....வடிவம் பெற்று குழந்தை வளர்வதற்கு பத்து மாதம் நிறைந்து அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து வெளிவந்து பூமியில் விழ அதன் உறவினர்கள் நாள் கிழைமை பார்த்து சோதிடம் பாத்துபெயர் வைத்து

4)மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்திய

கைந்தகவிழ்ந்து மட மயில் கொங்கை அமுதமருந்தி

ஓர் அறிவு ஈரறிவாகி வளர்ந்து

பொருள்...பெண்கள் கூட்டம் ஏணையில் கிடத்தி உறங்க செய்ய பூமியில்தன் உடல் படும்படி தவழ்ந்தும் கவிழ்ந்தும் தாயாரின் முலை பாலை குடித்து ஒரு அறிவு இரண்டறிவாகபெருகுகிறது

தொடரும்............ ;)

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி சார் உங்கள் ஆன்மீகப்பணி தொடரட்டும் தொடரட்டும். ஏதும் வேண்டுதலா

பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பெண்களை அதிகமாகவே போட்டு தாக்கியிருக்கிறார்

அதனால் தான் நீங்களும் பட்டினத்தார் பாடல்களை களம் இறக்குவதில் மும்முரமா செயற்படுறிங்களா :D

  • கருத்துக்கள உறவுகள்

யோய் சாத்திரி பட்டை அடிக்கிற வயசில பட்டினத்தார் பாட்டு உமக்கு ஏன் ஓய்

:D:D :angry:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோய் சாத்திரி பட்டை அடிக்கிற வயசில பட்டினத்தார் பாட்டு உமக்கு ஏன் ஓய்

:lol::lol: :angry:

ஓய் புத்தா ஒட்டுமொத்தமாய் காய்ஞ்சு போய் இருக்கிற உமக்கு இதைப் பத்தி ஏதும் தெரியுமே?பேசாமல் போத்து மூடிக்கொண்டு கிடவும். :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே!தொடருங்கள்.வாழ்த்துக்களுடன

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் புத்தா ஒட்டுமொத்தமாய் காய்ஞ்சு போய் இருக்கிற உமக்கு இதைப் பத்தி ஏதும் தெரியுமே?பேசாமல் போத்து மூடிக்கொண்டு கிடவும். :angry:

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த புத்தன் காய்ந்து போனவன் 2000 ஆம் ஆண்டு வாழுற புத்தன் கசிப்பு காய்ச்சுற புத்தன்............பு.மு(புத்தனுக்கு முன்)

பு.பி(புத்தனுக்கு பின்)

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

:rolleyes::rolleyes::):):o:D:D:D:D:D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கலிகாலத்திலை இதென்னடா புது நாசமறுப்பாய் கிடக்கு?இனி உங்கை எல்லாம் கிளிஞ்சமாதிரித்தான்.

ஏற்கனவே கிழிந்து கிடக்கு எனி என்ன கிழிய கிடக்குது அது சரி மாப்பு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு............

:angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.