Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக

Featured Replies

கால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக

 

 

(ஆர்.யசி)

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன் இந்தப் பயணம் இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார்.  

dayan_jg.jpg

இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர்வை  தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த பயணம் சர்வதேச விசாரணையில் வந்து முடியும்.

இலங்கைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்கான இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விசயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை முன்னைய அரசாங்கம் எதிர்த்த  நிலையில் இந்த அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரேரணைக்கு மீள் இணக்கம் தெரிவித்து முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்ய நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயட்சிகின்றது.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கைக்கு இரண்டு ஆண்டுகால கால அவகாசம் வழங்கும் தீர்மானம் தொடர்பில் கருத்து முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/18223

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி அவர்களே நீங்கள் நல்லவரா கெட்டவரா - அல்லது நீங்கள் யார் பக்கம்?  உங்கள் சிந்தனை சரியானது தான். நாட்டின் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்டுவதை நீங்களும் விரும்பவில்லை போலிருக்கிறது உங்கள் பேச்சு. இன்னும் இரண்டு வருடங்களில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் ஆட்சி காலம் முடிவடைந்து அவர் சர்வதேசத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு வருமோ தெரியவில்லை. இன்னுமொருவர் ஜனாதிபதியாக  வந்து மாட்டிக்கொள்வது தவிர்க்கமுடியாது. அதற்குத்தானே இந்த அரசு இந்தப்பாடு பட்டது. அவர் மகிந்தவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கை சர்வதேச வலைக்குள் சிக்குண்டது உண்மை - இந்த அருமையான சந்தர்ப்பத்தை சொறி நாய் சண்டை போட்டு சொதப்பப் போவது தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

சேர்பியாவின் கசாப்புக்காரர் என்று அழைக்கப்பட்டவர், கிராமப் பரியாரியாக உருமாறியும் சர்வதேசம் இழுத்து வந்து நிறுத்தியது.

இரண்டாம் உலகயுத்த ஜேர்மனி அவலங்களுக்கு காரணமானவர்களை 50 ஆண்டுகள் கடந்த பின்னும் இழுத்து வந்து நிறுத்தினார்கள்.

இவர் சொல்வது சரி. தாம் ஆளுங்காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க, எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி தவனையை வாங்குகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.