Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

22 ஆம் திகதிக்குப் பின் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை: சூரியாராச்சி.

Featured Replies

22 ஆம் திகதிக்குப் பின் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது: சூரியாராச்சி.

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் புதுமைமிக்க யுத்தம் என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்ற பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் பின்னோக்கி ஓடிவிட்டார்களென்ற பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது.

உண்மையிலேயே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது மேற்கண்டவாறான தாக்குதல்களை மேற்கொண்டு தென்பகுதியில் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அது ஏன்? எதற்காக? என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம்.

அத்தோடு, புலிகளுடன் யார், யார்நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்துவோம். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குப் பின்னர் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது

நாட்டைச் சீரழித்து மக்கள் எதிர்பார்ப்புகளை சிதறடித்து ஸ்திரமில்லா நிலைமையை உருவாக்கி நெருக்கடியில் தள்ளிய பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்.

நாட்டின் மொத்த செலவின் 60 வீதமான பொறுப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ளார். உலகில் எங்கும் இதுபோன்ற நிலைமை இல்லை.

ஜனாதிபதி என்ற தனிநபரின் கீழ் 7 அமைச்சுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு உதவிகளுடன் செயல்படும் 22 திட்டங்கள் உட்பட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படாத 27 நிறுவனங்களும் உள்ளன. உலகில் இவ்வாறானதொரு நிலைமை எங்கும் இல்லை.

நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்த நிறுவனங்களின் ஒன்றான தனியார்மயப்படுத்தலைத் தடுக்கும் பேர்க் நிறுவனத்தின் கீழுள்ள ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை எனக்குத் தெரியாமல் கேள்விக் கோரலை பசில் ராஜபக்ஷவே நடத்தினார்.

அவசரகால சட்டத்திற்கு வாக்களிக்கவில்லையென எம் மீது குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை. அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலரிமாளிகைக்கு வரச்சொன்ன ஜனாதிபதி பல மணிநேரம் கழித்து அதனை இரத்துச் செய்தார். இதனால், மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தாமதமானது. இதுதான் உண்மை. அதேநேரம், 27 அரசாங்க உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், அதனை சேறு பூச பயன்படுத்துவது பிழையான செயலாகும்.

எமது தலைவரை கோதாபயவோ, பசில் ராஜபக்ஷவோ ஜனாதிபதியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டும். தற்போது ஜனாதிபதியின் உரைகள் பலவீனமாகிப் போய்விட்டன. ஒருபோதும் அவர் தலைமையில் அமைச்சர் பதவியை பெறமாட்டேனென்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி எம்.பி. தெரிவித்தார்.

-Tamilwin-

Edited by யாழ்வினோ

உது கெதியிலை நடக்கத்தான் போகுது!!! யாருக்குத் தெரியும் ஏற்கனவே போட்டுட்டாங்களோ தெரியாது???? :D

சிங்களவங்களுக்கு உந்தச் சொறி கழுணாவின் பெயர் மட்டும் போதுமானது!!! மற்றும் பிள்ளையான் மாதிரி நாலு இருக்குத்தானே கிழக்கை ஒரேயடியாக விடுவிப்பதற்கு!!!!! :D

கருணா ஒரு கருவேப்பிலை. தேவைக்காக மட்டும் பாவிப்பது

  • கருத்துக்கள உறவுகள்

உதைத்தானே நானும் சொன்னேன்

உப்பிடியே டக்கிலசுக்கு ஆனந்த சக்கடத்தாருக்கும் ஒவ்வொரு திகதிகள் இருக்காமோ?

காலம் கனிந்து வரும் பொழுது எல்லாம் எவ்வளவு சுகமாகுது. தமிழன் உண்மையா அளவுக்கு அதிகமாக புண்ணியம் செய்திருக்கிறான். நினைச்சாலே பொறாமையா இருக்கு.

அப்ப பத்து-மினியின் எதிர்காலம்? டக்குவின் மொகேசுவரி கொடுத்து வைத்தவள்! :D:D:o

அப்படி எதுவுமே நடக்காது. கருணா வினை விட்டால் கிழக்கில் நட்டாற்றில் இராணுவத்தினர கைவிட்டதாக கருத இடமுண்டு. தற்கொலைக்கு ஒப்பானது.

ஆனால் சிங்களவன் என்பவன் தமிழனை ரொய்லட் ருசு போலத்தான் கடைசியில் உபயோகிப்பான். இப்ப புலிகள் உவ்வளவு உயரத்தில் இருப்பதால், அவர்களுக்கு இப்ப உடனடிய்யாக கருணாவையோ, டக்கிளஸையோ போடவேண்டிய தேவை இல்லை. அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் அப்படியான சூழலில் ஓடி வந்து செற்றிலாகத்தான் கருனா அவுஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் ஒரு பொரிய தேசத்தையே வேண்டி விட்டுள்ளார் என்று ஒரு கதை உலாத்துகிறது. அவன் என்ன தமிழனா கொக்கா. எப்படி கூட்டி கழிச்சு பார்த்தாலும் கருணா புலிகளுக்கு எனிமேல் ஒரு அரிகண்டமும் கொடுக்காம இங்கால செட்டில் பண்ணி விடுவார் என்று ஒரு மட்டக்களப்பு தமிழ் நூல் ஆசிரியர் ஒருவர் கூறினார்.

புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்போர் யாரென்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம்

ஸ்ரீபதி சூரியாராச்சி கூறுகிறார்

-ப.பன்னீர்செல்வம்-

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் `புதுமைமிக்க யுத்தம்' என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்ற பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் பின்னோக்கி ஓடிவிட்டார்களென்ற பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது.

உண்மையிலேயே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது மேற்கண்டவாறான தாக்குதல்களை மேற்கொண்டு தென்பகுதியில் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அது ஏன்? எதற்காக? என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம்.

அத்தோடு, புலிகளுடன் யார், யார்நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றனறென்பதையும

Edited by Iraivan

அப்ப நிறையக் KODDIYA கள் உள்ளுக்க இருக்குது.

புலிகள் என்றால் மக்கள். மக்கள் என்றால் KODDIYA க்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
எதிர்வரும் 22 ஆம் திகதிக்குப் பின்னர் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்

கருணாவை கொலை செய்ய இலங்கையரசு திட்டமிட்டிருக்கின்றது போலிருக்கே! ஒன்றாக 20 வருடம் போராளியாக இருந்து, அந்த இயக்கத்திற்கே துரோகம் செய்தால், தனக்கு நாளைக்கு கருணா துரோகம் செய்யமாட்டார் என்று சிங்கள அரசு நம்பப் போவதில்லை. துரோகிகளின் நிலமையை உலகம் இவ்வாறு தான் கையாண்டிருக்கின்றது. இந்த நிலையிலாவது தன் தப்பை உணரும் சிந்தனையாவது அவருககு வருமா?

இருக்கும். செய்தி வெளியிட்டாயிற்று. இனி போஸ்டர் அடிக்க வேணும்.

அதையும் அரசாங்கமே அடிச்சுக் கொடுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.