Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்?

Featured Replies

ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்?
 
Tamil_News_large_1748394_318_219.jpg
 

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ., கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜிமுன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார் என்பதை உறுதி செய்த, டாக்டர் பாலாஜிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியதற்கான, ஆவணமும் சிக்கியதாக பரவிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1748394

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

 

 
 
letter123_3152764f.jpg
 
 
 

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர் கொடுத் தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய ஹோட்டல் கட்டணம்தான்’’ என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி தெரிவித் தார்.

மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தஞ்சாவூர், அரவக் குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளர்களின் படிவம் -ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக அவரு டைய பெருவிரல் ரேகை (கை நாட்டு) பதிவு செய்யப் பட்டிருந்தது.

இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், பெரும் பரபரப் பையும் ஏற்படுத்தியது. இதை யடுத்து ஜெயலலிதாவிடம் பெரு விரல் ரேகையை பதிவு செய்த சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி கூறும் போது, ‘‘ஜெயலலிதாவின் கையில் மருந்துகள் செலுத்தப்படுவதால் கடும் வலி இருக்கிறது. அவரால் கையெழுத்து போட முடியவில்லை. அதனால், அவரிடம் பெருவிரல் ரேகை வாங்கப்பட்டது. ஜெயலலிதா சுயநினைவோடுதான் தன்னுடைய பெருவிரல் ரேகையை பதிவு செய்தார்’’ என்று தெரிவித்தார்.

வருமானவரி சோதனை

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சமக தலைவர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி வீடு உட்பட தமிழகம் முழுவதும் 55 இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது ரூ.4.50 கோடி கைப்பற்றப்பட்டது.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி யில் உள்ள 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 (85 சதவீதம்) வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.89 கோடியே 65 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை வருமானவரித் துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட அமைச்சர்களின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

மற்றொரு ஆவணத்தில் 2016-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை வைத்து, ‘ஜெயலலிதாவின் பெரு விரல் ரேகையை பதிவு செய்தவர் டாக்டர் பாலாஜி. அதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப் பட்டுள்ளது’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை டாக்டர் பாலாஜி மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர் தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அக்டோபர் 23-ம் தேதி 4-வது முறையாக வந்தபோது, அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால், அவரை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.

நவம்பர் 2-ம் தேதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந் தார். அவர் தங்கியதற்கான ஹோட் டல் கட்டணத்தை நவம்பர் 1-ம் தேதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரோ, ‘நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான் தங்கச் சொல்லியிருந்தோம். அவர் ஏன் தாஜ் கோரமண்டலில் தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த முடியாது’ என்று தெரிவித்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத் துக்கு கொண்டு சென்றேன். அமைச் சர் உடனடியாக தனது உதவியா ளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை அமைச்சரின் உதவி யாளர் கொண்டு சென்றுவிட்டார்.

ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5 லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

இவ்வாறு டாக்டர் பாலாஜி தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெ-கைரேகை-பெற-பணம்-எதுவும்-வாங்கவில்லை-அமைச்சர்-தந்த-ரூ5-லட்சம்-லண்டன்-டாக்டரின்-ஹோட்டல்-கட்டணம்-அரசு-மருத்துவமனை-டாக்டர்-பாலாஜி-விளக்கம்/article9625781.ece?homepage=true

  • தொடங்கியவர்

விஜயபாஸ்கரிடம் பணம் பெற்றேனா? டாக்டர் பாலாஜி பரபரப்பு அறிக்கை!

 
 

DR_Subbaiya_16584.jpg

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலின்போது, ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவுசெய்த டாக்டர் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருந்து  5 லட்சம் ரூபாய் பெற்றதாக வந்த தகவலை மறுத்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, வேட்பாளர்களின் மனுவில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து தேவைப்பட்டது. சிகிச்சை எடுத்துவந்த ஜெயலலிதாவுக்கு கைகள் தூக்கமுடியாத நிலை இருந்தது. இதையடுத்து, அவரது கைரேகை, வேட்பு மனுவில் பதிவுசெய்யப்பட்டது. இந்தக் கைரேகையை அரசு மருத்துவர் பாலாஜி பதிவுசெய்தார். ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே சிறப்பு சிகிச்சை அளித்துவந்தார். இந்த நிலையில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனிடையே, கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இதில், முக்கிய ஆவணம் ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டது. அதில், கடந்த டிசம்பர் மாதம் யார் யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரமும், ஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவுசெய்த டாக்டர் பாலாஜிக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, லண்டன் டாக்டர் ரிச்சர்டு, ஹோட்டலில் தங்கிய செலவுக்கு டாக்டர் பாலாஜி 5 லட்ச ரூபாய் பணம் பெற்றதாகவும் செய்தி வெளியானது.

இந்த நிலையில், 5 லட்ச ரூபாய் விவகாரம் குறித்து அரசு டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில், கட்டணமாகவோ, வேறு யாரிடமிருந்தோ நான் பணம் ஏதும் பெறவில்லை. அமைச்சரிடம் இருந்து ஐந்து 5 லட்ச ரூபாய் பெற்று செலவு செய்ததாக வெளியான செய்தி தவறு. செய்தித்தாள்கள், ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளிவந்துள்ளன" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86102-neither-i-received-money-nor-i-gave-interview-to-media-doctor-balaji-denies-all-speculations-against-him.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த ரூ.5 லட்சம் யாருக்குப் போனது?- டாக்டர் பாலாஜி மறுப்பும்; 'தி இந்து' ஆடியோ ஆதாரமும்

 

 
செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பாபு ஆப்ரஹாம், ரிச்சர்ட் பீலேவுடன், டாக்டர் பாலாஜி | கோப்புப் படம்.
செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் பாபு ஆப்ரஹாம், ரிச்சர்ட் பீலேவுடன், டாக்டர் பாலாஜி | கோப்புப் படம்.
 
 

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை; அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்; அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம் என்ற தலைப்பில் 'தி இந்து' தமிழ் நாளிதழில் 10.04.2017 அன்று 8-ம் பக்கத்தில் செய்தி வெளியானது.

'தி இந்து' தமிழ் நாளிதழ் தரப்பில் இருந்து டாக்டர் பாலாஜியை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் விளக்கம் அளித்தார். 'தி இந்து' நாளிதழில் மட்டும் முதல் முறையாக பிரத்யேகமாக வெளியான டாக்டர் பாலாஜியின் விளக்கம் வருமாறு:

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, 4 முறை சென்னை வந்தார். முதல் 3 முறை அவர் தனியாக வந்தபோது, தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கினார். அக்டோபர் 23-ம் தேதி 4-வது முறையாக வந்தபோது, அவருடன் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால், அவரை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்குமாறு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. ஆனால், அவர் தாஜ் கோரமண்டல் ஹோட்டலிலேயே தங்கினார்.

நவம்பர் 2-ம் தேதி அதிகாலை அவர் லண்டன் புறப்பட இருந் தார். அவர் தங்கியதற்கான ஹோட்டல் கட்டணத்தை நவம்பர் 1-ம் தேதி செலுத்த வேண்டும். அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரோ, 'நாங்கள் ரெயின் ட்ரீ ஹோட்டலில் தான் தங்கச் சொல்லியிருந்தோம். அவர் ஏன் தாஜ் கோரமண்டலில் தங்கினார். அதனால், நாங்கள் கட்டணத்தை செலுத்த முடியாது' என்று தெரிவித்தனர்.

இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கவனத்துக்கு கொண்டு சென்றேன். அமைச்சர் உடனடியாக தனது உதவியாளரிடம் ரூ.5 லட்சத்தை கொடுத்து அனுப்பினார். ஹோட்டல் கட்டணம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்து 898 செலுத்தப்பட்டது. மீதமுள்ள பணத்தை அமைச்சரின் உதவியாளர் கொண்டு சென்றுவிட்டார். ஜெயலலிதாவிடம் ரேகை பதிவு செய்ததற்காக, நான் ரூ.5 லட்சம் வாங்கியதாக தேவையில்லாமல் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.

இந்நிலையில் பத்திரிகை மற்றும் செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டாக்டர் பி.பாலாஜி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலம் ரூ.5 லட்சம் கொடுத்ததாகவும், அந்த தொகையைக் கொண்டு ஹோட்டல் கட்டணத்தை செலுத்தியதாகவும் பல்வேறு பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் நேற்றும், இன்றும் செய்திகள் வெளியாகின. ஊடகங்களில் வெளியானது ஆதாரமற்ற தவறான செய்தி. இந்த பிரச்சினை தொடர்பாக நான் எந்த பத்திரிகைக்கும், ஊடகத்துக்கும் பேட்டி அளிக்கவில்லை. அந்த செய்தியில் கூறியிருப்பதைப் போல், நான் கட்டணமாகவோ அல்லது வேற எந்த வகையிலும் பணத்தையும் பெறவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்'' என்று டாக்டர் பி.பாலாஜி தெரிவித்துள்ளார்.

டாக்டர் பாலாஜி விளக்கம் அளித்த போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ உரையாடலை கேட்க:

 

http://tamil.thehindu.com/tamilnadu/அமைச்சர்-விஜயபாஸ்கர்-கொடுத்த-ரூ5-லட்சம்-யாருக்குப்-போனது-டாக்டர்-பாலாஜி-மறுப்பும்-தி-இந்து-ஆடியோ-ஆதாரமும்/article9630796.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.