Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

Featured Replies

இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

 

  • sengotaiyan_3155477g.jpg
     
  • PRESSMEETjpg_3155457g.jpg
     
 

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஐஎன்எஸ் சென்னை' கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக கப்பலில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (திங்கள்கிழமை) இரவு 26 அமைச்சர்கள் கூடி இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்த நிலையில் இன்று இவ்விவகாரத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

12.30 pm: தயக்கங்களை மறந்து மீண்டும் ஒன்றிணைவோம்- வைகைச் செல்வன்

11.50 am: போர்க்கப்பலை கூவத்தூர் விடுதியாக அதிமுக அம்மா அணியினர் மாற்றிவிட்டனர்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

11.45 am: ஓபிஎஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது என செங்கோட்டையன் தகவல்.

11.25 am: முதல்வருடனான ஆலோசனையை முடித்துக் கொண்டு டிடிவி.தினகரனை சந்தித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

11.15 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு. முன்னதாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோரும் சந்தித்தனர்.

11.10 am: மக்கள் வாக்களித்த இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்- டெல்லியில் தம்பிதுரை பேட்டி.

11.05 am: சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சிப் பிரச்சினையுடன் சேர்த்து பார்க்கக் கூடாது- தம்பிதுரை

11.05 am: கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றுகூடியிருப்பதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை: டி.ஜெயக்குமார்.

11.00 am: "இரு அணிகள் இணைவது குறித்து சசிகலா தரப்பில் குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

10.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு.

10.50 am: அதிமுக அம்மா அணியினரும் புரட்சித் தலைவி அம்மா அணியினரும் இன்று மாலை சந்திக்க வாய்ப்பு.

முந்தைய நிகழ்வுகள்:

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

வருமான வரி சோதனை முடிந்ததுமே, அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என டிடிவி தினகரனிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த தினகரன், "அவர் படித்தவர். இதுதொடர்பாக அவரே முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும், "இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். இதனைத் தொடர்ந்து திங்கள் இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றுமையாக செயல்பட்டு சின்னத்தை மீட்போம் எனக் கூறியிருந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/இரு-அணிகள்-இணைப்பு-விவகாரம்-தற்போதைய-நிலவரம்/article9645514.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

tsu.jpg

 

சுனாமி கினாமி வந்து அந்த ஜல்சா கப்பலை கவுக்கபடாதா..?  :cool:

  • தொடங்கியவர்

இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

 
 
  • ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: கே.வி.ஸ்ரீனிவாசன்
    ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: கே.வி.ஸ்ரீனிவாசன்
  • PRESSMEETjpg_3155457g.jpg
     
 

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முழுவீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'ஐஎன்எஸ் சென்னை' கடற்படை போர்க் கப்பலைப் பார்வையிடுவதற்காக கப்பலில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும், தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (திங்கள்கிழமை) இரவு 26 அமைச்சர்கள் கூடி இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசித்த நிலையில் இன்று இவ்விவகாரத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:

3.30 pm: சசிகலா குடும்பத்தை ஓபிஎஸ் எதிர்ப்பது அழகல்ல: ஓ.எஸ்.மணியன் கருத்து.

3.15 pm: இரட்டைஇலை துளிர்க்கட்டும். கொடும் வெப்பம் அழியட்டும். மிச்சமிருக்கிற நான்காண்டுகள் மட்டுமல்ல, இன்னும் பல நூறாண்டுகள் அதிமுக ஆட்சி தொடரட்டும் - வைகைச் செல்வன்.

2.45 pm: அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை. இணைப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இரு அணிகளும் ஒரே நாளில் கூட இணைய வாய்ப்பு உள்ளது- தம்பிதுரை

2.30 pm: சசிகலா, தினகரன் தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும் - வெற்றிவேல் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

2.00 pm: இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வேண்டும்- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி.

1.30 pm: பிரிந்த அணிகள் இணைவது தொடர்பான ஆலோசனை தினகரனுக்கு தெரிவிக்கப்படாமலேயே நடந்தது - சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

1.10 pm: ஓபிஎஸ் பழைய பல்லவியே பாடிக்கொண்டிருக்கிறார்- வைகைச் செல்வன் விமர்சனம்.

12.45 pm: எந்த ஒரு குடும்பத்தின் கையிலும் அதிமுக சென்றுவிடக் கூடாது. சசிகலா குடும்பத்தினர் தலையீடு கட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

http://tamil.thehindu.com/tamilnadu/இரு-அணிகள்-இணைப்பு-விவகாரம்-தற்போதைய-நிலவரம்/article9645514.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.