Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோடநாடு கொலையில் அறிவியல் ஆதாரம் சேகரிப்பு

Featured Replies

கோடநாடு கொலையில்
அறிவியல் ஆதாரம் சேகரிப்பு
 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

 
 

கோவை:''கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு விசாரணைக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்,'' என, நீலகிரி மாவட்ட, எஸ்.பி., முரளிரம்பா தெரிவித்தார்.

 

Tamil_News_large_176361420170504001300_318_219.jpg

நீலகிரி மாவட்டம், கோத்த கிரி, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சயான், 35, கடந்த 29ம் தேதி, குடும்பத்துடன் காரில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தான்.

கோவையில் சிகிச்சை பெற்றுவரும் சயானிடம் நீண்ட இழுபறிக்கு பின், கேரளா போலீசார் நேற்று முன்தினம் விசாரித்தனர். கோடநாடு கொலை தொடர்பாக, சயானிடம் எதுவும் கேட்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் கேரள போலீசார் விசாரணைக்கு அனுமதிக்கப் பட்ட னர். இந்நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்த, டிரைவர் கனகராஜின் வீட்டில் நீலகிரி எஸ்.பி., முரளிரம்பா நேற்று விசாரணை நடத்தினார். அதன் பின், அங்கிருந்து கிளம்பி நேற்று மதியம் கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ள,சயானிடம் விசாரணை நடந்தது.

மதியம், 1:05 மணியில் இருந்து, 3:15 மணி வரை விசாரணை நடந்தது.

அதன்பின், எஸ்.பி., முரளிரம்பா நிருபர்களிடம்
கூறியதாவது: சுயநினைவு திரும்பிய நிலையில், சயான் கொஞ்சம், கொஞ்சமாக பேச துவங்கியுள் ளான். அவனது உடல்நிலை தேறி வருகிறது. அவனால் சரியாக பேச முடியாததால், விசாரணை நடத்த முடியவில்லை. 'டிஸ்சார்ஜ்' செய்வது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பார்கள் .

வழக்கு விசாரணைக்கு தேவையான அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். சயான் மனைவிஉடலில் விபத்துக்கு முன் காயங்கள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும், விபத்து குறித்தும் கேரள போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, சயானின் மாமனார் சிவசங்கரனின் வீடு மதுக்கரை மார்க்கெட் பகுதி யில் உள்ளது. இந்த வீட்டில், நேற்று மதியம் தனிப்படை போலீசார், சோதனையில் ஈடுபட்டனர்.வீட்டில் விலை உயர்ந்த கடிகாரங்கள் அல்லது பொருட்கள் இருக்கிறதா என, தீவிர சோதனை நடத்திச் சென்றனர். சோதனையில் எதுவும் சிக்கவில்லை என, போலீசார் தெரிவித்தனர்.
 

யார் அந்த ஏழு பேர்?


சயான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு, விலை உயர்ந்த காரில், ஏழு பேர் கும்பல் வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், சயானை சந்தித்ததாகவும் தெரிகிறது. இவர்கள் யார், எதற்காக வந்து சந்தித்து சென்றனர் என, தெரிய வில்லை. இது குறித்த கேள்விக்கு போலீசார் பதிலளிக்க வில்லை. சயானின் பாதுகாப்புக்குவார்டு

 

முன், 'ஷிப்டு' முறையில், இரண்டு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
 

ஆத்துாரில் விசாரணை


கனகராஜ், கோடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி என்பதால்,
தனிப் படை போலீசாரும் விசாரித்து வருகின் றனர். நேற்று முன்தினம், இரவு, 9:20 மணியள வில், நீலகிரி மாவட்ட, எஸ்.பி., முரளிரம்பா தலைமை யிலான, 20க்கும் மேற்பட்ட போலீசார், ஆத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

கனகராஜ் விபத்தில் இறந்த வழக்கு தொடர் பான ஆவணங்களை பார்வையிட்டனர். நள்ளி ரவு, 12:30 மணிக்கு, விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். நேற்று, காலை, 8:10 மணிக்கு, போலீசார், ஆத்துாரி லுள்ள கனகராஜியின் சித்தி சரசு, அவரது மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்று, நேரில் விசாரணை நடத்தினர்.காலை, 8:40 மணி முதல், 9:30 மணி வரை, நீலகிரி எஸ்.பி., முரளிரம்பா தலைமை யிலான போலீசார், விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

கனகராஜ் ஓட்டி வந்த பைக் மீது, மோதிய கார் டிரைவர் ரபீக் என்பவரிடம், மூன்று மணி நேரம்
விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள், காரின் முன்பகுதியில் கிடந்த கனகராஜ் தலை முடி உள்ளிட்டவைகளை சேகரித்து சென்றனர். கனகராஜ் ஓட்டி வந்த பைக்கில் வேறு ஏதாவது கைரேகை பதிவுகள் உள்ளதா என, தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1763614

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியலிருந்து சுப்பரனான திகில் படங்கள் எடுக்கலாம்:mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.