Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா?

Featured Replies

உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுமா?

 

ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது  ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன்   காலா­வ­தி­யாகிப் போன  உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான  தேர்­தலை இன்னும்  நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு  செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும்  குற்­றச்­சாட்­டுக்­களில்  உண்­மை­யி­ருக்­கத்தான்  செய்­கி­றது.

 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை நடத்­தும்­படி அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் இம்­மாதம் 31 ஆம் திகதி முதல் நாடு­த­ழு­விய போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக, கடு­மை­யான எச்­ச­ரிக்­கை­யொன்றை அர­சாங்­கத்­துக்கு விடுத்­துள்­ள னர்.

முடி­யு­மானால் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­திக்­காட்­டட்டும் சவால் விடுக்­கிறேன் என முன்னாள் ஜனா­தி­பதி மே தினத்தைத் தொடர்ந்து சூளு­ரைத்து வரு­கிறார். அர­சா ங்­கத்தை வீட்­டுக்கு அனுப்பும் வேலைத்­திட்­டத்தை காலி முகத்­தி­ட­லி­லி­ருந்து ஆரம்­பித்­து­விட்டேன் எனவும் அவர் சவால் விடுத்­துள்ளார்.

கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலாக, உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாமல் இந்த அர­சாங்கம் காலத்தைக் கடத்திக் கொண்­டி­ருக்­கி­றது. கூட்டு எதி­ர­ணி­யினர் தங்­களைத் தோற்­க­டித்து விடு­வார்கள் என்ற பயத்தின் கார­ண­மா­கவே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களை அர­சாங்கம் நடத்­தாமல் இழுத்­த­டிப்பு செய்­கி­றது என்ற பிர­சா­ரத்தை, மஹிந்த அணி­யினர் மேற்­கொண்­டு ­வ­ரு­கின்­றனர்.

மஹிந்த அணியின் இச்­ச­வாலை ஏற்­பது போலவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது மே தின உரையில் எந்­த­வொரு தேர்­த­லையும் எதிர்­கொள்ள ஐ.தே.கட்சி தயா­ரா­க­வுள்­ளது என பதில் இறுத்­துள்ளார்.

ஜன­நா­யக வழிப்­பா­தையில் செல்­வ­தாக தம்­பட்­ட­ம­டிக்கும் எந்­த­வொரு நாடும் உரிய காலத்தில் தேர்­தலை நடத்தி முடிக்க வேண்­டி­யது ஜன­நா­யக கட­மை­யாகும். 2015 ஆம் ஆண்­டுடன் காலா­வ­தி­யாகிப் போன உள்­ளூ­ராட்சி மன்றங்களுக்கான தேர்­தலை இன்னும் நடத்­தாமல், பல்­வேறு கார­ணங்­களைக் காட்டி அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்­து­வ­ரு­கின்­றது என எதிர்த்­த­ரப்­பினர் கூறும் குற்­றச்­சாட்­டுக்­களில் உண்­மை­யி­ருக்­கத்தான் செய்­கி­றது.

2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் இடம் பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல், அதனைத் தொடர்ந்து நடை­பெற்ற பொதுத்­தேர்தல் என்­ப­வற்­றினால் 2015 ஆம் ஆண்டு கன­தி­யான ஆண்­டாகப் போயி­ருந்­தாலும் 2016 ஆம் ஆண்டில் கலைந்­து­போன, அனைத்து உள்­ளூ­ராட்சி அமைப்­பு­க­ளுக்கும் தேர்­தலை நடத்தி உள்­ளூ­ராட்சி மன்ற நிர்­வா­கத்தை அர­சாங்கம் செம்­மைப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அத்­துடன் மக்கள் பிர­தி­நி­திகள் கைகளில் ஒப்­ப­டைத்­தி­ருக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாத கார­ணத்­தினால் உள்­ளூ­ராட்சி மன்ற நிர்­வா­கத்தில் பல்­வேறு தடங்­கல்­களும் சிக்­கல்­களும் ஏற்­ப­டு­வ­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை நடத்­து­வதில் கால­தா­மதம் ஏற்­ப­டு­வ­தற்கு உள்­ளூ­ராட்சி, எல்லை நிர்­ணயம், வட்­டா­ர­வ­குப்­புக்கள் சீர­மைக்­கப்­ப­ட­வேண்டும். புதிய எல்லை நிர்­ண­யங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் நடத்­தப்­படும் என்ற வாக்­கு­று­தி­க­ளையும், விளம்­ப­ரங்­க­ளையும் அர­சாங்கம் சொல்­லி­வந்­த­போதும் எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் ஏற்­பட்ட கால­தா­மதங்கள், எல்லை நிர்­ண­யிப்பில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட குறை­பா­டுகள் கார­ண­மாக, புதிய உள்­ளூ­ராட்சி அமைப்பு எல்லை வகுப்புத் தொடர்பில் சிறு­பான்மைக் கட்­சிகள், சிறு கட்­சிகள் தமது கடு­மை­யான எதிர்ப்பைத் தெரி­வித்து வரு­வது தேர்­தலை நடத்த முடி­யா­மைக்­கு­ரிய கார­ணங்­க­ளாகக் கூறப்­பட்­டது.

இது தவிர, பழைய, விகி­தா­சார முறையில் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­களை நடத்த வேண்டும். புதிய முறையில் நடத்­தப்­படும் என்ற இழு­பறி நிலையும் இருந்து வரு­வது அவ­தா­னிக்­கக்­கூ­டிய விட­ய­மாகும். பெரும்­பான்­மை­யான கட்­சிகள் குறிப்­பாக, சிறு­பான்மைக் கட்­சிகள் சிறிய கட்­சிகள், சில பெரும்­கட்­சிகள் கூட, பழைய முறை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்­கையை விடுத்­து­ வந்­துள்­ளன.

இவ்­வாறு அவர்கள் தொங்கிக் கொண்டு நிற்­ப­தற்குக் காரணம் ஏலவே இருந்த பிர­தி­நி­தித்­து­வங்­களை புதிய தேர்தல் முறையில் தாங்கள் இழந்து விடுவோம் என்ற பயம் ஒரு­பு­றமும், பலம் பொருந்­திய தேசி­யக்­கட்­சி­க­ளோடு போட்டி போட­மு­டி­யாத நிலை­யொன்றை புதிய தேர்தல் முறையில் இழந்­து­விட நேரிடும் என்ற பயப்­பாடும் பழைய தேர்­தல்­மு­றையை தொடர்ந்து பேண­வேண்­டு­மென்­ப­தற்கு மூல­கா­ர­ணமாக இருக்­க­லா­மென்று கூறப்­ப­டு­கி­றது.

 எதி­ர­ணியினர் மிக நீண்­ட­கா­ல­மா­கவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை நடத்­த­ வலி­யு­றுத்தி வரு­கின்ற போதும், அர­சாங்கம் அக்­கறை காட்­டாமல் இருப்­ப­தற்கு பின்­ன­ணி­யாக பல கார­ணங்கள் இருக்­கின்­ற­போதும் எதி­ர­ணி­யினர் தங்­களைத் தோற்­க­டித்­து­வி­டு­வார்கள். இலங்­கை­யி­லுள்ள மிக பிர­தா­ன­மான உள்­ளூ­ராட்சி சபைகள் தங்கள் கைகளை விட்டு எதி­ர­ணியின் கைக­ளுக்கு மாறி­விடும் அவ்­வாறு மாறும் நிலை­யொன்று உரு­வா­கு­மாக இருந்தால் பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்தி மற்றும் நிர்­வாக முறை­களில் பாரிய நெருக்­க­டி­க­ளையும் சவால்­க­ளையும் சந்­திக்க வேண்டி நேரிடும் என்ற பயம் கார­ண­மா­கவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களை உரி­ய­கா­லத்தில் நடத்­தாமல் இழுத்­த­டிப்பு செய்­கின்­றார்கள் என்ற விமர்­ச­னமே அர­சாங்­கத்தின் முன் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கை­யி­லுள்ள 335 உள்­ளூ­ராட்சி சபை­களில் பெருந்­தொ­கை­யா­னவை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வசமே இருந்து வந்­துள்­ளது, வடக்கு, க்­கி­ழக்கில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஆளு­கைக்கு உட்­பட்ட உள்­ளூ­ராட்சி அதி­கா­ரங்கள் இருந்­து­வந்­துள்­ள­போதும் இம்­மா­கா­ணங்­க­ளிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் வசம் கணி­ச­மான உள்­ளூ­ராட்சி சபைகள் இருந்­துள்­ளன என்­பதும் தெரிந்த விடயம். உதா­ர­ண­மாக திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் 13 உள்­ளூ­ராட்சி சபைகள் இருந்த போதிலும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வசம், திரு­கோ­ண­மலை நக­ர­சபை, வெருகல் பிர­தேச சபை, உப்பு வெளி பிர­தேச சபை ஆகிய மூன்றும் தவிர்ந்த ஏனைய 10, சபை­களும் ஏதோ ஒரு வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் செல்­வாக்­குக்கு உட்­பட்­ட­தா­கவே இருந்­து­வந்­துள்­ளன. இதே ஆதிக்கம் அம்­பாறை மாவட்டம், வவு­னியா, மன்னார் ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் இருந்து வந்­துள்­ளது என்­பது மறை­மு­க­மான உண்மை.

இலங்­கையின் உள்­ளூ­ராட்சி அமைப்­புக்­களின் கட்­ட­மைப்பின் போக்கை சிறிது நோக்­கு­வோ­மாயின் உள்­ளூ­ராட்சி தேர்­தலை அர­சாங்கம் நடத்­து­வதில் காட்டும் இழுத்­த­டிப்­புக்­களை ஓர­ள­வுக்கு ஊகித்து அறிந்து கொள்ள முடியும். இலங்­கை­யி­லுள்ள உள்­ளூ­ராட்சி வடி­வங்கள் இவ்­வாறு கட்­ட­மைப்பு செய்­யப்­பட்­டுள்­ளன.

 

1) மாந­கர சபைகள் 23

2) நக­ர­ ச­பைகள் 41

3) பிர­தேச சபைகள் 271

 மொத்தம் 335

 

மாகாண அடிப்­ப­டையில் பார்ப்பின் அவற்றின் எண்­ணிக்­கை­ய­ளவு பின்­வரும் வகையில் காணப்­ப­டு­கி­றது.

1) மத்­திய மாகாணம் 43

2) கிழக்கு மாகாணம் 45

3) வட­மத்­திய மாகாணம் 26

4) வட மாகாணம் 34

5) சப்­ர­க­முவ மாகாணம் 29

6) தென் மாகாணம் 49

7) ஊவா மாகாணம் 28

8) மேல் மாகாணம் 48

9) வடமேல் மாகாணம் 33

 

2011 ஆம் ஆண்டு மூன்று கட்­ட­மாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. 17.03.2011, 23.07.2011 8.10.2011 ஆகிய மூன்று தினங்கள் நடத்­தப்­பட்­டன. நடத்­தப்­பட்ட இத்­தேர்­தல்­களில்

இலங்­கை­யி­லுள்ள 335, உள்­ளூ­ராட்சி சபை­களில் ¾ சபைகள் ஐக்­கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கீழ் இருந்து வந்துள்ளன. வாக்­க­ளிப்பு நிலை­களை நோக்­கு­கின்ற போதும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தல்­களில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, தேசிய அளவில் 56 வீத வாக்­கு­க­ளையும் ஐக்­கிய தேசியக் கட்சி 25 வீத வாக்­கு­க­ளையும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு 14 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இவ்­வா­றா­ன­தொரு முன் கணிப்­பின்­படி பார்க்­கின்ற போது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் ஒன்றை தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் வைக்க முற்­ப­டு­மாயின் அதன்­பெ­று­மா­னங்கள் எவ்­வாறு அமை­யு­மென்­பதே கேள்­வி­யாகும்.

2009 ஆம் ஆண்டு யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வந்­த­தாக பெரு­மைப்­பட்­டுக்­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அவர்கள் 2011 ஆம் ஆண்டு தேர்­தலை நடத்­திய போது இருந்த சாத­க­மான நிலை, யுத்த வெற்­றியைக் காரணம் காட்­டி­யது மாத்­தி­ர­மன்றி அவரின் அர­சாங்­கத்தின் செல்­வாக்குப் போக்­குகள், ஆதிக்­க­வல்­ல­மைகள் பெருந்­தொ­கை­யான உள்­ளூ­ராட்சி சபை­களை வெற்­றி­கொள்ள வைத்­தது.

ஆனால் இன்­றைய சூழ்­நி­லையைப் பார்க்­கின்­ற­போது, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு பிரிந்து மைத்­தி­ரி­யணி மஹிந்­த­அ­ணி­யென்ற பிரிவை உரு­வாக்கி தவிர்க்­க­மு­டி­யாத போட்டி நிலை­களை உரு­வாக்­கி­விட்­டி­ருக்­கி­றது. மஹிந்த தன்­னுடன் 50க்கு மேற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை வைத்­தி­ருக்­கிறேன் என்று சவால் விட்டுக் கொண்­டி­ருக்­கிறார். அது மட்­டு­மன்றி உள்­ளூ­ராட்சி தேர்தல் நடத்­தப்­ப­டு­மாயின் தன்­னு­டைய அணி தனித்து நின்று போட்­டி­யிட்டு சாதனை புரிந்து காட்­டு­வ­துடன் ஆளும் அர­சாங்­கத்­தினை செல்­லாக்­காசு ஆக்கிக் காட்­டுவேன் என்றும் சவால்­விட்ட வண்ணம் இருக்­கிறார்.

உண்­மையோ, பொய்யோ நடந்த மேதி­னத்தில் அவ­ரு­டைய செல்­வாக்கை உறு­திப்­ப­டுத்திக் காட்டும் வகையில் காலி முகத்­தி­டலில் லட்­சக்­க­ணக்­கான மக்கள் ஒன்று கூடி அவரின் மே தினத்­துக்கு வலுச்­சேர்த்தது மாத்­தி­ர­மின்றி தங்கள் ஆத­ர­வையும் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த நிகழ்­வா­னது தேசிய அர­சாங்­கத்தை நடத்திக் கொண்­டி­ருக்கும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணிக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் பேரி­டி­யாக, சூளு­ரைப்­பாக ஆகி­யி­ருக்­கி­றது என்­பது மறுக்­கப்­ப­ட­மு­டி­யாத ஒரு விட­ய­மாகும்.

அர­சாங்கம் தேர்­தலை நடத்த தயங்­கு­வ­தற்கு இன்­னு­மொரு உள்­முக கார­ண­மாக தெரி­வது, தேசிய அர­சாங்­கத்தை நடத்திக் கொண்­டி­ருக்கும் இரு பிர­தான கட்­சி­களும் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தாம், தனித்­த­னி­யா­கவே போட்­டி­யிட வேண்டும். போட்­டி­யிடப் போகின்­றோ­மென்று கூறிக் கொண்­டி­ருப்­பது. இதற்கு காரணம் இரு­கட்­சி­க­ளி­லு­முள்ள அமுக்கக் குழுக்கள். எங்கள் கட்­சி­களின் செல்­வாக்கு பெருக்­கப்­ப­ட­வேண்­டு­மாயின் தனித்­தன்மை பேணப்­பட வேண்­டு­மாயின் தனித்­த­னி­யா­கவே போட்­டி­யிட வேண்­டு­மென, விடாப்­பி­டி­யாக நிற்­பதை சுதந்­திரக் கூட்­ட­ணியின் மூத்த அமைச்­சர்­களும் உறுப்­பி­னர்­களும் வலி­யு­றுத்தி வரு­வதைக் காணு­கிறோம்.

என்­னதான் கூட்­ட­ர­சாங்கம் ஒப்­புக்கு நடத்­தப்­பட்­டாலும் இரு­கட்­சி­களும் தங்­க­ளது தனித்­தன்­மையை கைவி­டவோ இழக்­கவோ தயா­ரில்­லாத போட்டி நிலையே, பனிப்­போ­ராக நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது.

இவ்­வ­கை­யான சூழ்­நிலை தற்­போ­தைய ஆளும் அர­சாங்­கத்­துக்கு ஒரு இரண்டும் கெட்டான் நிலை­யையே கொண்­டு­வந்­தி­ருக்­கி­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­கத்தில் கூட்டுக் கட்­சி­யாக இருந்து வரு­கிற போதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது கட்சி ஆளு­மையை, எல்­லாத்­து­றை­க­ளிலும் செலுத்தி அடுத்த கட்­டத்­துக்­கான நகர்வை மேற்­கொண்­டு­வ­ரு­கிறார் என மைத்­திரி அணி­யினர் குற்றம் சுமத்திக் கொண்­டே­யி­ருக்­கி­றார்கள். இதே­வேளை, 1994 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள நிலை­மை­களை ஆராய்ந்து பார்க்­கின்ற போது, ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்கு வங்­கி தொடர்ச்­சி­யாக வீழ்ந்து வரு­வது தொடர்பில் கட்­சியின் கூட்­டங்­க­ளிலும் மா­நா­டு­க­ளிலும் அதி­ருப்தி தெரி­வித்து வந்த நிலையில் தலை­மைத்­து­வத்தின் மீது அதி­ருப்தி கொண்ட ஒரு நிலையும் முன்பு இருந்­துள்­ளது.

ஆனால் தற்­போ­தைய தலை­மைத்­து­வத்தின் ஆளுமை மிக்க, செயல்­மு­றைகள் மீட்டு எடுக்­கப்­பட்­டுள்­ளது என நம்­பிக்கை தெரி­விக்­கப்­ப­டு­கின்ற பின்­ன­ணியில் பார்க்­கின்ற போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது தனது செல்­வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் காட்டும் வகையில் எதிர்­கொள்ளும் உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளையும் மாகா­ண­சபை தேர்­தல்­க­ளையும் திட்­ட­மிட வேண்­டிய தேவை உரு­வா­கி­யுள்­ளது. இதில் காணக்­கூ­டிய சங்­க­ட­மென்ன வெனில் தேசிய அர­சாங்­கத்தை நடத்திக் கொண்டு தேசிய அர­சாங்­கத்தை விமர்­சிக்கும் சூழ்­நி­லை­யொன்றை ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் கைக்­கொள்ள முடி­யாது, அதே­போன்று மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­திரக் கூட்­ட­ணியும் செயற்­பட முடி­யாது.

இவ்­விரு கட்­சி­களின் பொது எதி­ரி­யாகப் பார்க்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக, மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதி­ர­ணி­யி­னரே காணப்­ப­டு­கி­றார்கள். உர­லுக்கு ஒரு பக்க இடி மத்­த­ளத்­துக்கு இரு­பக்க இடி­யென்­பது போல், மஹிந்த அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியையும் மறுபுறம் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, ஆட்சியாளர்களை சமாளிக்க வேண்டிய அரசியல் ஆடுகளமாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தலும் மாகாணசபை தேர்தலும் இருக்கப் போகிறது.

மாகாணசபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைகளின் தேர்தல், சர்வசன வாக்கெடுப்பு என்ற மூன்று தேர்தல்களும் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதில் எதை முந்தி நடத்துவது, எதை பிந்தி நடத்துவது என்ற சம போராட்டத்தில் இலங்கையரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்ற விடயம் யாவராலும் புரிந்து கொள்ளப்படுகிற விடயம். அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்ற அழுத்தம் உள்நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் பலப்பட்டுவருகிற நிலையில் சர்வசன வாக்கெடுப்பை முதலில் நடத்துவது என அரசு திட்டமிட்டாலும் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் அனர்த்தங்கள் அதிகமென்பதை அரசாங்கம் புரியாமலில்லை. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முதல் கட்டமாக நடத்தப்படுமாயின் அதனால் ஏற்படக்கூடிய பாதக – சாதக விளைவுகள் அரசியல் தீர்வு விடயத்தை பாதிக்கும் என்ற யதார்த்தமும் அரசை கதிகலங்க வைக்கிறது. இதேவேளை எதிர்வரும் செப்டெம்பருடன் காலாவதியாகிப்போகும் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலையும் இவ்வருட இறுதிக்குள் நடத்தியே தீர வேண்டும். எவ்வகை, எவ்வழியால் பார்ப்பினும் அரசாங்கம் எதிரணியின் சவால்களையும் சூளுரைப்பையும் சமாளிக்கும் உபாயங்களை உச்சளவில் வகுக்க வேண்டியது அவசியமே.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-13#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.