Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணர்ச்சிகரமாகச் செய்தார்கள் வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை

Featured Replies

உணர்ச்சிகரமாகச் செய்தார்கள் வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை

 

சசிகலா சிறைக்குச் செல்வார் என்றார், சென்றார். இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்றார். முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிப்போகும் என்றார் நிறுத்தப்பட்டது. தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே சொல்லும் தீர்க்கதரிசியான பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைச் சந்தித்தபோது…

 

நீங்கள் சொல்வது எல்லாம் நடந்து வருகிறது என்கிறார்கள். தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும்? 

தமிழக சட்டசபைக்கு 2021 க்கு முன்னரே தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் மீது பல ஊழல் வழக்குகள் இருக்கின்றன. முதல்வர் மேலேயே விசாரணை வருகிறது!

 

இரண்டு திராவிடக் கட்சிகளையும் தொடர்ந்து தாக்குகிறீர்கள். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் மௌனத்தால் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடச் சூழலைப் பா.ஜ.க.வுக்குச் சாதகமாக மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா? 

 

நிச்சயமாக இது வெற்றிடம் இல்லை, எங்கள் வெற்றியின் இடம், ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்றும் அந்த மாற்றத்துக்கான காலம் இதுதான் என்றும் மக்கள் நினைக்கிறார்கள். காமராஜர் ஆட்சி எப்படி இருந்தது என்று எங்கள் அப்பா அடிக்கடி சொல்லுவார். பள்ளிகள் இல்லாத ஊர்களில் பள்ளிகள் கட்டி, தொழிற்சாலைகள் இல்லாத ஊரில் தொழிற்சாலைகள் அமைத்து, அணைகள் இல்லாத ஊரில் அணைகள் அமைத்து, சிறப்பாக ஆட்சி செய்யும் மோடியை இன்றைய காமராஜராகத் தான் நான் பார்க்கிறேன்!

இன்று விவசாயிகள் பிரச்சினைக்காகச் சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஏதாவது புதிய அணைகள் கட்டியிருக்கிறார்களா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் தகுதியான வளர்ச்சியைத் தமிழகம் அடையவில்லை. ஆனால் அந்த வளர்ச்சி திராவிடக் கட்சித் தலைவர்கள் வீட்டில் இருக்கிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது!

ஆனால் குட்டிக்கரணம் அடித்தாலும் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது என்கிறாரே ஸ்டாலின்? 

 ஸ்டாலினுக்குப் பா.ஜ.க.வைப் பார்த்துப் பயம். அது தான் அவர் அவர் பேச்சில் வெளிப்படுகிறது. தமிழ்நாடு ஒன்றும் ஸ்டாலினுக்காக மட்டும் என்று குத்தகைக்கு விடப்படவில்லை. 1982 இல் இந்தியா முழுக்க இரண்டே இரண்டு பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்ற பா.ஜ.க., இன்றைக்கு நிகரான எதிரியே இல்லாத தேசியக் கட்சியாக வளர்ந்துள்ளது. தமிழகத்திலும் அப்படி வளருவோம். ஆளுங்கட்சியாக அமர்வோம். இது எங்களுக்கான காலம்!

 

அ.தி.மு.க.ஓ.பி.எஸ். அணியை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்று இப்போது வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே? 

அது உண்மையானால் நாங்கள் ஏன் கங்கை அமரனை ஆர்.கே.நகரில் வேட்பாளராக நிறுத்த வேண்டும்? வாசன்போல் எங்களாலும் நேரடியாகக் கூட்டணியில் சேர முடியாதா? பின்னால் இருந்து இயக்க என்ன அவசியம் இருக்கு? அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்!

 

ஆனால் வருமான வரித்துறைச் சோதனைகள் தொடர்ந்து சசிகலா தரப்பு ஆட்களை குறி வைத்தே நடத்தப்படுகிறதே?

ரெட்டி யாரு? ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது எல்லோருக்குமே தெரியுமே? தவறு யார் செய்திருக்கிறார்களோ அவர்கள் மீதுதானே சோதனை வரும்? டாக்டர் கீதாலட்சுமி மேல் தப்பு இல்லையா? விஜய பாஸ்கர் மீது தப்பு இல்லையா? அவர்கள் இடங்களில் சோதனை செய்வதற்கான வலுவான காரணங்கள் கிடைத்து அதனடிப்படையில்தான் சோதனை செய்திருப்பார்கள்!

 

ஈஷா மையம் சிலை திறப்புக்குக் கோவைக்கே வருகிறார் பிரதமர். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியிலேயே போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்திக்காமல் தவிர்க்கிறாரே ஏன்?

எல்லாவற்றிற்கும் தலைமையானவரைத்தான் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. விவசாயிகளை அமைச்சர்கள், பொன்.ராதாகிருஷ்ணனும் அருண் ஜெட்லியும் பார்த்திருக்கிறார்கள். அருண் ஜெட்லி விவசாய கடன்களை இரத்துச் செய்வது மாநில அரசின் பிரச்சினை என்று தெளிவாகச் சொல்லிவிட்டார். அதன் பின்னரும் ஏன் விவசாயிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள்..?

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ராகுல்காந்தி வந்தாரே, அவரிடம் காங்கிரஸ் ஆட்சியில் ஏன் நதிகளை இணைக்கவில்லை? கர்நாடகத்திலிருந்து ஏன் தண்ணீர் விடவில்லை என்று கேட்டிருக்கலாமே?அப்படிக் கேட்டிருந்தால் உண்மையாகப் போராடுகிறார்கள் என்று நம்பியிருப்போம். ஆனால் பிரதமரை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்?

சரி, இதற்குமுன் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எத்தனை முறை போய்ப் பார்த்தார்கள்? விவசாயிகள் பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகத்தில் 50 இலட்சம் பேர் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் வெறும் 13 ஆயிரம் பேர்தான் பதிவாகியுள்ளார்கள். அதற்கு மாநில அரசுதான் காரணம். இது போராடும் விவசாயிகளுக்குத் தெரியாதா?

ஏன் மீண்டும் இந்தித் திணிப்பு? 

இந்தித் திணிப்பு என்பதே கிடையாது. கல்லிலும் சரி, கல்வியிலும் சரி, இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்க அப்பா எனக்குத் தமிழிசை என்று பெயர் வைத்தார். நான் 12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில்தான் படித்தேன். ஆனால் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சித் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தி படிக்க வைத்தார்கள். ஆங்கிலம் படிக்க வைத்தார்கள். அவர்களுக்கு எங்களைக் குறைசொல்ல என்ன நியாயம் இருக்கிறது? கேரளாவில் எல்லாப் பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம் என்று உத்தரவு போட்டுள்ளார்கள். 50 வருடம் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளால் இப்படியொரு உத்தரவைப் போட முடிந்ததா? தமிழ் படித்தால் தான்மேற்படிப்பைப் படிக்க முடியும் என்கிற சூழ்நிலையை ஏன் இவர்கள் உருவாக்கவில்லை?

தமிழ் தமிழ் என்று சொல்லித் தமிழை வளர்க்காமல் விட்டதுபோல், சமூக நீதியையும் இவர்கள் வளர்க்கவில்லை. தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறன. நடுரோட்டில் கொல்லப்படுகிறார்கள், தண்டவாளங்களில் வெட்டி வீசப்படுகிறார்கள், எந்தச் சமூக நீதியை இவர்கள் கொண்டு வந்தார்கள்?

திராவிடக் கட்சியினர் அரசியலை உணர்ச்சிகரமாகச் செய்தார்களே தவிர, வளர்ச்சிகரமாகச் செய்யவில்லை. எங்களுக்குத் தமிழகத்தை ஆளும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் 50 வருடங்கள் இவர்கள் செய்யாததை எல்லாம் நாங்கள் செய்வோம். தமிழை ஆட்சி மொழி ஆக்குவோம். தமிழைக் கல்லில் மட்டும் அல்ல, கல்வியிலும் கொண்டுவருவோம்! என்றார் தமிழிசை.

 

(சந்திப்பின் சிந்திப்பில் சர்பனா, வாசிப்பின் நேசிப்பில் ஷண்)

தகவல்கள்: ஷண்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-27#page-8

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் பெறகு பார்க்கலாம் 
இப்போதைக்கு அந்த கல்லில் உள்ள ஹிந்தி திணிப்பை 
உங்களால் பாடி என்றாலும் அகற்றமுடியாத தமிழிசை ?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.