Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் நவீன கப்பல்

Featured Replies

ஆயுதக்கடத்தலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் நவீன கப்பல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு பயங்கர ஆயுதங்கள் கடத்தப்பட்டமை கண்டபிடிக்கப்பட்டதையடுத்து தமிழக கடலோர கண்காணிப்பு பணியை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக நிலத்திலும், நீரிலும் செல்லும் நவீன கப்பலின் சோதனை ஓட்டம் சென்னையில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.

இதற்காக சென்னையில் உள்ள இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் விசாகப்பட்டினத்தில் இருந்து "ஏசிவிஎச்183 என்ற நவீன கப்பலை வரவழைத்துள்ளனர்.

இக்கப்பல் நீரிலும், நிலத்திலும் இயங்கும் திறன் படைத்தது. ஒரு மணி நேரத்திற்கு 300 மைல் வேகத்தில் செல்லும் திறன் உடையது. போர்க் கப்பலை போன்றே நவீன ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 20 பேர் இதில் பணியாற்றுகின்றனர்.

நேற்றுமுன்தினம் காலை கடலோர பாதுகாப்பு படையினர் இந்தக் கப்பலை ரகசிய இடத்தில் வைத்து நிலத்திலும், கடலிலும் சோதனை ஓட்டம் நடத்தினர். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இருந்த தால், மாலையே கப்பல் புறப்பட்டுச் சென் றது. இந்த நவீனக் கப்பலை பயன்படுத்துவதன் மூலம் ஆயுதக்கடத்தலைக் கட்டுப்படத்த முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • தொடங்கியவர்

தண்ணீருக்குக் கீழேயும் நிலந்தானுண்டு. எனவே ஒருவேளை தாக்குதலால்

நீருக்குள்ளே அமிழ்ந்து அங்கே ஓடுமோ தெரியாது.

பிச்சைக்கார நாடு சிறீ லங்காவே ஆயுதங்களைக் காட்டி படங்காட்டிக் கொண்டு இருக்கும்போது, வல்லரசான இந்தியா இப்படி பூச்சாண்டி காட்டுவதில் வியப்பு ஏது? இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழீழத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக பார்ப்பது தவறானதும் முட்டாள்தனமானதும் ஆகும். ஒரு வல்லரசு நாடு என்றவகையில் இந்தியாவை நோக்கும் போது அதற்கு தனது படைக்கட்டமைப்புக்களை நவீன ரீதியில் காலத்திற்குக் காலம் கட்டி எழுப்புவது இன்றியமையாத ஒன்றாகும். இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகள் கூட உள்ளது. இதற்காக இவற்றை தமிழீழத்திற்கு எதிராக இந்தியா பயன்படுத்தும் என நினைத்து பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறதா?

இதையெல்லாம் காட்டி பூச்சாண்டி காட்ட பாக்கிறாங்க, சிங்களம் பூச்சாண்டி காட்டி களைச்சுப் போச்சு, இப்போ இவங்கள் காட்டுறாங்களாக்கும்....?

இது hoovercraft போன்றது என்றால் அது ஏற்கனவே சிறீலங்காவிடமும் இருக்கிறது. பிரித்தானியத் தயாரிப்பு அது.

ஆனால் மேற்குறிப்பிட்டது போன்று வெள்ளோட்டம் பரீட்சாத்த ஓட்டம் பற்றி இருப்பதால் இந்தியாவின் சொந்த தயாரிப்பு அல்லது licensed j-v போன்று உள்ளது.

தண்ணீல ஓடினால் அது கப்பல் நிலத்தில ஓடினால் அது கார். இது என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் தயாரிப்பு

post-2971-1172494389_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதொனூம் பெரிய வேலையெண்டு ஒன்றும் இல்லை. ஒரு ரோலர் செயின் அடிசன்லா தேவை அல்லது ரயர் ( லிப்ட் பண்ணக்கூடியத்கன் அன்மைப்பு) படையப்பா காரில வருர அந்த டோர் லிப்ட் மெக்கானிசம். வெரி வெரி சிம்பிள். இதுக்கு எல்லாம் என்னுடைய கௌடஞ்சு கொண்டு போகிற டொல்பின் ரக வாடர் ஜெட் ஒன்றை புலிகள் அங்கால செய்தா கடலுக்குள்ளால் அணக்கொண்டா பாம்பு போல லபக் எண்டு 45 பாகை எறியத்தில தொடலிவேகத்துடன் எறிந்து பின்பு பிளஏனில இறங்கிற போது தொழிறபடும் பிலப் மெக்கானிகல் சிஸ்டம் இருந்தா வாகத்தினை குறைத்து உள்ளூரில புதிதா செய்ய முடியுமான் குறுந்தூர ஏவுகணை கொண்டு ஒரு போடு போட்டா மவன் துண்டைக்காணோம் துணியைகாணோம் என்று ஓட வைக்க தமிழ் பொறியியல்மார்களாலும் முடியும். இன்கால இந்தியனையே சப்பி துப்பி விளுங்கிறமுங்க நீங்க போய் இதுகளை பெரிசா எடுக்கிறீங்க. புலிகள் 1986 லில கார் எஞ் ஜினை (வாக்ஸ்வகன்) பாவித்து பிலேன் எல்லோ செய்யவெளிக்கிட்டவை குண்டு கொண்டு போய் கோட்டையில இறக்க. அப்ப அவர்கள் இன்று 21 வருடத்துக்கு பிறகு( கிட்டு, சங்கர்) இல்லையெண்டாலும் நினைச்சா நடத்திமுடிப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆக கொம்பிரசர்பிளேட் வெட்டுவதும், ரேபைன் பிளேட் வெட்டுவதும் தான் ஸ்கில் வேணும். மற்றும் படி ஒண்டுமேயிலை. :blink:

  • தொடங்கியவர்

பிச்சைக்கார நாடு சிறீ லங்காவே ஆயுதங்களைக் காட்டி படங்காட்டிக் கொண்டு இருக்கும்போது, வல்லரசான இந்தியா இப்படி பூச்சாண்டி காட்டுவதில் வியப்பு ஏது? இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழீழத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக பார்ப்பது தவறானதும் முட்டாள்தனமானதும் ஆகும். ஒரு வல்லரசு நாடு என்றவகையில் இந்தியாவை நோக்கும் போது அதற்கு தனது படைக்கட்டமைப்புக்களை நவீன ரீதியில் காலத்திற்குக் காலம் கட்டி எழுப்புவது இன்றியமையாத ஒன்றாகும். இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகள் கூட உள்ளது. இதற்காக இவற்றை தமிழீழத்திற்கு எதிராக இந்தியா பயன்படுத்தும் என நினைத்து பயப்படுவதில் அர்த்தம் இருக்கிறதா?

ஆம் அது பூச்சாண்டிதான். அமெரிக்காவைக் கல்யாணம்

செய்தவர்களுக்குக் காட்டப்படுவது.

இந்திய ஆயுத தயாரிப்புகள் எப்பவுமே கொப்பிதான்...... ஆனால் உள்ளுர் தயாரிப்புத்தான்.

இப்படகு கனகாலங்களாக பிரான்ஸிடம் உள்ளது....

ஆனால் இந்தியாவில் 300 மைல் வேகத்தில் என்பதுதான்..... :o உதைக்கிதே....!? :lol: :lol:

Edited by Netfriend

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர்களுக்கும் இந்தியதமிழர்களுக்கும் இருக்கும் உறவை விரும்பாதவர்

பிரச்சார உத்தி

post-2971-1172525427_thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.