Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’

Featured Replies

’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’

image_d6d17e078a.jpgவிகாரைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது விகாரை நடவடிக்கைகளில் தலையிடவோ, தனக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

இளம் பிக்குமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிக்குகளை, அலரி மாளிகையின் இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, பிரமர் மேற்கண்டவாறு கூறினார்.

 

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 'இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்காகச் செய்யும் சதித்திட்டமாகும்' என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மதத்துடன்-அரசியல்-செய்யாதீர்கள்/150-200434

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதவாதம் இல்லாமல் ஒரு சிங்கள அரசியலா? tw_astonished:

நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :cool:

  • தொடங்கியவர்
‘விகாரைகளில் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை’
 

image_6edf613982.jpg

விகாரைகளை நிர்வகிப்பதற்கோ அல்லது விகாரைகளின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கோ, தனக்கு எவ்விதமான அதிகாரங்களும் இல்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்தார்.  

இளம் பிக்குகள் ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினருடன், அலரிமாளிகையில் நேற்று (12) இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதங்களை இழுக்க வேண்டாம். எங்களுக்கும் முடியும் என்று கூறுங்கள். நாங்களும் பௌத்தர்கள். பௌத்தர்களில் பெரும்பான்மையானோர். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கே வாக்குகளை பயன்படுத்தினர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

“மதத்துடன் அரசியல் செய்யவேண்டாம். இது, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குத் தயாராகி முன்னெடுக்கப்படும் விளையாட்டாகும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது கூறினார்.  

“விகாரைகள் தொடர்பான சட்டத்தை மாற்றுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு இல்லை. அந்தச் சட்டத்தை நாங்கள் மாற்றவும் மாட்டோம். 1931ஆம் ஆண்டு ஹன்சாட்டை எடுத்துப் பாருங்கள். இந்தச் சட்டம் தொடர்பில், அதில் எவ்வளவு நன்றாக போடப்பட்டுள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

“எனினும், ஜே.ஆர்.ஜயவர்தன காலத்தில், அறங்காவலருக்குப் பதிலாக பௌத்த நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் நியமிக்கப்பட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பௌத்தர்களின் வாக்குகளில் கூடுதலான வாக்குகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கே கிடைத்தது.  

தம்புள்ளை விகாரையை அபிவிருத்தி செய்வதற்காக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை அறிவுறுத்தியதன் பின்னரே, அங்குள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான உரிமை கல்வியமைச்சருக்கு இருக்கிறது.  

இந்த முயற்சியைச் சிதறடித்து, மதத்துடன் தொடர்புபடுத்தி எதிராளிகளினால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு, உடனடியாக நிறுத்தப்படவேண்டும்” என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது குறிப்பிட்டார். 

தம்புள்ளை ரஜமகா விகாரையை, உலக மரபுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டுமாயின், அஸ்கிரிய மகாநாயக்கர்களைச் சந்தித்து இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானமொன்றை எடுக்குமாறு தம்புள்ளை விகாரையின் தேரரர்கள் இதன்போது கேட்டுக்கொண்டனர். அவ்வாறான சந்தர்ப்பமொன்று கிட்டுமாயின், தம்புள்ளை விகாரை தொடர்பில் தற்போது தோற்றியுள்ள பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரமுடியும் என்றும் தேரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/விகாரைகளில்-தலையிடுவதற்கு-அதிகாரம்-இல்லை/175-200484

 
 
‘புது அரசமைப்பையே நாம் தயாரிக்கின்றோம்’
 

image_ad848e16ab.jpg“புது அரசமைப்பையே நாம் தயாரிக்கின்றோம்” என்று தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஒற்றையாட்சி என்ற பதத்தை யாரும் எதிர்க்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

இளம் பிக்குகள் ஒன்றியத்தின் தேரர்கள் குழுவினருடன், அலரிமாளிகையில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அதில் பங்கேற்றிருந்த தேரர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முன்னதாகக் கேள்வியெழுப்பிய தேரர் ஒருவர், “அரசமைப்பில், திருத்தம் செய்யப்படவுள்ளது. இந்த அரசமைப்பு திருத்தத்தின் ஊடாக, பௌத்தத்துக்கு இதுவரையிலும் இருக்கின்ற இடம் இல்லாமற் செய்யப்படும் என்றும், நாட்டின் ஒன்றையாட்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. இவை தொடர்பில், அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?” என, வினவினார். 

அக்கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  

“புதிய அரசமைப்புத் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒற்றையாட்சி என்ற பதத்தை எவரும் எதிர்க்கவில்லை. அதேபோல, பௌத்த மதத்துக்கு இருக்கின்ற முன்னுரிமையை யாரும் எதிர்க்கவும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பௌத்தத்துக்கான முன்னுரிமை அவ்வாறே இருக்கவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நானும் இதனையே வலியுறுத்தியுள்ளோம். அதேபோல பௌத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதுடன், ஏனைய மதங்களுக்கு எவ்விதமான பாகுபாடும் காட்டாமல் நடவடிக்கை எடுப்பதே எங்களுடைய நோக்கமாகும்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/புது-அரசமைப்பையே-நாம்-தயாரிக்கின்றோம்/175-200486

  • தொடங்கியவர்

சம்பந்தன் எதிர்க்கார்

P9-67c7bd9c5fb6d5f35c42242a4053e60804de42f5.jpg

 

பௌத்த பீடம் பிளவுபடுவதை விரும்பாத சம்பந்தன் பௌத்த மத முன்னுரிமையை எதிர்ப்பாரா;பிரதமர் ரணில் கேள்வி

(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கும் பெளத்த மதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு இது­வரை எவரும் எதிர்ப்­பினை வெளி­யி­ட­வில்லை. ஆகையால் எக்­கா­ரணம் கொண்டும் ஒற் ­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­குள்ள முன்­னு­ரி­மை­யையும் நாம் நீக்­க­மாட்டோம் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின்போது அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த மகா­நா­யக்க பீடத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்டபோது அதற்கு எதி­ராக இருந்த எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் பெளத்த  மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தனை எதிர்ப்­பாரா என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.மேலும் அர­சி­ய­லுக்­காக மதவிவ­கா­ரங்களை  கையில் எடுக்­கா­தீர்கள்.  

மத விவ­கா­ரங்­களை கிளப்பி விட்டு அதனை அர­சி­ய­லாக்க வேண்டாம். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மைய­மாக வைத்து நாட்டில் குழப்பம் ஏற்­ப­டுத்தும் விளை­யாட்டை இத்­துடன் நிறுத்­தி­வை­யுங்கள் என்றும் பிர­தமர் கோரினார்.

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான விட­ய­தா­னங்கள் குறித்து இளைஞர் பிக்­குகள் முன்­னணி நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன்­போது பெளத்த பிக்­குகள் தற்­போ­தைய நாட்டின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பிர­த­ம­ரிடம் மாறி மாறி கேள்வி கனை­களை தொடுத்­தனர். இந்த சந்­தர்ப்­பத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது இளைஞர் பிக்கு முன்­ன­ணியின் தலைவர் வெலி­மடை சந்­தி­ர­ரத்ன தேரர் கேள்வி எழுப்­பு­கையில்  தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றதா? உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மை­யையும் நீக்­கப்­போ­வ­தாக பெளத்த மக்கள் மத்­தியில் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.இது உண்­மையா? ஆகவே அர­சாங்கம் இந்த காரி­யங்­களை செய்ய போகின்­றதா? அத்­துடன் தம்­புள்ளை விகாரை பிறி­தொரு சர்ச்சை கார­ண­மாக மூடப்­பட்­டுள்­ளது. ஏன் பெளத்த விகா­ரை­க­ளுக்கு பூட்டு போடு­கின்­றீர்கள்? என கேள்வி எழுப்­பினார். 

அத்­துடன் அந்த பிக்­குகள் முன்­ன­ணியின் செய­லாளர் வெல்­லம்­பிட்­டிய அமல ரத்ன தேர்ர் கேள்வி எழுப்பும் போது, வடக்கு கிழக்கில் தொல்­பொ­ரு­ளியல் இடங்கள் அழிக்­கப்­ப­டு­வது உண்­மையா? தம்­புள்ளை விகா­ரையின் உண்­டியல் பிரச்­சினை விகாரை மூடப்­ப­டு­வ­தாயின் கோயில் , பள்­ளி­வா­ச­லிகள் இப்­பி­ரச்­சினை இல்­லையா? என கேள்வி எழுப்­பினார்.

இந்த கேள்­வி­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி மற்றும் தொல்­பொ­ரு­ளியல் துறை அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் ஆகிய இரு­வரும் பதில் வழங்­கினர்.  எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளிக்­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்பு தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு எப்­படி வரும் என்­பது யாருக்கும் தெரி­யாது. குறிப்­பாக எனக்கே தெரி­யாது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சி நீக்­கப்­போ­வ­தா­கவும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மை­யையும் இல்­லாமல் ஆக்­கப்­போ­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆனால் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மை­யையும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் நீக்­கு­மாறு இது­வரை யாரும் கோர­வில்லை.  

ஒற்­றை­யாட்­சிக்கும் பெளத்த மத முன்­னு­ரி­மைக்கும் இது­வரை எவரும் எதிர்ப்பு வெளி­யி­ட­வு­மில்லை. எக்­கா­ரணம் கொண்டும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நாம் நீக்­க­மாட்டோம். அத்­துடன் ஒற்­றை­யாட்­சியை நாம் இல்­லாமல் ஆக்­க­வு­மாட்டோம். எனவே பெளத்த மத முன்­னு­ரி­மைக்கும் ஒற்­றை­யாட்­சிக்கும் எவரும் எதிர்ப்­பில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நீக்­க­மாட்டோம் என உறு­தி­யான தீர்­மானம் எடுத்­துள்ளோம். மேலும் இந்த தீர்­மா­னங்­க­ளுக்கு இரு பிர­தான கட்­சி­களும் பூரண இணக்கம் வழங்­கி­யுள்­ளன. மேலும் ஏனைய மதங்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய உரி­மை­க­ளையும் நாம் வழங்­குவோம். அதில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது.

அத்­துடன் தற்­போது தம்­புள்ளை விகா­ரையை மைய­மாக கொண்ட பிரச்­சினை தொடர்பில் ஊட­கங்கள் பல செய்­தி­களை வெளி­யிட்ட வண்­ண­முள்­ளன. எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. அதே­போன்று தலதா மாளி­கைக்கு தாக்­குதல் நடத்­தப்­படும் என அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. அர­சாங்­கத்தின் அனு­ச­ர­னை­யுடன் சங்க பீடம் இரண்­டாக பிள­வுப்­ப­டுத்­தப்­பட்­டது. இது பெளத்த தர்­மத்­திற்கு இழைக்கும் பெரும் குற்­ற­மாகும். இந்த சந்­தர்ப்­பத்தில் பெளத்த மதம் மீது அக்­கறை கொண்ட ஊட­கங்கள் என்ன செய்­தது? அனைத்து ஊட­கங்­களும் அமைதி காத்­தன.

இந்த சந்­தர்ப்­பத்தில் நான் பல தரப்­பினை சந்­தித்து பேசினேன். இதன்­போது தற்­போ­தைய எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை அப்­போது கண்டு பேசி சங்­க­பீ­டத்தின் நிலைமை குறித்து என்ன செய்­வது என்று அவ­ரிடம் கோரினேன். இத­னை­ய­டுத்து சங்­க­பீ­டத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை தொடர்பில் அவர் கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்டார். இதன்­போது பெளத்த பற்று ஊட­கங்கள் அமை­தி­யாக இருந்­தன.

எனவே சங்க பீடத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­மைக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தனை எதிர்ப்­பரா? அவர் எதிர்ப்­பா­ரென்று நான் நினைக்­க­வில்லை. பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தனை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­க­வில்லை.

அத்­துடன் தற்­போது தம்­புள்ளை விகாரை மூடப்­பட்­டமை தொடர்­பிலும் உண்­டி­ய­லுக்கு சீல் வைக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் உண்­மைக்கு புறம்­பான தக­வல்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. தம்­புள்ளை விகா­ரைக்கு வருகை தரும் வெளி­நாட்டு சுற்­றுலா பிர­யா­ணி­க­ளிடம் வழங்­கப்­படும் டிக்கெட் விநி­யோ­கத்தில் இடம்­பெற்ற மோசடி குறித்தே விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றன.

 அத்­துடன் குறித்த விகா­ரைகள் முழு­மை­யாக சேத­ம­டைந்­துள்­ளன. இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் தம்­புள்ளை விகாரை உலக மர­பு­ரிமை அந்­தஸ்தை இழந்து விடும். தம்­புள்ளை விகாரை உலக மர­பு­ரி­மை­யி­லி­ருந்து நீங்­கு­வ­தனை பிக்­குகள் விரும்­பு­கின்­ற­னரா? அப்­ப­டி­யாயின் இது தொடர்பில் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடத்­திடம் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் தீர்­மா­னிப்போம். சங்க பீடம் மர­பு­ரிமை அந்­தஸ்தை நீக்­கு­மாறு கோரினால் அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்போம். அது தொடர்பில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது.

பெளத்த மதத்­திற்கு அச்­சு­றுத்தல் என்ற கோஷம் எழுப்­பி­ய­மை­யினால் பெளத்த மதத்தின் பிரச்­சி­னைகள் மறைக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான கோஷம் வர­லாற்றில் இருந்து பேசுப்­பொ­ரு­ளா­கவே உள்­ளது. பெளத்த விகா­ர­ரை­களை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர் ஜெய­வர்­த­னவே புன­ர­மைத்தார்.அதன்­பின்னர் விகாரை புன­ர­மைப்­புகள் உரிய வகையில் இடம்­பெ­ற­வில்லை. 

அத்­துடன் தற்­போது தம்­புள்ளை விகாரை மூடப்­ப­ட­வில்லை.எமக்கு விகாரைகள் நிர்வகிப்பதற்கு அதிகாரம் கிடையாது. உண்டியலை சீல் வைத்தது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்திலாகும். நாம் எந்த தீர்மானம் எடுப்பதானாலும் அதனை மறைத்து செய்ய மாட்டோம். யுனெஸ்கோ அமைப்பிற்கு நாம் அறிக்கை வழங்க வேண்டியுள்ளது. ஆகவே ஏனைய விகாரைகள் தொடர்பில் அறிக்கை தயாரித்து விட்டோம். மரபுரிமை விகாரையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. மதங்களை தூண்ட வேண்டாம். மத விவகாரங்களை தூண்டி அரசியல் செய்ய வேண்டாம்.

ஆகவே அரசியலுக்காக மத விவகாரங்களை தூண்டி விட்டு மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை கிழப்பி விட்டு அதனை அரசியலாக்க வேண்டாம். உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையாக வைத்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் விளையாட்டை இத்துடன் நிறுத்திவையுங்கள் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-13#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.