Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?

Featured Replies

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

 
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு?
 
லண்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடத்தை பிடித்த இந்திய அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பதம் பார்த்து 2-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது. இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய அணி அதில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை வரலாறு படைக்கும் உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டன் மிதாலி ராஜ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 392 ரன்), முந்தைய ஆட்டத்தில் 171 ரன்கள் குவித்த சூறாவளி ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு அதிகமாக நிலவுகிறது. பூனம் ரவுத்தும் (295 ரன்), மந்தனாவும் (232 ரன்) கடந்த சில ஆட்டங்களில் சோபிக்கவில்லை. மந்தனா இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக்கில் 90 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற்றால் அது அணிக்கு வலுவூட்டுவதாக அமையும்.

இந்திய அணி மகுடம் சூடினால் உலக கோப்பையை வென்ற முதல் ஆசிய அணி, மொத்தத்தில் 4-வது அணி என்ற பெருமையை பெறும். 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீராங்கனைகளில் மிதாலி ராஜ், வேகப்பந்து வீச்சாளர் கோஸ்வாமி ஆகியோர் இந்த சீசனிலும் களத்தில் இருக்கிறார்கள். பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற மகத்தான சாதனைகளுடன் வலம் வரும் இவர்களுக்கு இது தான் கடைசி உலக கோப்பையாகும். அதனால் கோப்பையை உச்சிமுகர்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

பந்து வீச்சில் இந்தியாவின் பலம் சுழல் தான். இந்த உலக கோப்பையில் சுழற்பந்து வீச்சு மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (41 விக்கெட்) அணி என்ற பெருமை இந்தியாவையே சாரும். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் நம்பிக்கை நாயகியாக மின்னுகிறார்.

மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க லீக்கில் இந்தியாவிடம் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதன் பிறகு வரிசையாக வெற்றிகளை குவித்த இங்கிலாந்து அணி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. பியூமோன்ட் (387 ரன்), கேப்டன் ஹீதர் நைட் (363 ரன்), விக்கெட் கீப்பர் சாரா டெய்லர் (351 ரன்) ஆகியோர் தான் இங்கிலாந்து அணியின் தூண்கள். இவர்களை சீக்கிரம் சாய்த்து விட்டால் இங்கிலாந்தின் முதுகெலும்பை உடைத்து விடலாம்.

இந்த உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 377 ரன்களும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 373 ரன்களும் குவித்து இங்கிலாந்து மலைக்க வைத்தது. நடப்பு தொடரில் சராசரியாக அதிக ரன்ரேட்டை (5.79) கொண்டுள்ள அணி இங்கிலாந்து தான். உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். அது மட்டுமின்றி லீக்கில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வெறியில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்துடன் இருப்பதை ஹீதர் நைட்டும் ஒப்புக்கொண்டார். அதனால் இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. மைதானத்தில் 27 ஆயிரம் ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 62 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 26-ல் இந்தியாவும், 34-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 10 ஆட்டங்களில் 4-ல் இந்தியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி கண்டு இருக்கின்றன.

மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் வெற்றி யாருக்கு என்பதை கணிப்பது கடினம். ஆனால் சூழ்ந்திருக்கும் உச்சக்கட்ட நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.4¼ கோடியும், தோற்கும் அணிக்கு ரூ.2 கோடியே 12 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: மந்தனா, பூனம் ரவுத், மிதாலி ராஜ் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ் அல்லது எக்தா பிஷ்ட்,

இங்கிலாந்து: வின்பீல்டு, டானி பியூமோன்ட், சாரா டெய்லர், ஹீதர் நைட் (கேப்டன்), நதாலி ஸ்சிவர், பிரான் வில்சன், கேத்ரின் புருன்ட், ஜெனி குன், லாரா மார்ஷ், அன்யா சிரப்சோலே, அலெக்ஸ் ஹர்ட்லி.

இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/23080906/1098023/India-v-England-today-clash-in-finals-at-ICC-WWC-2017.vpf

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை வருசமா இதுவும் நடக்குது.. எவராவது அக்கறை எடுத்துப் பார்க்கிறியளா..?! சினிமால வாற நடிகைகள் பற்றிய கிசு கிசுன்னா.. விழுந்தடிச்சுப் பார்க்கிறாங்ய்யா..!:rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

இத்தனை வருசமா இதுவும் நடக்குது.. எவராவது அக்கறை எடுத்துப் பார்க்கிறியளா..?! சினிமால வாற நடிகைகள் பற்றிய கிசு கிசுன்னா.. விழுந்தடிச்சுப் பார்க்கிறாங்ய்யா..!:rolleyes:tw_blush:

Bild könnte enthalten: 1 Person, Text

:grin: :grin: tw_lol:  :D:  tw_love:

  • தொடங்கியவர்
இங்கிலாந்து
975.png&h=42&w=42
74/3 (19.0/50 ov)
  • தொடங்கியவர்

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு நிர்ணயம் #WWC17Final

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.  இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு நிலையான தொடக்கம் கிடைத்தது. ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் பறிக்கொடுத்து விழுந்தது. இதனால் ரன் குவிப்பில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டாலும், பிரான் வில்சன் மற்றும் டெய்லர் பார்ட்னர் ஷிப் அந்த அணிக்கு கைக்கொடுத்தது. 

ஜுலன் கோஸ்வாமி


இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. பிரான் வில்சன் 51, டெய்லர் 45 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில், ஜுலன் கோஸ்வாமி மூன்று விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பூனம் யாதவ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

 

இதையடுத்து 229  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது. 

114/2 (29.0/50 ov, target 229)
 
இந்தியா
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெற்றி 9 ஓட்டங்களால்.

உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றியது. tw_blush:

  • தொடங்கியவர்

மகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்துபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

தனது வெற்றி இலக்கான 229 ரன்களை நோக்கி பேட் செய்ய தொடங்கிய இந்தியா இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மித்தாலி ராஜ் பொறுப்பாக விளையாடினாலும் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.

அரைச்சதம் எடுத்த பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅரைச்சதம் எடுத்த பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர்

அரைச்சதம் எடுத்த பூனம் ராவுத், ஹர்மன்ப்ரீத் கவுர்

இரண்டு விக்கெட்டுக்களை இந்தியா இழந்த நிலையில், பூனம் ராவத் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நேர்த்தியாகவும், அவ்வப்போது அடித்தாடியும் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

86 ரன்கள் எடுத்த பூனம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption86 ரன்கள் எடுத்த பூனம்

இரண்டு சிக்ஸர்களின் உதவியோடு 80 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய பூனம் ராவத், மிக சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வேதா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து

இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா 219 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 9 ரன்கள் வித்தியாசாத்தில் இறுதியாட்டத்தில் வென்ற இங்கிலாந்து அணி நான்காவது முறையாக மகளிர் உலக கோப்பையை வென்றது.

இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்குபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட், இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.

வின்ஃபீல்ட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி காயக்வாட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

அரைச்சதம் அடித்த ஸ்கிவர்படத்தின் காப்புரிமைICC Image captionஅரைச்சதம் அடித்த ஸ்கிவர்

துல்லியமான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி ஒரு பக்கம் விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்தாலும், அந்த அணியின் ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோர் நன்கு அடித்தாடினர்.

துல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதுல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமி

ஆனால், இந்திய பந்துவீச்சாளரான ஜுலான் கோஸ்வாமியின் துல்லியமான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. தான் பந்துவீசிய 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை ஜுலான் கோஸ்வாமி எடுத்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 229 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

http://www.bbc.com/tamil/sport-40699888

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.