Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’

Featured Replies

‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’
 

- எஸ்.நிதர்ஷன்

"நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழில் நடாத்தும் 13 ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன் போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே சம்மந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தலை-நிமிர்ந்து-வாழ-வேண்டும்/71-201898

  • தொடங்கியவர்

புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவுமாறு கோரிக்கை

 

புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவுமாறு கோரிக்கை

 

 
 
புதிய அரசியல் சாசனம் வெற்றியளிக்க உதவ வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் புலம்பெயர் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13வது உலக தமிழராராச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (06) யாழில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

1974ம் ஆண்டு உலகத் தமிழராச்சி மாநாடு பரபரப்பான சூழலில் நடைபெற்றது. தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று அன்றைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்னர் 1977ம் ஆண்டு தமிழ் பண்பாட்டு மாநாடு முதன்முதலாக தமிழகத்தில் நடைபெற்றது.

நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் ஒரு குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய பொக்கிஷத்திற்கு உரித்தானவர்கள் அவற்றினைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை.

இலங்கையில் வாழும் தமிழர்கள் பல்வேறு கஸ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

50 வீதமான மக்கள் இங்கு வாழவில்லை. ஏறக்குறைய 15 இலட்சம் மக்கள் உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.

கலவரங்களின் காரணமாகவும், தாக்கப்பட்டதன் காரணமாகவும், தமது சொந்த பிரதேசங்களில் வாழ அவர்களால் முடியாதுள்ளது.

தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று புதிய பாதையில் செல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். புதிய அரசியல் சாசனத்தினை உருவாக்கி அதன் மூலம் சமத்துவமும் சமாதானமும் ஏற்படுத்தப்படவுள்ளன.

அரசியல் சாசனம் வெற்றி பெற வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து, சுயகௌரவத்துடன், சுய அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழக்கூடிய வகையில், அந்த இலக்கை அடைய வேண்டிய கடமை எமது அனைவருக்கும் உரியது.

நாங்கள் அனைவரும் தமிழர்கள். அநீதியாக எதையும் கேட்கக் கூடாது. நீதியாக, நீதியின் அடிப்படையில் உரிமையின் அடிப்படையில் பெற வேண்டியவற்றினைப் பெற வேண்டும்.

இந்த மாநாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும்.

எம் மத்தியில் உள்ள ஒற்றுமை பலமடைய வேண்டும். எமது இனம் உலகத்தில் ஒரு மிகவும் கௌரவமான இடத்தினை அடைந்துள்ளது. அவற்றினைப் பாதுகாக்க வேண்டும். ஊக்குவிக்க வேண்டும். வளர்க்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=94186

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’
 

புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

புதிய அரசியல் சாசனம் கண்டி தலதாமாளிகையின் தாலாட்டில் ஆழ்ந்த உறக்கம் கொண்டுள்ளதே சம்பந்தன் ஐயா...! நீங்கள் அங்கு தேவாரம் பாடச் செல்வதாகச் செய்திவந்ததே என்னாச்சு. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

நாங்கள் அனைவரும் தமிழர்கள். அநீதியாக எதையும் கேட்கக் கூடாது. நீதியாக, நீதியின் அடிப்படையில் உரிமையின் அடிப்படையில் பெற வேண்டியவற்றினைப் பெற வேண்டும்.

35 வருசத்துக்கு முந்தி எல்லாம் நீதி நியாயமாய்த்தானே கேட்டவையள்/ கேட்டனாங்கள். அப்ப என்ன குறை/பிழை நடந்தது? 
எவ்வளவுத்துக்கு சகுனி வேலை செய்யேலுமோ அவ்வளவுத்துக்கு  செய்து போட்டு இப்ப நீதியாய் கேட்கோணுமாம்...நேர்மையாய் கேட்கோணுமாம்.tw_rage:
மண்ணாங்கட்டி.tw_angry:
எல்லாம் காலமடா.:(...:(....:(....

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தேர்தல் என்கின்ற மந்திரம் செய்யிற வேலை. அவரை அப்பிடிப் பேச வைக்குது.

  • தொடங்கியவர்

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாகவே சமத்­துவம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும்

 

புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்
(எம்.நியூட்டன்)

நாட்டில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டுள்ள நிலையில் புதிய பாதையில் செல்­வ­தற்கு நாங்கள் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக் கிறோம். இதற்­காக புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கி அதன்

மூல­மாக நாட்டில் சமத்­து­வத்தை, சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­க­வேண்டும் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின்

தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

உல­கத்­தமிழ் பண்­பாட்டு இயக்கம் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து நடத்தும் 13 ஆவது சர்­வ­தேச மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று யாழ்.ரில்கோ விருந்­தினர்

விடு­தியில் நடை­பெற்­றது. அதில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­ய­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

மேலும் அவர் அங்கு உரை­யாற்­று­கையில்,

உலகத் தமிழ் பண்­பாட்டு இயக்கம் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து 13 ஆவது சர்­வ­தேச மாநாட்டை இம்­முறை இங்கு கொண்­டா­டு­கின்­றது. 1974ஆம் ஆண்டு தமி­ழா­ராய்ச்சி மாநாடு யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்­றது. அந்த வருடம் ஒரு முடி­வெ­டுக்­கப்­பட்­டது. தமிழ் பண்­பாட்டு இயக்கம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்டும் என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு முத­லா­வது மாநாடு தமிழ்­நாட்டில் நடை­பெற்­றது. அதனைத் தொடர்ந்து பல்­வேறு நாடு­களில் நடை­பெற்று வரு­கின்­றது. கன­டாவில் இதன் தலை­மை­யகம் அமைந்­துள்­ளது. ஒழுங்­காக இது­ந­டை­பெற்று வரு­கி­றது. எங்­க­ளு­டைய இலட்­சியம் கலை கலா­சாரம் பண்­பாடு எமது பழக்­க­வ­ழக்­கங்­களை பாது­காக்­க­வேண்­டி­யது மற்றும் வளர்க்க வேண்­டி­யது எங்­க­ளு­டைய கடமை.

நாங்கள் உல­கத்தில் எப்­பா­கத்தில் வாழ்ந்­தாலும் நாம் எல்­லோரும் தமி­ழர்கள் என்ற வகையில் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்கள். எங்­க­ளுக்­கி­டையில் எவ்­வி­த­மான வேற்­று­மை­களும் இல்லை. நாங்கள் பாரம்­ப­ரி­ய­மான சொத்­துக்­கு­ரி­ய­வர்கள். அதனை வளர்க்க வேண்­டி­யது பாது­காக்­க­வேண்­டி­யது எங்­க­ளு­டைய கடமை. இன்­றைய மாநாட்­டிற்கு வெ ளிநா­டு­களில் இருந்து பலர் வந்­துள்­ளீர்கள் உங்­களை நாங்கள் வர­வேற்­ப­துடன் பாராட்­டுக்­க­ளையும் தெரி­விக்­கின்றோம்.

பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் தமி­ழர்கள் என்ற அடிப்­ப­டையில் தமிழ்ப் பண்­பாட்டு இயக்­கத்­தினால் ஒரு நிகழ்வு நடக்­கின்­றது என்­ப­தற்­காக அந்த இயக்­கத்தில் பங்­கு­பற்­ற­வேண்டும். பங்­க­ளிப்­புச்­செய்­ய­வேண்டும் என்ற தீர்­மா­னத்­துடன் இங்கு வந்­துள்­ளீர்கள். தமிழ்ப் பண்­பாடு கலை கலா­சா­ரங்­களை பாது­காக்­க­வேண்டும் என்­ப­தற்­காக இங்கு வந்­துள்­ளீர்கள் இதற்­காக பெருமை அடை­கின்றோம்.

இலங்­கையில் வாழ்­கின்ற தமி­ழர்கள் பல்­வேறு கஸ்­டங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளார்கள். எமது மக்­களில் 50 வீத­மா­ன­வர்கள் இங்கு வாழ­வில்லை. ஏறத்­தாழ 15 இலட்சம் மக்கள் வெ ளிநா­டுகள் வாழ்­கின்­றார்கள். இவர்கள் கல­வ­ரங்கள் கார­ண­மாக தாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக தங்­க­ளு­டைய சொந்த பிர­தே­சங்­களை விட்டு வெ ளியே­றி­யுள்­ளார்கள்.

தற்­போது இந்த நாட்டில் ஒரு ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு புதிய பாதையில் செல்­வ­தற்கு நாங்கள் முயற்­சித்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். ஒரு புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்கி அதன் மூல­மாக நாட்டில் சமத்­து­வத்தை சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கின்றோம். அது கைகூ­ட­வேண்டும். வெற்­றி­பெ­ற­வேண்டும். அதில் உங்கள் எல்­லோ­ருக்கும் பங்கு இருக்­கி­றது. தமி­ழர்கள் என்ற வகையில் இலங்­கையில் வாழும் தமி­ழர்கள் தலை­நி­மிர்ந்து சுய­ம­ரி­யா­தை­யுடன் கௌர­வத்­துடன் சம அந்­தஸ்­துடன் இந்த நாட்டில் வாழக்­கூ­டிய வகையில் அதை அடை­ய­வேண்­டிய உரிமை எங்­க­ளுக்கு உரி­யது.

சமீ­பத்தில் சிங்­கப்­பூரின் வெ ளிவி­வ­கார அமைச்சர் இலங்கை வந்­தி­ருந்­த­போது அவரை சந்­தித்து கலந்­து­ரை­யாட வாய்ப்பு கிடைத்­தது. அவர் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்டு முத­ல­மைச்­ச­ரையும் சந்­தித்­துள்ளார். இதன்­போது சிங்­கப்­பூரின் வெ ளிவி­வ­கார செய­லா­ள­ராக இருந்த இரா­ஜ­ரட்ணம் பிறந்து வளர்ந்த வீடு யாழ்ப்­பா­ணத்தில் உள்­ளது என்றும் அந்த வீட்தைத் தான் பார்­வை­யிட்­ட­தா­கவும் தெரி­வித்தார்.

அதி­லி­ருந்து எமது தொடர்­பு­களை நீங்கள் புரிந்­து­கொள்­ளலாம். ஆகையால் நாங்கள் எல்­லோரும் தமி­ழர்கள். நாங்கள் அநீ­தியை கற்­கக்­கூ­டாது. ஆனால் நீதியின் அடிப்­ப­டையில் பெறக்­கூ­டி­யதை பெற­வேண்டும். அது எமது பிறப்­பு­ரிமை. அதைப் பெறு­வ­தற்கு அனை­வரும் உத­வ­வேண்டும். இங்கு வாழும் மக்கள் நீண்­ட­கால யுத்­தத்தின் பின்னர் பல்­வேறு கஸ்­டங்கள் பிர­ள­யங்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரு­கி­றார்கள். இந்த மக்­க­ளுக்கு இயன்­ற­வரை உத­வி­களைச் செய்­ய­வேண்டும்.

பல்­லா­யி­ரக்­கண்­கான பெண்கள் கண­வன்­மாரை இழந்து பெற்­றோரை இழந்து சகோ­த­ரர்­களை இழந்து பல கஸ்டங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பல துன்பங்களை சுமந்துள்ளார்கள். இவ்விதமான மக்களுக்கு உதவவேண்டியது எமது கடமை. அவ்விதமான பணிகளில் நாங்கள் எல்லோரும் ஈடுபடவேண்டும். எங்களால் இயன்றதை செய்ய வேண்டும்.

இத்தகைய மாநாடுகள் தொடர்ந்தும் நடைபெறவேண்டும். எங்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமை இன்னும் பலமடையவேண்டும். எமது இனம் உலகத்தில் ஒரு பக்குவமான இடத்தை அடைந்துள்ளது. அதனை நாங்கள் பாதுகாக்கவேண்டும். வளர்க்கவேண்டும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-07#page-1

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நவீனன் said:

 

இத்தகைய மாநாடுகள் தொடர்ந்தும் நடைபெறவேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-07#page-1

நீங்கள் மேடை ஏறவேண்டும் ,நாங்கள் கைதட்ட வேண்டும்.....அவ்வளவுதானே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.